Skip to main content

அம்மா
 


உயிர்கள்
அனைத்திற்கும்
முதல் உறவு
அம்மா !
அவள்
இல்லையென்றால்
இந்த உலகம்
வெறும் சும்மா !

போலியாக
அவள்
கண்ணீரை
உகுக்க மாட்டாள் !
பல குழந்தைகள்
என்றாலும்
பாசத்தைப்
பகுக்க மாட்டாள் !

பிள்ளைகளிடத்து
அவள் பார்ப்பதில்லை
தன்மானம் !
அன்பு ஒன்றேதான்
அவள் எதிர்நோக்கும்
சன்மானம் !

எங்கு சென்றாலும்
பின்தொடரும்
அவள்
அன்பு என்ற
 கயிறு !
பாசம் உண்டே
பசியாறும்
பெற்றெடுத்த
அவள் வயிறு !

அவள்
பிசைந்து கொடுக்கும்
சோறு
அமுதத்தை மிஞ்சும்
சுவையிலே !
அவளைத்தான்
வணங்க வேண்டும்
ஆன்றோர் இருந்தாலும்
அவையிலே !

தன் மகற்கென்றால்
சிறுமுள் தைத்தாலும்
பதைத்து விடுவாள் !
தனக்கென்றால்
இடியே விழுந்தாலும்
அதைத் தன்னுள்ளே
புதைத்து விடுவாள் !

தாயை
வணங்காதவனுக்கு
இவ்வுலகில்
தகையில்லை !
தாய்க்குப் பிறகுதான்
தெய்வம் என்றாலும்
அது மிகையில்லை !

தாயை
வணங்குவோன்
முந்தி அடைவான்
சிகரத்தை !
அதனால் தான்
வைத்தார்கள்
அவள் பெயரில்
அகரத்தை !

அவள்,
அனுதினமும்
அன்பைக் கொட்டிக்
களிக்க வைப்பாள் !
வயதானாலும்
எண்ணை தேய்த்துக்
குளிக்க வைப்பாள் !

ஊரான்
குழந்தைக்கும்
திறந்துதானிருக்கும்
அவள் இல்லத்தின்
வாயில் !
அவள் இருப்பிடம்
வீடில்லை
கோயில் !

ஒரு துன்பமென்றால்
அவள் தான்
வந்து நிற்பாள்
ஊருக்கு முன்பே !
தாய்ப்பால் என்பதும்
திரவ வடிவிலான
அவள் அன்பே !
எந்த தெய்வமும்
வைத்து எண்ணப்படும்
அவள் அன்புக்குப்
பின்பே !
இடுகாட்டில்
வேகும்போதும்
நமக்காக உருகும்
அவள் என்பே !












Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...