Skip to main content
பயணம்

குறிப்பு : இந்தக் கவிதை பேருந்தைப் பற்றியதல்ல




ஊருக்குப் போவதில்
உறுதியாக இருந்தால்
ஒரு பேருந்தை விட்டாலும்
இன்னொரு பேருந்தைப்
பிடித்தாவது
நாம்
ஊருக்குப் போய்விடுவோம் !

பேருந்து
உரிய நேரத்திற்கு
வரவில்லை !
நம்மைப் போலவே
இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்
எனும் போது
தாமதித்தாலும்
வரவேண்டிய பேருந்து
வந்தே தீரும் !

பேருந்து
கல்லறை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் சுகமாயிருந்து
யாதொரு பயனும் இல்லை !
பேருந்து,
பூந்தோட்டத்தை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் கடினமாயிருப்பதில்
பிழையொன்றும் இல்லை !

ஐம்பது பேர்
உடன் பயணித்தும்
பக்கத்து இருக்கைக்காரனுடன்
பேசாதவன்
தனியாகத் தான்
பயணிக்கிறான் !

எங்கும் நிற்காத
பாயிண்ட் டு பாயிண்ட்
பேருந்தில் ஏறினாலும்
அதுவும் ஏதாவது
ஒரு இடத்தில்
நிற்கவே செய்யும்  !

ஒரே இடத்தில் ஏறி
ஒரே இடத்தில்
இறங்கினாலும்
பயண நோக்கம்
ஒருவருக்கொருவர்
வேறுபடத்தான் செய்கிறது !

தொலைவு
அதிகமாக இருந்தால்
பயணச்சீட்டின் விலையும்
அதிகமாகத் தான் இருக்கும் !

நிறுத்தம் வருவது
தெரியாமல்
தூங்கிக் கொண்டிருப்பவர்களை
விழித்துக் கொண்டிருப்பவர்கள்
சற்று
எழுப்பி விடலாமே !

நடக்கக்கூடிய அளவுதான்
கடக்கக்கூடிய தொலைவு
என்றால்
நடந்தே போய்விடலாமே !
பேருந்திற்காகக்
காத்திருபானேன் ?

Comments

  1. //ஐம்பது பேர்
    உடன் பயணித்தும்
    பக்கத்து இருக்கைக்காரனுடன்
    பேசாதவன்
    தனியாகத் தான்
    பயணிக்கிறான் !//

    அருமையாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பயணம் குறித்த தங்கள் கருத்து சரிதான்...பதிவுகள் எழுதி வெகு நாளாகி விட்டதோ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர