Skip to main content
அன்பே ,
நம் மீது நமக்கு
உள்ள காதல் ,
என்றும் அழியாத
உள்ளக் காதல் !


நீயில்லாத போதும்
உன்னையே நான்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் !
உனக்காகக் காத்திருக்கையில்
நேரம் போக ,
நொடிகளை ஒவ்வொன்றாக நான்
எண்ணிக்கொண்டிருக்கிறேன் !


உன்னோடு இருக்கும்போது
இன்னும் அழகாகத் தெரிகிறது
பார் !
வெட்கப்பட்டது போதும்
கண்களைத் திறந்து
அதன் அழகைக் கொஞ்சம்
பார் !

( பார் - உலகம் , பார் - பார்த்தல் )


அடடா !
பேசிக்கொண்டிருக்கும் போதே
மின்சாரம் போய்விட்டதே !
உன் இதழ் திறந்து
ஒரே ஒருமுறை நகையடி !
அந்த உன் புன்னகை
மினுமினுத்தபடி வெளிச்சத்தை
முணுமுணுக்கும் பொன் நகையடி !

( நகை - சிரிப்பு , நகை - அணிகலன் )


அடியே ,
பொழுதுகளின் வீணையில்
காதலின் நரம்பை
சிறிது மீட்டு !
பிறகு ,
பெருமுயற்சி செய்தும்
எடுக்க முடியாது
உன்னிலிருந்து என்னை மீட்டு !


உன் அருகாமையில்
சுத்தமாய்
அடங்கி விடுகிறது
என் நாடி !
அதனால் தானோ என்னவோ
வேகமாய்ப் பயணிக்கின்றன
என் ஐம்புலன்களும்
உன்னையே நாடி !


எனக்குத் தெரிந்தவரை
அந்தப் பூங்காதான்
நாம் காதலின் பாடம் கற்ற
பள்ளியறை !
கூட்டம் குறைந்த தருணங்களில்
அதுவே ,
நான் உன்னை
செல்லமாக சீண்டி விளையாடும்
பள்ளியறை !


நீ உண்ணும்போது
கீழே சிந்திய
அந்த இனிப்பின் மீது
அமர்ந்து விட்டுப் பறந்தது
மோட்சம் பெற்ற அந்த ஈ !
நானும் மோட்சமடைய
நீ உண்ணும்
அந்த இனிப்பிலிருந்து
எனக்கும் சிறிது ஈ !

( ஈ - பறக்கும் பூச்சி , ஈ - கொடு )


நம் காதலைக் கொண்டாடக்
கண்டுபிடிப்போம்
மனிதர்கள் யாருமற்ற
ஒரு தீவை !
நாம் பிரிந்து விடுவோமோ
என்ற உனது ஐயத்திற்கு
உடனடியாக நீ தீவை !

( நன்றி : கவிஞர் வாலி )


நான் உன்னைப்
பார்த்துக்கொண்டே இருந்தால்
வெட்கத்தவிப்பில் நீ
திருகித் திருகியே
கிழிந்து போகிறது
உனது சேலையின் தலைப்பு !
நீயே சொல்லேன் !
இந்தக்கவிதைக்குப்
பொருத்தமானதொரு தலைப்பு !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர