Skip to main content
பேரின்பம் என்பது ..........


அது ஒரு
பிரம்மச்சர்யப்
பகல் பொழுது !


சூழல் முழுக்க
சூனியம்
அப்பிக்கிடந்தது !


இளமைக்கு ,
தனிமைதரும்
மானியம் இந்த
சூனியம் என்று
அல்லாடும் மனதை
ஆறுதல்படுத்த முயன்றேன் !


அச்சமயத்தில்
தொலைக்காட்சியில் ஓர்
கொலைக்காட்சி கண்டேன் !
மண்டை பிளக்கும்
சண்டைப்படம் அது !


தலையில்
முக்காடு போட்டுக்கொள்ள
வெள்ளைத்துண்டை
வினியோகிஸ்தர்களுக்கு
விநியோகித்த படமும் கூட !


அப்படத்தில்
இடையழகி ஒருத்தியின்
இடையாட்டும் பாட்டொன்று
இடைவேளைக்குப் பிறகு
இடையே சொருகப்பட்டிருக்கும் என்று
நண்பனொருவன் பேச்சின்
இடையே சொல்லியிருந்தானென்று
உப்பிலாத காட்சிகளை
அந்த ஒரு காட்சிக்காக
சப்புக்கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன் !


இடைவேளைக்குப் பிறகு
சட்டென்று அப்பாட்டு வருகையில்
பட்டென்று போனது மின்சாரம் !


அய்யகோ !
எப்போதும் போவதுபோல
இப்போது போன மின்சாரம் - இனி
எப்போது வருமோ என
ஏங்கிக் காத்திருந்தேன் !


இதுபோன்ற
சமயங்களில் தான்
ஒரு காதலி அல்லது
ஒரு தோழியின் சேவை
மிகவும் தேவை !


அவர்களோடு
பேசப்பேச
காமத்தின் சாரம்
நீர்த்துப் போய்விடும் !
தாபத்தின் காய்ச்சல்
வேர்த்துப் போய்விடும் !


ஆனால் ,
அப்படி ஓர் பாக்கியம்
வாய்க்கும்படி
தலையில் ஓர் வாக்கியம் கொள்ள
எனக்கு யோக்கியம் இல்லையென
யோசித்திருந்த ஆண்டவன்
மன்மதன் சபையில் எனது பெயரை
வாசிக்காமலேயே விட்டிருந்தான் !


குடிக்கலாமா ?
போதை கொண்டு
காமத்தின் கதையை
முடிக்கலாமா ? என
நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன் !


அப்போது பார்த்து
பக்கத்து வீட்டுக்குழந்தை
பைய பைய
பார்த்தபடி
தைய தைய
தவழ்ந்து வந்தது !


சமையலில் ஈடுபட்டிருந்த
தன் தாயை
சமயம் பார்த்து
ஏமாற்றி வந்திருக்கும் என
யூகித்துக் கொண்டேன் !


என் அருகே வந்து
என்னைப் பார்த்து
சிரிக்கவும் செய்தது
குழந்தை !


சூரியனிருக்கும் ஆகாசம்
கீழிறங்கி வந்தது போல
அப்படியொரு பிரகாசம்
அந்தச்சிரிப்பில் !


குழந்தையை
அள்ளி எடுத்தேன் - உற்சாகத்தில்
துள்ளிக் குதித்தது !
தளிர் போன்ற
அதன் மேனியில்
கதகதப்பானதொரு குளிர்
குடிகொண்டிருந்தது !
தெய்வத்தின் வாசனை - அதன்
தேகம் முழுவதும் !


விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
வீறிட்டழுதது திடீரென !


பதறியடித்துப்
பரிசோதித்ததில்
எறும்பு ஒன்று செய்த
குறும்பு எனத் தெரியவந்தது !


எறும்பைத்
தட்டிவிட்ட பிறகும்
கண்களில் கண்ணீர்
முட்டிக் கொண்டிருந்தது !


அழுகை நிறுத்தும்படி
கைகூப்பி அதனிடம்
தொழுகை செய்தும் பலனில்லை !


அடடா !
சேய் அழுத காரணத்தை - அதன்
தாய் வந்து கேட்டால்
பேய் முழி முழிக்க நேரிடும்
என்ன செய்யலாம் என
நாய் போல நாலாப்புறமும்
அலையவிட்டேன் சிந்தனையை !


விளையாட்டுக் காட்டலாமென
வெடுக்கென நான் எழுந்து
கோமாளி போல
குதித்தாடினேன் !
அழுகையை உடனே நிறுத்தி
கைகொட்டிச் சிரித்தது
குழந்தை !
அதனுடனே நானும்
கைகொட்டி சிரிக்கலானேன்
இன்னொரு குழந்தையென !


மது மற்றும்
மாதுவை விட
பேரின்பங்கள் பலவும்
பூவுலகில் இருப்பதை - நான்
புரிந்து கொண்ட தருணம் அது !!!






Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர