பிரம்மச்சாரி - 2
ச்சை !
வாழ்ந்து வாழ்ந்து
அலுத்து விட்டது !
ஏங்கி ஏங்கி
இதயம்
உலுத்து விட்டது !
சொடுக்குப்
போடுவதற்குள்
இதோ
வந்துவிடும்
நாற்பது !
திருமணப் போட்டியில்
எத்தனை முறைதான்
தோற்பது ?
ஆணும் பெண்ணும்
சேர்ந்து படிப்பதுதான்
வாழ்க்கை எனும்
பாடம் !
கால்களே போனபின்பு
காளைகளுக்கு எதற்கு
லாடம் ?
முன்னூறு
ஆண்களுக்கு
பெண்கள் மொத்தமே
மூன்றுதான் !
நகரப் பேருந்து கூட
அதற்கொரு நல்ல
சான்றுதான் !
பகிர்ந்துண்ண
காதலியில்லை
கடற்கரையில் வாங்கிய
சுண்டலை !
யார் கரைசேர்ப்பார்கள்
எங்கள்
வாலிபம் என்னும்
வண்டலை ?
எந்தப்பாலினமும்
எதிர்பார்ப்பது
எதிர் பாலினத்தின்
சூழலை !
எங்கு போய்
முறையிடுவது
பெண்சிசுக்கொலை என்ற
ஊழலை ?
பெண்ணை
எதிர்பார்த்து
கண்ணை
மூடிக்கொண்டு
ஏதாவதொரு
எண்ணை
அலைபேசியில்
அழுத்தினால்
எதிர்முனையில்
ஏக்கத்தோடு
ஹலோ சொல்கிறான்
' என்னைப் போல் ஒருவன் ' !
பெண் பிறந்தாலே
நாளை
பட்டாசு வெடிக்கும்
நிலை வரும் !
கனிந்து நிற்கும்
கிழவிகளுக்கும்
கண்ணம்மா பேட்டையில்
சிலை வரும் !
பொன்னகையா
கேட்கிறோம்
சம்மதம் சொல்லும்
புன்னகை தானே
கேட்கிறோம் !
வேண்டாம்
வரதட்சணை
என்றாலும்
வரா தட்சணையாகத்தானே
இருக்கிறது
வாழ்க்கைத்துணை !
விதவையாவது
வாழ்வு கொடுப்பாளா
என்று போனால்,
விண்ணப்பம் வாங்க
வரிசையில்
வரச்சொல்கிறார்கள் !
விவாகரத்தானவளுக்கு
விண்ணப்பம்
தீர்ந்தே விட்டதாம் !
விபச்சாரியிடம்
போய்க் கேட்டால்
அவள்
இப்படிச்சொல்கிறாள்,
" வருடக்கணக்கில்
ஓசியாய் இருப்பதற்கு
வேசியாய் இருப்பதே
ஈசியாய் இருக்கிறது
ஏசி விடுவதற்குள்
எழுந்து ஓடு "
மண்ணுக்காக அல்ல
பெண்ணுக்காக
உருவாகப் போகிறது
இங்கு
இன்னொரு மகாபாரதம் !
பிறக்கப் போகிறார்கள்
பல கோடி
பாண்டவர்கள் !
பல்லாயிரம் கோடி
பீஷ்மர்கள் !
அப்போதும் ,
பாஞ்சாலிகளுக்குத்தான்
நிலவப் போகிறது
கடுமையான
பஞ்சமே !
இருநூறாவது
தவணையில் தான்
கிடைக்கப்போகிறது
இணை சேர்வதற்கான
மஞ்சமே !
காமச்சூட்டை
எத்தனை நாள்தான்
குப்புறப்படுத்தே
அப்புறப் படுத்துவது ?
அட !
அது கிடக்கட்டும் !
மனதைத் தழுவவும்
மங்கையில்லையே !
மொண்டு குடிக்கவும்
கங்கையில்லையே !
சட்டமாக்கப்பட்ட
ஆண் - ஆண் இணைவு
நாளை
கட்டாயமாவதற்குள்
செத்து விட வேண்டும் !!!
விரக்தியில் எழுதிய கவிதையோ
ReplyDeleteசொந்த அனுபவமா,இல்லை நிறைய பார்த்த அனுபவமா . இந்த அளவு பாதிப்பு இன்னும் ஒரு 15 வருடங்களில் ஏற்பட்டுவிடும் என எண்ணுகிறேன்.இப்போதே வந்துவிட்டதாகக் கவிதை சொல்கிறது. உண்மையா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ! இக்கவிதையில் ( ? ) எழுபத்தி ஐந்து சதவிகிதம் சொந்த, நொந்த அனுபவம் தான். மீதி கண்டதையும் கேட்டதையும் வைத்து எழுதியது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலை வந்துவிடுமா ? அந்த மகாவிஷ்ணு பாற்கடலில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு ஆண் குழந்தைகள் சகட்டு மேனிக்குப் பிறந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் போலும். இக்கவிதையில் சற்று மிகையாக சித்தரிக்கப்பட்ட அந்த " நிலை " அடுத்த பதினைந்து வருடங்களில் வருவது நம் சமூகத்துக்கு நிச்சயமாக, சத்தியமாக, உறுதியாக, ஆரோக்யமானதல்ல.
ReplyDeleteகருத்துக்கு மீண்டும் நன்றி !
தேவா இந்த நிலை, மாறும் ஒருநாள், சங்கீதா போல் ஒரு பெண் வருவாள் ஒருநாள், அந்நாள் உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கெல்லாம் திருநாள்
ReplyDeletekavidhai arumai Deva
ReplyDelete