Skip to main content

அம்மா
 


உயிர்கள்
அனைத்திற்கும்
முதல் உறவு
அம்மா !
அவள்
இல்லையென்றால்
இந்த உலகம்
வெறும் சும்மா !

போலியாக
அவள்
கண்ணீரை
உகுக்க மாட்டாள் !
பல குழந்தைகள்
என்றாலும்
பாசத்தைப்
பகுக்க மாட்டாள் !

பிள்ளைகளிடத்து
அவள் பார்ப்பதில்லை
தன்மானம் !
அன்பு ஒன்றேதான்
அவள் எதிர்நோக்கும்
சன்மானம் !

எங்கு சென்றாலும்
பின்தொடரும்
அவள்
அன்பு என்ற
 கயிறு !
பாசம் உண்டே
பசியாறும்
பெற்றெடுத்த
அவள் வயிறு !

அவள்
பிசைந்து கொடுக்கும்
சோறு
அமுதத்தை மிஞ்சும்
சுவையிலே !
அவளைத்தான்
வணங்க வேண்டும்
ஆன்றோர் இருந்தாலும்
அவையிலே !

தன் மகற்கென்றால்
சிறுமுள் தைத்தாலும்
பதைத்து விடுவாள் !
தனக்கென்றால்
இடியே விழுந்தாலும்
அதைத் தன்னுள்ளே
புதைத்து விடுவாள் !

தாயை
வணங்காதவனுக்கு
இவ்வுலகில்
தகையில்லை !
தாய்க்குப் பிறகுதான்
தெய்வம் என்றாலும்
அது மிகையில்லை !

தாயை
வணங்குவோன்
முந்தி அடைவான்
சிகரத்தை !
அதனால் தான்
வைத்தார்கள்
அவள் பெயரில்
அகரத்தை !

அவள்,
அனுதினமும்
அன்பைக் கொட்டிக்
களிக்க வைப்பாள் !
வயதானாலும்
எண்ணை தேய்த்துக்
குளிக்க வைப்பாள் !

ஊரான்
குழந்தைக்கும்
திறந்துதானிருக்கும்
அவள் இல்லத்தின்
வாயில் !
அவள் இருப்பிடம்
வீடில்லை
கோயில் !

ஒரு துன்பமென்றால்
அவள் தான்
வந்து நிற்பாள்
ஊருக்கு முன்பே !
தாய்ப்பால் என்பதும்
திரவ வடிவிலான
அவள் அன்பே !
எந்த தெய்வமும்
வைத்து எண்ணப்படும்
அவள் அன்புக்குப்
பின்பே !
இடுகாட்டில்
வேகும்போதும்
நமக்காக உருகும்
அவள் என்பே !












Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர