Skip to main content
சமூக முதிர்ச்சி





சேர்ந்தாற்போல
நான்கு இளைஞர்கள்
நடந்து போனால்
காட்டாயம் அவர்களிடம்
மதுவாசம் !

தகாத வார்த்தைகளால்
தந்தையைத் திட்டுகிறான்
ஒரு சிரிப்பு நடிகன் !
தியேட்டரில்
கைதட்டுகிறார்கள் !

பள்ளிச்சிறுமி ,
கையில் அலைபேசி ,
நமட்டுச் சிரிப்பு
அடிவயிற்றில் பகீர் !

ஆசிரியர்களை 
வேவு பார்க்க
மாணவர்களை
நியமிக்கும்
பள்ளி நிர்வாகம் !

ஜோதிடர்களின்
தயவால் தான்
இன்னும்
கூட்டமிருக்கிறது
கோவில்களில் !

காதல் பேசுவது
பெண்களுக்குப்
பொழுது போக்கு !
இளைஞர்களுக்கு
பிறவிப் பயன் !

முகநூலை
தடை செய்தால்
லட்சக்கணக்கில்
தீக்குளிப்பு கட்டாயம் !

அருந்தமிழ் நாட்டில்
அடுக்கு மொழியில்
ஆங்கிலம் பேசும்
ஐந்து வயதுக் குழந்தைக்கு
அம்மா என்ற வார்த்தை
தெரியவில்லை !
பலே !

பந்தி போடும்
வரை தான்,
கல்யாண வீடுகளில்
கூட்டமெல்லாம் !

வரிக்கு
விலக்கிருப்பதை
உறுதி செய்த பின்புதான்
வக்கற்றோரை நோக்கி
உதவிக் கரங்கள்
நீள்கின்றன !

கற்பு என்பது
கெட்ட வார்த்தை !

பாசம் என்பது
மூட நம்பிக்கை !

புனிதம் என்பது
பைத்தியகாரத்தனம் !

பற்றியெரியும்
குடிசையின் முன்
குளிர்காய்கிறார்கள் !
ஒளி கொடுக்கும்
தீபத்தை
ஊதி அணைக்கிறார்கள் !
மாற்று சிந்தனையாம் !

" பெண்களுக்கென்று
தனியாக
மதுபானக் கடைகள்
திறக்கப் படும் "
அடுத்த
தேர்தலுக்கு
ஒரு வாக்குறுதி
தயார் !

" எதற்கும் சற்று
வறுமைக் கோட்டை
இறக்கியே போடு ! "
ஐநா சபைக்கு
கணக்குக் காட்ட
உதவும் !

இனிவரும்
இன்குபேட்டர்களில்
கருமுட்டைகள்
குழந்தைகளாகும் !

' இதிலென்ன தப்பு ? ' என்று
இறைச்சிக் கடைகளில்
இறந்தவர்களின்
சடலங்கள்
தொங்கும் நாள்
இதோ வந்துகொண்டிருக்கிறது !

" சமூக முதிர்ச்சி "
என்பதன் பொருளே
மேற்சொன்ன
மாற்றங்களை
ஏகோபித்து
ஏற்றுக் கொள்வதுதானே !
வேறென்ன ???










Comments

  1. சமூக முதிர்ச்சி மிகவும் கவலைப்பட வைக்கிறது. ஆக்கம் அருமை.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர