அறை
கற்றுக்கொள்ளாதபோது
சமைத்த
அந்த
முதல்சமையலின் ருசி,
கற்றுக் கொண்டபிறகு
சமைத்த உணவுகளில்
இதுவரை கிடைக்கவில்லை !
வெறும்
வெங்காயத்தை மட்டுமே
நறுக்கித்தரும்
சமைக்கத்தெரியாத ஒருவன்
எல்லா அறைகளிலும்
இருக்கிறான் !
அவன்
உண்பான் என
இவனும்
இவன்
உண்பான் என
அவனும்
இருந்ததில்
மீந்து போய்
வெளியில் கொட்டும்
கலாச்சாரம்
அறையினுடையது !
எப்போதெல்லாம்
அறையில் அசைவம்
சமைக்கப்படுகிறதோ
அப்போதெல்லாம்
அறையின்
அசைவம் சாப்பிடாதவன்
ஊருக்குப் போயிருப்பான் !
எல்லா
அறைகளிலும்
ஏதோ ஒருவன்
சதா காதலியிடம்
பேசிக் கொண்டேயிருக்கிறான் !
தொலைந்த
பொருளுக்கு
அறையில் இருப்பவர்களை
சந்தேகிப்பது கூடாது !
தண்ணீர்
வராதநாட்கள்
அறையின்
துக்கநாட்கள் !
அறையில்
மதுவருந்தும் போது
நண்பர்களின் சத்தம்
அக்கம் பக்கம்
கேட்டு விடக்கூடாதென்று
அவ்வப்போது அவர்களை
அமைதிப்படுத்திக்
கொண்டிருப்பவனின்
அவஸ்த்தை
அழகானது !
அறையில்
ஒருவன்
தொலைக்காட்சி
பார்க்கிறபோது
வருகின்றஉறக்கம்
யாருமில்லாத
'அறைத்தனிமையில்'
வருவதில்லை !
எப்போது
ஒரு அறையின்
வரவு செலவுக் கணக்கு
அதைப் போட்ட
நபர்
இல்லாத சமயத்தில்
சரிபார்க்கப்படுகின்றதோ
அப்போது
கெட ஆரம்பிக்கிறது
அந்த அறையின்
கற்பு !
மகிழ்ச்சியோ
துயரமோ
ஒருவன்
பகிர்ந்து கொள்வது
முதலில்
அறையில்
இருப்பவர்களோடுதான் !
வேலை தேடியோ
வேலை பெற்றோ
வருகின்ற
ஒருவனுக்கு
அடைக்கலம் தராத
ஒரு அறை
இந்த உலகத்தில்
இல்லவே இல்லை !
'சகோதரர்கள்
நான்கு பேர்
ஒரே வீட்டில்
வசிப்பதற்கும்
பணி நிமித்தம்
நான்கு பேர்
ஒரே அறையில்
வசிப்பதற்கும் .............
உண்மையைச் சொன்னால்
வித்தியாசம் இல்லை !
கற்றுக்கொள்ளாதபோது
சமைத்த
அந்த
முதல்சமையலின் ருசி,
கற்றுக் கொண்டபிறகு
சமைத்த உணவுகளில்
இதுவரை கிடைக்கவில்லை !
வெறும்
வெங்காயத்தை மட்டுமே
நறுக்கித்தரும்
சமைக்கத்தெரியாத ஒருவன்
எல்லா அறைகளிலும்
இருக்கிறான் !
அவன்
உண்பான் என
இவனும்
இவன்
உண்பான் என
அவனும்
இருந்ததில்
மீந்து போய்
வெளியில் கொட்டும்
கலாச்சாரம்
அறையினுடையது !
எப்போதெல்லாம்
அறையில் அசைவம்
சமைக்கப்படுகிறதோ
அப்போதெல்லாம்
அறையின்
அசைவம் சாப்பிடாதவன்
ஊருக்குப் போயிருப்பான் !
எல்லா
அறைகளிலும்
ஏதோ ஒருவன்
சதா காதலியிடம்
பேசிக் கொண்டேயிருக்கிறான் !
தொலைந்த
பொருளுக்கு
அறையில் இருப்பவர்களை
சந்தேகிப்பது கூடாது !
தண்ணீர்
வராதநாட்கள்
அறையின்
துக்கநாட்கள் !
அறையில்
மதுவருந்தும் போது
நண்பர்களின் சத்தம்
அக்கம் பக்கம்
கேட்டு விடக்கூடாதென்று
அவ்வப்போது அவர்களை
அமைதிப்படுத்திக்
கொண்டிருப்பவனின்
அவஸ்த்தை
அழகானது !
அறையில்
ஒருவன்
தொலைக்காட்சி
பார்க்கிறபோது
வருகின்றஉறக்கம்
யாருமில்லாத
'அறைத்தனிமையில்'
வருவதில்லை !
எப்போது
ஒரு அறையின்
வரவு செலவுக் கணக்கு
அதைப் போட்ட
நபர்
இல்லாத சமயத்தில்
சரிபார்க்கப்படுகின்றதோ
அப்போது
கெட ஆரம்பிக்கிறது
அந்த அறையின்
கற்பு !
மகிழ்ச்சியோ
துயரமோ
ஒருவன்
பகிர்ந்து கொள்வது
முதலில்
அறையில்
இருப்பவர்களோடுதான் !
வேலை தேடியோ
வேலை பெற்றோ
வருகின்ற
ஒருவனுக்கு
அடைக்கலம் தராத
ஒரு அறை
இந்த உலகத்தில்
இல்லவே இல்லை !
'சகோதரர்கள்
நான்கு பேர்
ஒரே வீட்டில்
வசிப்பதற்கும்
பணி நிமித்தம்
நான்கு பேர்
ஒரே அறையில்
வசிப்பதற்கும் .............
உண்மையைச் சொன்னால்
வித்தியாசம் இல்லை !
அறையைப்பற்றி நன்கு அறிந்தும் அறைந்தும் சொல்லியுள்ளது அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஐயா
Deleteசூப்பரா இருந்தது கவிதை குறிப்பாக அறையின் கற்பு குறித்த பார்வை
ReplyDeleteகவிதையின் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி தோழி !
Delete