Skip to main content
பிழைப்பு 




அலாரம்
அடித்தது !

திடுக்கிட்டெழுந்தேன் !

சமையலறையில்
அம்மா !

உறக்கத்தில்
அப்பா !

ஏழுமணிக்கு
எக்ஸ்பிரஸ் !

இரவல் வாங்கிய
இரவுப்பணி, 
இன்றைக்கு மட்டும் !

கொதித்த
வெந்நீர்
அளவாயச்சுட்டது !

எனக்குப்பிடித்த
எழுமிச்சம்பழ சாதம்
மணத்தது,
மதியத்திற்கு !

இரண்டு
இட்டிலிக்கு மேல்
இறங்கவில்லை !

அம்மா கொடுத்த
தேநீரில்
கூடுதலாக
சீனி !

அப்பாவை
எழுப்ப வேண்டாம்
என்றுவிட்டேன் !


 என்
அடுத்த வருகை
அநேகமாக
தீபாவளிக்கு !

காசு ஏதும்
வேண்டுமா என்றாள்
அம்மா !
இருக்கிறது
என்றேன் !

பேருந்துநிறுத்தம்
வரை
பயணப்பையைப்
பிடிவாதமாய்
வாங்கிக்கொண்டு
கூடவே வந்தாள் !

கோயமுத்தூரில்
இருந்து
ஜாதகம் வந்துள்ளதாம் !
பார்க்கவேண்டுமாம் !

கேட்டுக்கொண்டேன் !

அடுத்தமுறை
வரும்போது
கூடுதலாக 
விடுப்பு எடுத்து
வருபடி கூறினாள் !

சரியென்றேன் !

பேருந்து வந்தது !

விடைபெற்றுக்கொண்டேன் !

பேருந்துக்குள்
எனக்கொரு இருக்கை
உறுதியானதை
உறுதிசெய்த
அம்மாவின் முகத்தில்
சின்னதாய்த் திருப்தி !

ரயிலேறியதும்
போன் வரும் !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர