Skip to main content
மேலதிகாரிகளே ..............




மேலதிகாரிகளே ,
அணியில் நீங்கள் இல்லாவிடினும்
பிணி ஏதும் இன்றிப்
பணி நடந்துகொண்டுதானிருக்கும்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ?





மேலதிகாரிகளே ,
அறிவுரைகளை நீங்கள்
அடுக்கிக்கொண்டே போனால்
மதிப்பிழந்து போகும் உங்கள்
" முகவுரை " என்பதை
மனதில் பதித்துக்கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
சுட்டுவதாலும்
குட்டுவதாலும்
உங்கள்மீது வராத மரியாதை ,
ஆறுதலாய்த் தோளைத்
தட்டுவதால் வருமென்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
புத்தியில் அமிழ்ந்திருக்கும்
பள்ளமும் ,
கண்கள் உமிழ்ந்திருக்கும்
கள்ளமும் ,
ஆகிய இவையிரண்டும்
உங்கள்காலடியில் நீங்கள் பறிக்கும்
பள்ளமென்பதை
உள்ளத்தால் உணர்ந்திடுங்கள் !




மேலதிகாரிகளே ,
பொறுப்பாய் இருக்கிறேனென்று
எந்நாளும் ,
வெறுப்பாய் நீங்களிருந்தால் ,
நற்பெயரென்பது உங்களுக்கான
மறுப்பாகிவிடும் மறந்துவிடாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
கர்வமுடிச்சு அவிழ்ந்தாலே
சர்வசிக்கல்களும்
சரியாகுமென்பதைப்
புரிந்து கொள்ளும்
பக்குவம் உங்களுக்கிருக்கிறதா ?




மேலதிகாரிகளே ,
அனுபவம் தரும்
" மன - பாடத்தை " விடவா
புத்தகத்தின் மனப்பாடம் - உங்கள்
வித்தகத்தை விஸ்தரிக்கப்போகிறது ?




மேலதிகாரிகளே ,
ஒரு குழந்தையின்
குசும்பையே ரசிக்க முடியாத நீங்கள் ,
விசும்பையே வெற்றிகொண்டேனென்று
வீண்பெருமை கொள்ளாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
பலசமயங்களில்
இரைந்து பேசுவதைவிடவும்
கரைந்து பேசுவதென்பது
காரியத்தைச் சாதிக்குமென்பதை
கவனத்தில் வையுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள் மகளின்
பள்ளிவிபரம் தெரியாமல் , - உலகின்
புள்ளிவிபரம் அத்துபடி என்று நீங்கள்
பீற்றிக்கொள்வதில்
பெருமையொன்றுமில்லை !




மேலதிகாரிகளே ,
உடலுழைத்து
நீங்கள் சிந்திய
வியர்வைத்துளிகளை வைத்து
உங்களை மதிப்பிட்டால் ,
அந்த மதிப்பில்
ராஜ்ஜியம் செய்வது வெறும்
பூஜ்ஜியமாகத்தானிருக்கும் !




மேலதிகாரிகளே ,
இறுகியமுகம் உங்களுக்கென்று
இறுமாந்திருக்காதீர்கள் .
அப்படிப்பார்த்தால்
இறந்தவனிடமும் இருக்கிறது
அதே இறுகியமுகம் !




மேலதிகாரிகளே ,
உங்கள் ஊழியர்களின்
சாதனைகளுக்கு
நீங்கள் ஒரு பாட்டாளியாவதும் ,
அவர்களின் தவறுகளுக்குப்
பொறுப்பு ஏற்பதில்
நீங்கள் ஒரு கூட்டாளியாவதும் - என
தலைமையின்
தலையாய பண்பே
இந்த இரண்டும்தானென்பதை
இதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள் !!!






Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர