அரசியல்வாதிகளே ..........
அரசியல்வாதிகளே ,
உங்கள் அறிக்கைகளில்
இலவசங்களே
இலக்காக இருப்பதால்
தொலைநோக்கு என்பது - உங்களுக்கு
தொலைந்த நோக்கு
ஆகிவிட்டது போலும் !
அரசியல்வாதிகளே ,
சமச்சீர்கல்வி போன்று
சமச்சீர்சமுதாயம் என்றொரு
சீர்மிகு கருத்தை உங்கள்
சிந்தையில் என்றாவது
சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ?
அரசியல்வாதிகளே ,
உங்களுக்கிடையேயான
ஏட்டிக்குப்போட்டியில்
எட்டி உதைக்கப்படுவதெல்லாம்
ஏதுமற்ற மக்கள்தான் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள் ?
அரசியல்வாதிகளே ,
மதுபோதை போல
மாதுபோதையும்
அரசுடைமையாக்கப்படும் என்று
ஆசைகாட்டியே நாளை
ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் !
அப்போது ,
விபச்சாரதிற்கும்
விபரமானதொரு
பட்டயப் படிப்பு வந்து
பட்டையைக் கிளப்பப்போகிறது !
அரசியல்வாதிகளே ,
" யார் செய்தார்கள் ? " என்பதைவிட
" என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே
தராசின் முள் போல உங்கள்
சிரசில் நிலை பெறட்டும் !
அரசியல்வாதிகளே ,
பேசுவதும் , கேட்பதும்
எழுதுவதும் ,
எப்போதும் சுகமானவைகள் !
அனுபவத்தின் வலி
அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் !
களத்தில் இறங்கிக்
காரியம் ஆற்றாதவரை
களங்கம் என்பது
கடைசிவரை கழுவப்படாது !
களமிறங்கும்
தைரியமில்லாத நீங்கள்
தயவுசெய்து இனிமேல்
உங்களை சிங்கங்களோடு
ஒப்பிடாதீர்கள் .
அது சிங்கங்களுக்கு அசிங்கம் !
அரசியல்வாதிகளே ,
எந்த ஆட்சி வந்தாலும்
முந்தைய ஆட்சியின்
மாட்சிகளை ,
சாட்சியின்றி அழிப்பதையே
அன்றாடக் காட்சியாய்
வைத்திருந்தால் ,
ஆண்டுகள் ஐந்து
மாண்ட போதிலும்
விண்டு கொடுக்கும் அளவுகூட
தொண்டு நடந்திருக்காது !
அடுத்த ஐந்தாண்டில்
காட்சி மாறுவது போல
ஆட்சி மாறினாலும்
பழைய கதையே
புதிய அத்தியாயமாய்த் தொடரும் !
அரசியல்வாதிகளே ,
மனிதநேயம் என்னும்
புனித நேயத்தில்
பட்டம் பயின்றவனே
சட்டம் ஒழுங்கு காக்க
சீருடை அணிய வேண்டும் - என்றொரு
திட்டம் தீட்டிடுங்கள் !
ஏனெனில் இங்கு
பலசமயங்களில் ,
பயிரை மேய்வது
வெளியிலிருந்து வரும்
'கூலிகள் ' அல்ல !
உள்ளேயே இருக்கும்
'வேலிகள் ' தான் !
அரசியல்வாதிகளே ,
கொள்ளையடிக்கவே நீங்கள்
வெள்ளையாய்ச் சிரிக்கிறீர்கள் !
ஏழைகளின் வீட்டில் நீங்கள்
உணவு உண்ணுவது கூட - உங்கள்
கனவு நிறைவேறத்தான் !
உங்கள்
'தடை' களையப்பெறவே
நடை பயணங்களை
நாடு முழுவதும்
நாடிப் போகிறீர்கள் !'
உண்மையைச் சொல்லுங்கள் .
இன்னும் எத்தனை
இருக்கின்றன
உங்கள் புத்தியில்
இதுபோன்ற 'யுத்திகள் '?
அரசியல்வாதிகளே ,
நீங்கள் கோட்டையில்
அமர்ந்துகொண்டு
எத்தனை பழங்களைத் தின்று
எத்தனை கொட்டைகள் போட்டீர்கள்
என்பதல்ல வரலாறு !
நீங்கள் போட்ட விதைகளில்
எத்தனை விதைகள்
விருட்சங்களாகி இருக்கின்றன
என்பது மட்டுமே வரலாறு !!!
அரசியல்வாதிகளே ,
உங்கள் அறிக்கைகளில்
இலவசங்களே
இலக்காக இருப்பதால்
தொலைநோக்கு என்பது - உங்களுக்கு
தொலைந்த நோக்கு
ஆகிவிட்டது போலும் !
அரசியல்வாதிகளே ,
சமச்சீர்கல்வி போன்று
சமச்சீர்சமுதாயம் என்றொரு
சீர்மிகு கருத்தை உங்கள்
சிந்தையில் என்றாவது
சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ?
அரசியல்வாதிகளே ,
உங்களுக்கிடையேயான
ஏட்டிக்குப்போட்டியில்
எட்டி உதைக்கப்படுவதெல்லாம்
ஏதுமற்ற மக்கள்தான் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள் ?
அரசியல்வாதிகளே ,
மதுபோதை போல
மாதுபோதையும்
அரசுடைமையாக்கப்படும் என்று
ஆசைகாட்டியே நாளை
ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் !
அப்போது ,
விபச்சாரதிற்கும்
விபரமானதொரு
பட்டயப் படிப்பு வந்து
பட்டையைக் கிளப்பப்போகிறது !
அரசியல்வாதிகளே ,
" யார் செய்தார்கள் ? " என்பதைவிட
" என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே
தராசின் முள் போல உங்கள்
சிரசில் நிலை பெறட்டும் !
அரசியல்வாதிகளே ,
பேசுவதும் , கேட்பதும்
எழுதுவதும் ,
எப்போதும் சுகமானவைகள் !
அனுபவத்தின் வலி
அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் !
களத்தில் இறங்கிக்
காரியம் ஆற்றாதவரை
களங்கம் என்பது
கடைசிவரை கழுவப்படாது !
களமிறங்கும்
தைரியமில்லாத நீங்கள்
தயவுசெய்து இனிமேல்
உங்களை சிங்கங்களோடு
ஒப்பிடாதீர்கள் .
அது சிங்கங்களுக்கு அசிங்கம் !
அரசியல்வாதிகளே ,
எந்த ஆட்சி வந்தாலும்
முந்தைய ஆட்சியின்
மாட்சிகளை ,
சாட்சியின்றி அழிப்பதையே
அன்றாடக் காட்சியாய்
வைத்திருந்தால் ,
ஆண்டுகள் ஐந்து
மாண்ட போதிலும்
விண்டு கொடுக்கும் அளவுகூட
தொண்டு நடந்திருக்காது !
அடுத்த ஐந்தாண்டில்
காட்சி மாறுவது போல
ஆட்சி மாறினாலும்
பழைய கதையே
புதிய அத்தியாயமாய்த் தொடரும் !
அரசியல்வாதிகளே ,
மனிதநேயம் என்னும்
புனித நேயத்தில்
பட்டம் பயின்றவனே
சட்டம் ஒழுங்கு காக்க
சீருடை அணிய வேண்டும் - என்றொரு
திட்டம் தீட்டிடுங்கள் !
ஏனெனில் இங்கு
பலசமயங்களில் ,
பயிரை மேய்வது
வெளியிலிருந்து வரும்
'கூலிகள் ' அல்ல !
உள்ளேயே இருக்கும்
'வேலிகள் ' தான் !
அரசியல்வாதிகளே ,
கொள்ளையடிக்கவே நீங்கள்
வெள்ளையாய்ச் சிரிக்கிறீர்கள் !
ஏழைகளின் வீட்டில் நீங்கள்
உணவு உண்ணுவது கூட - உங்கள்
கனவு நிறைவேறத்தான் !
உங்கள்
'தடை' களையப்பெறவே
நடை பயணங்களை
நாடு முழுவதும்
நாடிப் போகிறீர்கள் !'
உண்மையைச் சொல்லுங்கள் .
இன்னும் எத்தனை
இருக்கின்றன
உங்கள் புத்தியில்
இதுபோன்ற 'யுத்திகள் '?
அரசியல்வாதிகளே ,
நீங்கள் கோட்டையில்
அமர்ந்துகொண்டு
எத்தனை பழங்களைத் தின்று
எத்தனை கொட்டைகள் போட்டீர்கள்
என்பதல்ல வரலாறு !
நீங்கள் போட்ட விதைகளில்
எத்தனை விதைகள்
விருட்சங்களாகி இருக்கின்றன
என்பது மட்டுமே வரலாறு !!!
Comments
Post a Comment