Skip to main content
வாழ வைக்கும் காதல்


பண்டிகை நாளொன்றில்
பார்த்துச் சிரித்தவளோடு
பேசுவதெப்படி என
அனுபவப்பட்டவர்களிடம்
ஆலோசனை கேட்டபடிதான்
ஆரம்பித்தேன் நானும் !


ஒரு வெள்ளிக்கிழமையின்
அதிகாலையில்
அலைந்து திரிந்து
அவள் இல்லம் கண்டுபிடித்த போது ,
கோலமிட்டுக் கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்து
சிலிர்த்து சிவந்து
சிரித்துவிட்டுச் சென்றாள் !
அவள் இட்டிருந்த
வண்ணக்கோலத்தை விடவும்
அழகாக இருந்தது
பாதவிரலால் அவள் இட்ட
வெட்கக் கோலம் !


இல்லாத கல்லூரிக்கு
வராத பேருந்திற்காய்
நிறுத்தத்தில் நானும்
நின்றிருப்பேன்
அவளுக்கான
பேருந்து வரும்வரை !


அவள் ,
கலந்த கூந்தலை
சரிசெய்யும் சாக்கில்
கடைக்கண்ணால்
எனைப் பார்த்து
குற்றுயிரைக் குதறி எடுப்பாள் !


என் மனதை
ஆனந்தத்தில்
அலைய வைக்கவே
காற்று அவள் கூந்தலை - அடிக்கடி
கலைய வைக்கும் !


ஒரு நாள் ,
கண்களால் என்னைக்
கவனித்துக் கொண்டே - யாரிடமோ
எண்களால் பேசினாள் ! நான் ,
குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல்
பண்களால் நிரம்பியது மனம்
அன்றைய தினம் !


அதன் பிறகு
ஒவ்வொரு பொழுதிற்கும்
ஒவ்வொரு வணக்கம் சொல்லி ,
வாழ்க்கை ,
வணக்கங்களுக்கு
இணக்கமானது !


தினந்தோறும் வருகிற
" தினங்களுக்காக "
திரும்பத் திரும்ப
வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருந்தோம் !


ஒருநாள் ,
அவள் கண்களைப் பார்த்து நான்
காதலைச் சொன்ன போது
தலை குனிந்து சென்றுவிட்டாள்
மௌனமாக !
மறுநாளே ,
பச்சை சுடிதாரில் வந்து
பிச்சையாய் நான்கேட்ட காதலை
இச்சையோடு ஈந்து சென்றாள் !


அதன் பிறகு
திரையரங்குகளில் நாங்கள்
ஒளித்திரைகளை
கவனித்ததை விட எங்கள்
விழித்திரைகளை
கவனித்ததே அதிகம் !


எத்தனையோ
இரவுப் பேச்சுக்களில் ,
அவள் அங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போனதறியாமல்
நானும் இங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போயிருக்கிறேன் !


அவள்
புன்னகையைப்
பார்த்தவுடனே
பொடிப் பொடியாகின்றன
எனது காத்திருப்பின்
அத்தனை கோபங்களும் !


அவளுக்கும் எனக்கும்
ஒரே அலைநீளம் இருப்பதன்
ஒரே பிரச்சனை ,
அலைபேசியில்
நான் அழைக்கும் அதேசமயம்
அவளும் அழைத்துத் தொலைப்பது தான் !


மேலதிகாரியிடம் நான்
திட்டு வாங்கிய
நாட்கள் எல்லாம் அநேகமாக
அவள் எனக்கு
காலை வணக்கம்
சொல்லாத நாட்களாயிருக்கும் !


பூங்காவில் ஓர்நாள் ,
காதல் கைகூடுமா என
கண்ணீரோடு என்னிடம்
கவலைப் பட்டவளிடம்
நான் சொன்னேன் ,
" நம் உயிரை ஊற்றி
நாம் வளர்த்த காதல்
நம்மை வாழ வைக்காமலா போய்விடும் ! " என்று ...



Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...