Skip to main content
ஊடல் இருந்தாலும்
காதல் குறைவதில்லை .........

இப்போதெல்லாம்
காதலோடு தொடங்குகிற
நம் உரையாடல் ,
முடியும் போது
மோதலோடுதான் முடிகிறது !

முன்பெல்லாம்
காதலின் பசிக்கு
ஊடலை ,
ஊறுகாய் போலத்தான்
தொட்டுக்கொண்டிருந்தோம் !
இப்போது அதையே
உணவாக மாற்றி
உணர்வுகளை ஓயாமல்
சுட்டுக்கொண்டிருக்கிறோம் !

நான்கு நாள் தாடியோடு
நானிருந்தது
நாகரிகமாயில்லை என
நறுக்கென்று
நீ எடுத்துரைத்ததும் ,
மாலை நெருங்கும் போது
மதிய உணவு கொண்டால்
உடலானது உபாதைகளின்
புதிய உணவு ஆகிவிடும் என்று நான்
திட்டியபடியே உன் தலையில்
குட்டியதும் என
அழகாய்த்தான் ஆரம்பித்தது
நம் முதல் ஊடல் !

அழைத்த போது
அலைபேசி
அடித்துக்கொண்டே இருந்தது
எங்குதான் தொலைந்தாய் என
எதோ ஒரு மதியத்தில்
எக்குத்தப்பாய் நான் உன்னிடம்
எகிறியதும் ,
" அது என் தனிப்பட்ட
அந்தரங்கம் . " என
தந்திரமாய் நீ என்னைத்
திருப்பிதாக்கியதும் என
நம் இரண்டாவது ஊடலே
இதயங்களில் இடியை
இறக்கியது !

வலையில் தான்
உலவிக்கொண்டிருக்கிறாயே
சிறிது அரட்டையடிக்கலாம் என
ஆசையைத் திரட்டி நான்
அன்பு அழைப்பு விடுத்தால் ,
வேலையிருக்கிறது வேண்டாம்
என என்னை விரட்டி விடுகிறாய் !
கோபத்தில் வசைகளால் நான்
உன்னைப் புரட்டி விடுகிறேன் !
இப்படியே போனால் பிறகு
பிரிந்து விடுவதுதான் என
பதிலுக்கு நீயும் என்னை மிரட்டி விடுகிறாய் !

சனிக்கிழமை சாயங்காலம்
சந்திப்பது என நாம்
சிந்தித்து முடிவெடுத்து ,
சரியான சமயத்தில் நானும் வந்து
சலிக்க சலிக்க காத்திருப்பேன் !
இரண்டு மணிநேரமாகியும்
நீ வராததால்
மிரண்டு போன விழிகளோடு
அரண்டு போய் நின்றிருப்பேன் !
அப்போது பார்த்து நீ
அலைபேசியில் அழைத்து ,
" பெரிய பாளையத்தில் இருந்து
பெரியம்மா வந்திருப்பதால்
பெருமுயற்சி செய்தும்
புறப்பட்டு வர இயலவில்லை !
பிறிதொருநாள் சந்திக்கலாம் ! " என
புலபியபடியே
நீ
பொரிந்து கொட்டுவாய் !
"பிறகு வைத்துக்கொள்கிறேன் " என
இல்லாத வேட்டியை நானும்
வரிந்து கட்டுவேன் !

முந்தைய தேதிகளின்
சேதிகளை நாம்
பேசிப்பேசி மகிழ்ந்திருக்கும் போது
ஊசிபோல ஊடே நுழைந்து
ஊறு விளைவிக்கும்
வேறு அழைப்பிற்காக ,
பாதியில் என்னைப் புறக்கணித்து
ஆதியோடு அந்தமாய்
அங்கே நீ அளந்து கொண்டிருப்பாய் ! - நானோ
மீதிக்கதை பேச வழியின்றி
வீதியில் நிற்கும் விளக்குக்கம்பமாய்
நாதியற்று நேரம்போக நின்றிருப்பேன் !
அதற்குள் நீயோ , என்னை
சோதித்து வதைப்பதில் ,
சாதித்து முடித்திருப்பாய் !
நானோ ,
தாள முடியாத கோபத்தில்
தொலைபேசியைத் தரைக்குத்
தாரை வார்த்திருப்பேன் !

இப்படி ,
எவ்வளவு தான்
ஊடல் இருந்தாலும் ,
எள்ளளவும் குறைவதில்லை
நம் மீது நாம் கொண்ட காதல் !

வசதியில் வனப்பில்
உச்சமாய் இருக்கும்
உனக்கான வரங்களை
துச்சமாய்த் தூக்கிஎறிந்து
எனக்காக நீ காத்திருப்பதும் ,
நம் காதலை
என் வீட்டில் சொல்லியதற்கு
தண்டனையாய்
தாயன்பைத் துறந்து
தினம் தினம் துளித்துளியாய்
நான் இறந்து கொண்டிருப்பதும் , என
எங்கே தள்ளாடினாலும்
அங்கே மட்டும் நம்காதல்
நிமிர்ந்து நின்று விடுகிறதடி !!!













Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர