Skip to main content
வாலிபா ...........

வாலிபா ,
காலையில் எழும்போதே
ஆலைக்குப் போய்
வேலை செய்வதென்றாலே
வெறுப்பாய்த்தானிருக்கும் !

எல் தோன்றும் முன்பே
பல் துலக்க வேண்டியதிருக்கும் !
( எல் - சூரியன் )

குளிப்பு நடக்கும்போது
களிப்பு இருக்காது !

சீரணம் சீர்கேடும் என்கிற
காரணம் சொல்லி ,
சிலநேரங்களில் நீ
சிற்றுண்டியை
சீண்டாமலே போகலாம் !

அலுவலகத்தில்
இருக்கையில் அமர்ந்தாலே
இக்கட்டுகள் உன்னோடு
சொக்கட்டான் ஆடலாம் !

அடுப்பு எரிவது போல் - உன்னுள்
கடுப்பு எரியலாம் !

மேலதிகாரியின்
முகம் பார்க்காத நாளையே
மாபெரும் நாளாய்
மனது கொண்டாடலாம் !

ஒருவாய் சோற்றிற்கும்
ஒருபாய் உறக்கத்திற்கும்
பகலெல்லாம்
பேய்பாடு படுவதும்
நித்தம் நித்தம்
நாய்பாடு படுவதும்
எதற்க்காக ?
சிறிது சிறிதாய்
சாவின் பக்கம்
சாயத்தானே ?
ஒருநாள்
அனைத்தும் அடங்கி
ஒயத்தானே ?
என்று நீ
தத்துவங்களின்
தத்துப்பிள்ளை ஆகலாம் !

ஆனாலும் வாலிபா .........
சிகரங்களில் சிம்மாசனம்
கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம்
பாடுகள் பட்டு
மேடுகள் ஏறியவர்கள்தான் என - வரலாற்றின்
ஏடுகள் புரட்டிப்பார் புரியும் !

நெற்றியின் வியர்வை
நிலத்தில் விழாவிட்டால் - உனது
வெற்றியின் வேர்
உலர்ந்து விடும் !
உழைப்புக்கு அஞ்சாதே !
உனக்கொரு பொழுது
விரைவிலேயே
புலர்ந்து விடும் !

வாழ்வே
வெறுப்பாயிருக்கிறது என
விலைகொடுத்து நீ போதையை
வாங்கினால் ,
இன்னல்களுக்கு நீயே
ஜன்னல் திறப்பது போலாகும் !

உனது விரக்தியின்
வாயில் அடைபட
வாரம் ஒருமுறை
கோயில் செல் !

தெரியாமல்
காலை மிதித்தாலும்
அதனைப் புன்னகையோடு ஏற்கும்
நல்ல உள்ளங்களை
அங்கே காணப்பெறுவாய் !

தாய்தந்தையரின்
தோளில் தலைசாய்த்தபடி
உன்னைப் பார்த்து பார்த்து
சிரிக்கும் குழந்தைகள் வடிவில்
அங்கே கடவுள் உனக்கு
தரிசனம் தரலாம் !

அயல் நாட்டில்
பணியில் இருக்கும்
தன் மகன் போலவே
நீயிருக்கிறாய் என
பாசத்தோடு உன்னைப்பார்க்கும்
வயது முதிர்ந்தோரின்
ஆசிர்வாதங்கள்
அங்கே உனக்குக் கிடைக்கலாம் !

கடவுள் உனக்குக்
கல்லாகவே தெரிந்தாலும்
இரண்டு நிமிடங்கள்
கண்களை மூடி நின்றுபாரேன் !
கவலைகள் அனைத்தும்
சலவை செய்யப்பட்டு
உன் மனது
வெண்மையாய் மாறிவிட்ட
உண்மையை உணர்வாய் !

தொலைகாட்சி பார்க்கும்
உனது தாயை
ஒருநாள் கவனித்துப்பார் தெரியும் !
நெகிழ்ச்சியான காட்சிகளில்
அவள் தன் கண்ணீரை
எத்தனை முறை துடைத்துக்கொள்கிறாள் என்று !
அந்த நல்ல மனம்
புண்படாமல் வாழ்ந்தாலே
சமுதாயம் உன்னைப்
பண்பட்ட மனிதன் என்று போற்றும் !

உனது சக்திக்குத் தகுந்தபடி
தங்கைக்கு ஒரு அணிகலன்
வாங்கித்தாயேன் !
அண்ணன் வாங்கித்தந்தது என
ஆண்டு முழுவதும்
அண்டை அயலாரிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் !

படகுகளும்
துடுப்புகளும் உனக்காகக்
காத்திருக்கும் போது
துன்பத்தின் கடலை
நீந்திக் கடக்க முயல்வது
அறிவீனம் என்று
அறிந்து கொள் தோழா !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர