Skip to main content
நாம் கணிணி




உலகையே
இயக்குபவர் போல்
நாம் அந்த
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்திருக்கிறோம் !

நம்
புருவமத்தியில்
சிந்தனை முடிச்சு !

கன்னக்கதுப்புகளில்
சிந்தனை இறுக்கம் !

தாடைகளில்
சிந்தனைகளின்
மெல்லிய அசைவு !

இப்படியாக .....

நம்
இன்னபிற க்களில்
சிந்தனையின்
இன்னபிற க்கள் !

உற்றுப்பார்த்தால்
நம் தலையைச்சுற்றி
ஒளிவட்டம்
தெரியலாம் !
ஒளிச்சதுரமாகவும்
அது இருக்கலாம் !

நாம்
ஜீவசமாதி
அடைந்திருக்கவில்லை
என்பதை
அவ்வப்போதான
நம் கனைப்பு
உறுதிப்படுத்திவிடுகிறது !

நாம் செய்வது
ஒரு வகையான
அறிதுயில் !

சிலபோது
நம் முகத்தில்
புன்னகை அரும்புகிறது !
அந்தப்புன்னகை

கடவுளின் புன்னகையை
ஏறத்தாழ
ஒத்திருக்கிறது ! 


அநேகமாக நாம்
மின்கட்டணம்
செலுத்திக்கொண்டிருக்கலாம் !

ஒரு
கிசுகிசுவைப்
படித்துக்கொண்டிருக்கலாம் !

வீடியோ கேம்
ஆடிக்கொண்டிருக்கலாம் !

ஆபாசப்படம்
பார்த்துக்கொண்டிருக்கலாம் !

திரையைப் பார்த்த
மேனிக்குத்
தூங்கிக்கொண்டிருக்கலாம் !

ஆனால்
அங்கேயிருந்து பார்த்தால்
நாம்
சாட்சாத்
புத்தர் தான் !
சிந்தனை வயப்பட்ட
கணிணி புத்தர் !

நமக்கு
எல்லாமே
கணிணியில் இருக்கிறது !
எல்லாமுமாக
கணிணியே இருக்கிறது !

தப்பில்லை !

கணிணி என்ற
ஜன்னல் வழியே
வேடிக்கை பார்க்கலாம்தான் !
ஆனால்
வீடு என்பது
வேடிக்கை பார்க்கமட்டும்
அல்லவே !!!









Comments

  1. வணக்கம்
    ஆனால்
    அங்கேயிருந்து பார்த்தால்
    நாம்
    சாட்சாத்
    புத்தர் தான் !
    சிந்தனை வயப்பட்ட
    கணிணி புத்தர் !
    கவிதை அருமையாக உள்ளது. ரசித்தேன்

    என்பக்கம் கவிதையாக
    எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர