Skip to main content
பித்தன்



ஊருக்குத்தான்
அவன் பித்தன் !
உள்ளுக்குள்ளே
அவன் சித்தன் !

ஊரார்,
அவன் உடம்பெல்லாம்
ஒரே
அழுக்கு என்றார்கள் !
அவன் இருப்பது
அந்த வீதிக்கே
இழுக்கு என்றார்கள் !

அவனிடமிருந்தது
ஒரேயொரு
கிழிந்த வேட்டி !
தெருநாய்கள்தான்
அவனுக்கிருக்கும்
ஒரே போட்டி !

அவனுக்கு
எப்போதும்
கண்ணில் ஒரு
கிறக்கமிருக்கும்  !
பகல் பொழுதிலும்
மரத்தடியில்
உறக்கமிருக்கும் !

எண்ணையே
காணாதிருந்தது
அவன் தலை !
பரிகசிக்கக்கூடியது தான்
அவன் நிலை !

இப்போதுதான்
அவன் தாழ்ந்தவனாம் !
ஒருகாலத்தில்
நன்றாக வாழ்ந்தவனாம் !

வருவோர்க்கெல்லாம்
வாரி வாரிக்
கொடுத்தவனாம் !
அந்த மட்டில்
அவன்
தன்னைத்தானே
கெடுத்தவனாம் !

சில
குறும்புக்காரர்கள்
அவனை
கல்லால் அடித்தார்கள் !
சில
" குடும்பக்காரர்கள் "
அவனை
சொல்லால் அடித்தார்கள் !

தெருக்கோடியில்
இருக்கிறது
ஒரு
தேநீர் கடை !
மிகவும் பிரசித்தம்
அதன்
மாலை நேரத்து வடை !
எப்போதுமிருக்கும்
அங்கு
வாடிக்கையாளர்களின் படை !
கடையையே
சுற்றிச்சுற்றி வரும்
இந்தப் பித்தனின் நடை !

கடைக்காரன்
அவனுக்குக்
கொடுப்பான்
மீந்ததையெல்லாம் !
இவனும்
வாங்கியுண்பான்
அவன்
ஈந்ததையெல்லாம் !

நானும்
அவ்வப்போது
அவனைப்
பார்த்திருக்கிறேன் !
நெருங்கும்போதெல்லாம்
பயந்து போய்
வேர்த்திருக்கிறேன் !

ஒரு நாள்,
ஒரு முக்கியப் பணி !

போய்க்கொண்டிருந்தேன் !

எதிரே இவன் !

வந்தவன்
என்னைப் பார்த்து
நகைத்தான் !
நான்
வந்த எரிச்சலைக்
காது வழியாகப்
புகைத்தேன் !

ஆனாலும்,

போன காரியம்
இனிதே
முடிந்து விட்டது !
வாழ்வில்
ஒரு பொழுது
நல்லபடியாய்
விடிந்து விட்டது !

திரும்பி வரும்போது
அந்தப் பித்தனுக்கு
கடையில்
வடை வாங்கித்தர
நினைத்திருந்தேன் !

அதிசயமாய்
அவனைக் காணவில்லை !

மறுநாள்
எதிர்பார்த்தேன்  !
 
அவன் வரவில்லை !
தன தரிசனத்தை
எனக்குத் தரவில்லை !

மறுநாளுக்கு
மறுநாள் .........

ம்ஹூம் !

எங்கு போனான் ?
என்ன ஆனான் ?

சட்டென்று
ஏதோ ஒன்று
மண்டைக்குள்
வெட்டியது !
ஏனோ தெரியவில்லை
என் மனதே
என்னைத் திட்டியது !

பித்தனவன்
தன் இருப்பிடத்தையே
மறந்து விட்டானோ ?
இல்லை,
வாழ்ந்தது போதும் என
ஒட்டு மொத்தமாய்
இவ்வுலகையே
துறந்து விட்டானோ ?

அவன்
இருக்கும்போதே
ஏதாவது கொஞ்சம்
கொடுத்திருக்கலாமோ ??? 




Comments

  1. உங்கள் கவிதைகளையும் ஓர் நாள் தமிழ் பேசும்
    நல்லுலகம் தேடி அலையும் நிலை வரும் :(
    மிகவும் அருமையான கவிதை நடை யாரும்
    கவனிப்பார் அற்றுக் கிடக்கிறதே!!!!........பிற
    தளங்களிலும் இணைத்துப் பகிருங்கள் சகோதரரே
    அருமையான இந்தக் கவிதை வரிகள் அனைவரையும்
    சென்றடைய .என் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே
    உங்கள் கவிதைகளுக்கு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. ஒரு எளிமையான குடில் போல இருக்கும் எனது வலைப்பூ விற்கு தங்களின் முதல் வருகை ! எப்படி வரவேற்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறேன். அருமையான தங்களின் கருத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றிகள் தோழி !

      Delete
  2. இனிதே காரியம் முடிந்து விட்டபடியால் பித்தனை நினைக்க வைத்ததும், முடிவில் வருத்தப்பட்டதும் என பலவற்றை சிந்திக்க வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த வாசிப்புக்கு மிகவும் நன்றி நண்பரே

      Delete
  3. எதுகை மோனைகள்
    மாறி மாறி பதம் பார்த்து செல்கிறது
    கண்கள் வழியாக மனதை .

    சமுகத்தின் சாடல்
    உயிர்ப்பின் நிலையாமை

    இருக்கும் போது தோன்றுவதில்லை
    தோன்றும் போது இருப்பு இல்லை

    வாழ்வின் தத்துவம் அழகிய தனித்துவ நடையில் அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. கவிதையை விட அதற்குக் கவிதையாக தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் கவிதையை இன்னும் அழகுபடுத்துகிறது தோழி ! நன்றிகள் ஆயிரம் !

      Delete
  4. அருமையாக கையாள்கிறீர்கள் வார்த்தைகளை. வாழ்த்துக்கள்.
    ஒரு நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பு வந்தால் உடனே செய்து விட வேண்டும் .அதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலேயே போய் விடலாம்.

    ReplyDelete
  5. கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டு பின்னூட்ட மிட்டதற்கு மிகவும் நன்றிகள் தோழி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர