Skip to main content
தள்ளுவண்டிக்கடைக்காரன்





அவனுக்கு
என்
பேர் தெரியாது
ஊர் தெரியாது
ஆனாலும்
அவனுக்கு என்னை
அடையாளம் தெரியும் !

===========================================

அந்த
அழுக்கு நோட்டை
அவனுக்குத் தர
மனமில்லை !

===========================================

தரம்
அதிகமில்லை !
சுவை
அதிகமில்லை !
ஆனாலும்
அந்த உணவு
எங்களுக்குப் பிடித்திருக்கிறது !

===========================================

ஏழு மணிக்கெல்லாம்
கடை திறக்கிறான் !
எப்போது
கண் விழித்திருப்பான் ?

===========================================

அவன் கடை
எங்களின்
' அம்மா உணவகம் ' !

===========================================

சில நேரங்களில்
சில்லறைகளுக்கு பதில்
புன்னகைகள் !

===========================================

தொடர்ந்தாற்போல்
ஒரு வாரம்
விடுமுறை !
ஒரு வார்த்தை
அவனிடமும்
சொல்லிவிட்டு
வந்திருக்கலாம் !

===========================================

கடன் சொல்பவர்கள்
பிச்சைக்காரர்கள்
மற்றும்
போலீஸ்காரர்கள் என
அவனுக்கு
மூன்று எதிரிகள் !

===========================================

அந்தக்கடையால்
எங்கள் பிழைப்பும்
ஓடுகிறது !

===========================================

மழையே !
அவன்
வீடு சென்றபிறகு
வாயேன் !

===========================================

மாதக்கடைசியில்
நாங்கள் கொடுப்பதை
அவன்
எண்ணிப்பார்ப்பதில்லை !

===========================================

எனக்கும்
அவனுக்குமான
உலகத்தில்
கிழிந்த நோட்டுக்கள்
செல்லுகின்றன !

===========================================

கடையைச்
சாத்தும் முன்
அவன்
எண்ணிப்பார்த்து
வைத்த பணத்தில்
கொஞ்சம் ஈரம்
ஒட்டியிருக்கிறது !

===========================================

காசு வாங்குவதைக்
கழித்து விட்டுப்
பார்த்தால்
அவனும் ஒரு
அம்மா !



 



Comments

  1. கடைசி வரிகள் கலக்கல்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர