வாழ வைக்கும் காதல்
பண்டிகை நாளொன்றில்
பார்த்துச் சிரித்தவளோடு
பேசுவதெப்படி என
அனுபவப்பட்டவர்களிடம்
ஆலோசனை கேட்டபடிதான்
ஆரம்பித்தேன் நானும் !
ஒரு வெள்ளிக்கிழமையின்
அதிகாலையில்
அலைந்து திரிந்து
அவள் இல்லம் கண்டுபிடித்த போது ,
கோலமிட்டுக் கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்து
சிலிர்த்து சிவந்து
சிரித்துவிட்டுச் சென்றாள் !
அவள் இட்டிருந்த
வண்ணக்கோலத்தை விடவும்
அழகாக இருந்தது
பாதவிரலால் அவள் இட்ட
வெட்கக் கோலம் !
இல்லாத கல்லூரிக்கு
வராத பேருந்திற்காய்
நிறுத்தத்தில் நானும்
நின்றிருப்பேன்
அவளுக்கான
பேருந்து வரும்வரை !
அவள் ,
கலந்த கூந்தலை
சரிசெய்யும் சாக்கில்
கடைக்கண்ணால்
எனைப் பார்த்து
குற்றுயிரைக் குதறி எடுப்பாள் !
என் மனதை
ஆனந்தத்தில்
அலைய வைக்கவே
காற்று அவள் கூந்தலை - அடிக்கடி
கலைய வைக்கும் !
ஒரு நாள் ,
கண்களால் என்னைக்
கவனித்துக் கொண்டே - யாரிடமோ
எண்களால் பேசினாள் ! நான் ,
குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல்
பண்களால் நிரம்பியது மனம்
அன்றைய தினம் !
அதன் பிறகு
ஒவ்வொரு பொழுதிற்கும்
ஒவ்வொரு வணக்கம் சொல்லி ,
வாழ்க்கை ,
வணக்கங்களுக்கு
இணக்கமானது !
தினந்தோறும் வருகிற
" தினங்களுக்காக "
திரும்பத் திரும்ப
வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருந்தோம் !
ஒருநாள் ,
அவள் கண்களைப் பார்த்து நான்
காதலைச் சொன்ன போது
தலை குனிந்து சென்றுவிட்டாள்
மௌனமாக !
மறுநாளே ,
பச்சை சுடிதாரில் வந்து
பிச்சையாய் நான்கேட்ட காதலை
இச்சையோடு ஈந்து சென்றாள் !
அதன் பிறகு
திரையரங்குகளில் நாங்கள்
ஒளித்திரைகளை
கவனித்ததை விட எங்கள்
விழித்திரைகளை
கவனித்ததே அதிகம் !
எத்தனையோ
இரவுப் பேச்சுக்களில் ,
அவள் அங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போனதறியாமல்
நானும் இங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போயிருக்கிறேன் !
அவள்
புன்னகையைப்
பார்த்தவுடனே
பொடிப் பொடியாகின்றன
எனது காத்திருப்பின்
அத்தனை கோபங்களும் !
அவளுக்கும் எனக்கும்
ஒரே அலைநீளம் இருப்பதன்
ஒரே பிரச்சனை ,
அலைபேசியில்
நான் அழைக்கும் அதேசமயம்
அவளும் அழைத்துத் தொலைப்பது தான் !
மேலதிகாரியிடம் நான்
திட்டு வாங்கிய
நாட்கள் எல்லாம் அநேகமாக
அவள் எனக்கு
காலை வணக்கம்
சொல்லாத நாட்களாயிருக்கும் !
பூங்காவில் ஓர்நாள் ,
காதல் கைகூடுமா என
கண்ணீரோடு என்னிடம்
கவலைப் பட்டவளிடம்
நான் சொன்னேன் ,
" நம் உயிரை ஊற்றி
நாம் வளர்த்த காதல்
நம்மை வாழ வைக்காமலா போய்விடும் ! " என்று ...
பண்டிகை நாளொன்றில்
பார்த்துச் சிரித்தவளோடு
பேசுவதெப்படி என
அனுபவப்பட்டவர்களிடம்
ஆலோசனை கேட்டபடிதான்
ஆரம்பித்தேன் நானும் !
ஒரு வெள்ளிக்கிழமையின்
அதிகாலையில்
அலைந்து திரிந்து
அவள் இல்லம் கண்டுபிடித்த போது ,
கோலமிட்டுக் கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்து
சிலிர்த்து சிவந்து
சிரித்துவிட்டுச் சென்றாள் !
அவள் இட்டிருந்த
வண்ணக்கோலத்தை விடவும்
அழகாக இருந்தது
பாதவிரலால் அவள் இட்ட
வெட்கக் கோலம் !
இல்லாத கல்லூரிக்கு
வராத பேருந்திற்காய்
நிறுத்தத்தில் நானும்
நின்றிருப்பேன்
அவளுக்கான
பேருந்து வரும்வரை !
அவள் ,
கலந்த கூந்தலை
சரிசெய்யும் சாக்கில்
கடைக்கண்ணால்
எனைப் பார்த்து
குற்றுயிரைக் குதறி எடுப்பாள் !
என் மனதை
ஆனந்தத்தில்
அலைய வைக்கவே
காற்று அவள் கூந்தலை - அடிக்கடி
கலைய வைக்கும் !
ஒரு நாள் ,
கண்களால் என்னைக்
கவனித்துக் கொண்டே - யாரிடமோ
எண்களால் பேசினாள் ! நான் ,
குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல்
பண்களால் நிரம்பியது மனம்
அன்றைய தினம் !
அதன் பிறகு
ஒவ்வொரு பொழுதிற்கும்
ஒவ்வொரு வணக்கம் சொல்லி ,
வாழ்க்கை ,
வணக்கங்களுக்கு
இணக்கமானது !
தினந்தோறும் வருகிற
" தினங்களுக்காக "
திரும்பத் திரும்ப
வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருந்தோம் !
ஒருநாள் ,
அவள் கண்களைப் பார்த்து நான்
காதலைச் சொன்ன போது
தலை குனிந்து சென்றுவிட்டாள்
மௌனமாக !
மறுநாளே ,
பச்சை சுடிதாரில் வந்து
பிச்சையாய் நான்கேட்ட காதலை
இச்சையோடு ஈந்து சென்றாள் !
அதன் பிறகு
திரையரங்குகளில் நாங்கள்
ஒளித்திரைகளை
கவனித்ததை விட எங்கள்
விழித்திரைகளை
கவனித்ததே அதிகம் !
எத்தனையோ
இரவுப் பேச்சுக்களில் ,
அவள் அங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போனதறியாமல்
நானும் இங்கு
உம் கொட்டியபடியே
உறங்கிப் போயிருக்கிறேன் !
அவள்
புன்னகையைப்
பார்த்தவுடனே
பொடிப் பொடியாகின்றன
எனது காத்திருப்பின்
அத்தனை கோபங்களும் !
அவளுக்கும் எனக்கும்
ஒரே அலைநீளம் இருப்பதன்
ஒரே பிரச்சனை ,
அலைபேசியில்
நான் அழைக்கும் அதேசமயம்
அவளும் அழைத்துத் தொலைப்பது தான் !
மேலதிகாரியிடம் நான்
திட்டு வாங்கிய
நாட்கள் எல்லாம் அநேகமாக
அவள் எனக்கு
காலை வணக்கம்
சொல்லாத நாட்களாயிருக்கும் !
பூங்காவில் ஓர்நாள் ,
காதல் கைகூடுமா என
கண்ணீரோடு என்னிடம்
கவலைப் பட்டவளிடம்
நான் சொன்னேன் ,
" நம் உயிரை ஊற்றி
நாம் வளர்த்த காதல்
நம்மை வாழ வைக்காமலா போய்விடும் ! " என்று ...
Comments
Post a Comment