Skip to main content
சுயேட்சை சின்னம்






அன்பார்ந்த
வாக்காளப் பெருமக்களே !

உலகிலேயே
எளிய சின்னம்
எங்கள் சின்னம் !

யாருக்குமே
தெரியாத சின்னம்
எங்கள் சின்னம் !

போஸ்டரே
அடிக்காத சின்னம்
எங்கள் சின்னம் !

யாரையுமே 
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !

யாருமே
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !

தேர்தல் அறிக்கையே
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !

இளைஞர்களே !

எங்கள்
சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
உங்களுக்கு ஒரு
பிகர் கிடைப்பாள் !
கேயாஸ் தியரிப்படி
அது சாத்தியமாகும் !

குடும்பத்தலைவர்களே !

எங்கள் சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
கடனில் இருந்து
விடுபடுவீர்கள் !
உங்கள் சார்பாக
நாங்கள்
சத்ரு சம்ஹார யாகத்தில்
கலந்து கொண்ட கையோடு
அப்படியே வருகிறோம்  !

வாக்காளப் பெருமக்களே !

போக்குவரத்து இடையூறு
ஏற்படுத்தாத சின்னம்
எங்கள் சின்னம் !

கையூட்டு வழங்காத
சின்னம்
எங்கள் சின்னம் !

பிரியாணி தராமல்
உங்களுக்கு
வயிற்று வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !

குவாட்டர் தராமல்
உங்களுக்கு
தலை வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !

நீங்கள்
கழிவறையில்
இருக்கும்போது
உங்கள் கதவைத்தட்டி
ஓட்டுக் கேட்காத சின்னம்
எங்கள் சின்னம் !

வாக்குப்பதிவு
இயந்திரத்தில்
கடைசியில்
வீற்றிருக்கும் சின்னம்
எங்கள் சின்னம் !
ஆகவே,
நீங்கள்
வாக்களிக்க
உங்கள் கைகளை உயர்த்தி
கலோரிகளைச்
செலவழிக்க வேண்டியதில்லை !
போனவுடன்
கடைசியில்
டபக் என்று
போட்டு விடலாம் !

வாக்காளப் பெருமக்களே !

உங்களை
மூளைச்சலவை
செய்யாத சின்னம்
எங்கள் சின்னம் !

உலகிலேயே
நல்ல சின்னம்
எங்கள் சின்னம் !

உள்ளொன்று
வைத்துப்
புறமொன்று
பேசாத சின்னம்
எங்கள் சின்னம் !

கூட்டணிக் குழப்பம்
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் ! 

புள்ளிவிபரங்களை
அள்ளிவீசாத சின்னம்
எங்கள் சின்னம் !

குட்டிக்கதைகள்
சொல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !

வாக்காளப் பெருமக்களே !

நாங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டால் 
எதுவுமே
செய்யப் போவதில்லை !
ஆகவே,
நீங்கள்
நிம்மதியாக இருக்கலாம் !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர