Skip to main content
அரசியல்வாதிகளே ..........

அரசியல்வாதிகளே ,
உங்கள் அறிக்கைகளில்
இலவசங்களே
இலக்காக இருப்பதால்
தொலைநோக்கு என்பது - உங்களுக்கு
தொலைந்த நோக்கு
ஆகிவிட்டது போலும் !

அரசியல்வாதிகளே ,
சமச்சீர்கல்வி போன்று
சமச்சீர்சமுதாயம் என்றொரு
சீர்மிகு கருத்தை உங்கள்
சிந்தையில் என்றாவது
சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ?

அரசியல்வாதிகளே ,
உங்களுக்கிடையேயான
ஏட்டிக்குப்போட்டியில்
எட்டி உதைக்கப்படுவதெல்லாம்
ஏதுமற்ற மக்கள்தான் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள் ?

அரசியல்வாதிகளே ,
மதுபோதை போல
மாதுபோதையும்
அரசுடைமையாக்கப்படும் என்று
ஆசைகாட்டியே நாளை
ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் !
அப்போது ,
விபச்சாரதிற்கும்
விபரமானதொரு
பட்டயப் படிப்பு வந்து
பட்டையைக் கிளப்பப்போகிறது !

அரசியல்வாதிகளே ,
" யார் செய்தார்கள் ? " என்பதைவிட
" என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே
தராசின் முள் போல உங்கள்
சிரசில் நிலை பெறட்டும் !

அரசியல்வாதிகளே ,
பேசுவதும் , கேட்பதும்
எழுதுவதும் ,
எப்போதும் சுகமானவைகள் !
அனுபவத்தின் வலி
அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் !
களத்தில் இறங்கிக்
காரியம் ஆற்றாதவரை
களங்கம் என்பது
கடைசிவரை கழுவப்படாது !
களமிறங்கும்
தைரியமில்லாத நீங்கள்
தயவுசெய்து இனிமேல்
உங்களை சிங்கங்களோடு
ஒப்பிடாதீர்கள் .
அது சிங்கங்களுக்கு அசிங்கம் !

அரசியல்வாதிகளே ,
எந்த ஆட்சி வந்தாலும்
முந்தைய ஆட்சியின்
மாட்சிகளை ,
சாட்சியின்றி அழிப்பதையே
அன்றாடக் காட்சியாய்
வைத்திருந்தால் ,
ஆண்டுகள் ஐந்து
மாண்ட போதிலும்
விண்டு கொடுக்கும் அளவுகூட
தொண்டு நடந்திருக்காது !
அடுத்த ஐந்தாண்டில்
காட்சி மாறுவது போல
ஆட்சி மாறினாலும்
பழைய கதையே
புதிய அத்தியாயமாய்த் தொடரும் !

அரசியல்வாதிகளே ,
மனிதநேயம் என்னும்
புனித நேயத்தில்
பட்டம் பயின்றவனே
சட்டம் ஒழுங்கு காக்க
சீருடை அணிய வேண்டும் - என்றொரு
திட்டம் தீட்டிடுங்கள் !
ஏனெனில் இங்கு
பலசமயங்களில் ,
பயிரை மேய்வது
வெளியிலிருந்து வரும்
'கூலிகள் ' அல்ல !
உள்ளேயே இருக்கும்
'வேலிகள் ' தான் !

அரசியல்வாதிகளே ,
கொள்ளையடிக்கவே நீங்கள்
வெள்ளையாய்ச் சிரிக்கிறீர்கள் !
ஏழைகளின் வீட்டில் நீங்கள்
உணவு உண்ணுவது கூட - உங்கள்
கனவு நிறைவேறத்தான் !
உங்கள்
'தடை' களையப்பெறவே
நடை பயணங்களை
நாடு முழுவதும்
நாடிப் போகிறீர்கள் !'
உண்மையைச் சொல்லுங்கள் .
இன்னும் எத்தனை
இருக்கின்றன
உங்கள் புத்தியில்
இதுபோன்ற 'யுத்திகள் '?

அரசியல்வாதிகளே ,
நீங்கள் கோட்டையில்
அமர்ந்துகொண்டு
எத்தனை பழங்களைத் தின்று
எத்தனை கொட்டைகள் போட்டீர்கள்
என்பதல்ல வரலாறு !
நீங்கள் போட்ட விதைகளில்
எத்தனை விதைகள்
விருட்சங்களாகி இருக்கின்றன
என்பது மட்டுமே வரலாறு !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர