பித்தன்
ஊருக்குத்தான்
அவன் பித்தன் !
உள்ளுக்குள்ளே
அவன் சித்தன் !
ஊரார்,
அவன் உடம்பெல்லாம்
ஒரே
அழுக்கு என்றார்கள் !
அவன் இருப்பது
அந்த வீதிக்கே
இழுக்கு என்றார்கள் !
அவனிடமிருந்தது
ஒரேயொரு
கிழிந்த வேட்டி !
தெருநாய்கள்தான்
அவனுக்கிருக்கும்
ஒரே போட்டி !
அவனுக்கு
எப்போதும்
கண்ணில் ஒரு
கிறக்கமிருக்கும் !
பகல் பொழுதிலும்
மரத்தடியில்
உறக்கமிருக்கும் !
எண்ணையே
காணாதிருந்தது
அவன் தலை !
பரிகசிக்கக்கூடியது தான்
அவன் நிலை !
இப்போதுதான்
அவன் தாழ்ந்தவனாம் !
ஒருகாலத்தில்
நன்றாக வாழ்ந்தவனாம் !
வருவோர்க்கெல்லாம்
வாரி வாரிக்
கொடுத்தவனாம் !
அந்த மட்டில்
அவன்
தன்னைத்தானே
கெடுத்தவனாம் !
சில
குறும்புக்காரர்கள்
அவனை
கல்லால் அடித்தார்கள் !
சில
" குடும்பக்காரர்கள் "
அவனை
சொல்லால் அடித்தார்கள் !
தெருக்கோடியில்
இருக்கிறது
ஒரு
தேநீர் கடை !
மிகவும் பிரசித்தம்
அதன்
மாலை நேரத்து வடை !
எப்போதுமிருக்கும்
அங்கு
வாடிக்கையாளர்களின் படை !
கடையையே
சுற்றிச்சுற்றி வரும்
இந்தப் பித்தனின் நடை !
கடைக்காரன்
அவனுக்குக்
கொடுப்பான்
மீந்ததையெல்லாம் !
இவனும்
வாங்கியுண்பான்
அவன்
ஈந்ததையெல்லாம் !
நானும்
அவ்வப்போது
அவனைப்
பார்த்திருக்கிறேன் !
நெருங்கும்போதெல்லாம்
பயந்து போய்
வேர்த்திருக்கிறேன் !
ஒரு நாள்,
ஒரு முக்கியப் பணி !
போய்க்கொண்டிருந்தேன் !
எதிரே இவன் !
வந்தவன்
என்னைப் பார்த்து
நகைத்தான் !
நான்
வந்த எரிச்சலைக்
காது வழியாகப்
புகைத்தேன் !
ஆனாலும்,
போன காரியம்
இனிதே
முடிந்து விட்டது !
வாழ்வில்
ஒரு பொழுது
நல்லபடியாய்
விடிந்து விட்டது !
திரும்பி வரும்போது
அந்தப் பித்தனுக்கு
கடையில்
வடை வாங்கித்தர
நினைத்திருந்தேன் !
அதிசயமாய்
அவனைக் காணவில்லை !
மறுநாள்
எதிர்பார்த்தேன் !
அவன் வரவில்லை !
தன தரிசனத்தை
எனக்குத் தரவில்லை !
மறுநாளுக்கு
மறுநாள் .........
ம்ஹூம் !
எங்கு போனான் ?
என்ன ஆனான் ?
சட்டென்று
ஏதோ ஒன்று
மண்டைக்குள்
வெட்டியது !
ஏனோ தெரியவில்லை
என் மனதே
என்னைத் திட்டியது !
பித்தனவன்
தன் இருப்பிடத்தையே
மறந்து விட்டானோ ?
இல்லை,
வாழ்ந்தது போதும் என
ஒட்டு மொத்தமாய்
இவ்வுலகையே
துறந்து விட்டானோ ?
அவன்
இருக்கும்போதே
ஏதாவது கொஞ்சம்
கொடுத்திருக்கலாமோ ???
ஊருக்குத்தான்
அவன் பித்தன் !
உள்ளுக்குள்ளே
அவன் சித்தன் !
ஊரார்,
அவன் உடம்பெல்லாம்
ஒரே
அழுக்கு என்றார்கள் !
அவன் இருப்பது
அந்த வீதிக்கே
இழுக்கு என்றார்கள் !
அவனிடமிருந்தது
ஒரேயொரு
கிழிந்த வேட்டி !
தெருநாய்கள்தான்
அவனுக்கிருக்கும்
ஒரே போட்டி !
அவனுக்கு
எப்போதும்
கண்ணில் ஒரு
கிறக்கமிருக்கும் !
பகல் பொழுதிலும்
மரத்தடியில்
உறக்கமிருக்கும் !
எண்ணையே
காணாதிருந்தது
அவன் தலை !
பரிகசிக்கக்கூடியது தான்
அவன் நிலை !
இப்போதுதான்
அவன் தாழ்ந்தவனாம் !
ஒருகாலத்தில்
நன்றாக வாழ்ந்தவனாம் !
வருவோர்க்கெல்லாம்
வாரி வாரிக்
கொடுத்தவனாம் !
அந்த மட்டில்
அவன்
தன்னைத்தானே
கெடுத்தவனாம் !
சில
குறும்புக்காரர்கள்
அவனை
கல்லால் அடித்தார்கள் !
சில
" குடும்பக்காரர்கள் "
அவனை
சொல்லால் அடித்தார்கள் !
தெருக்கோடியில்
இருக்கிறது
ஒரு
தேநீர் கடை !
மிகவும் பிரசித்தம்
அதன்
மாலை நேரத்து வடை !
எப்போதுமிருக்கும்
அங்கு
வாடிக்கையாளர்களின் படை !
கடையையே
சுற்றிச்சுற்றி வரும்
இந்தப் பித்தனின் நடை !
கடைக்காரன்
அவனுக்குக்
கொடுப்பான்
மீந்ததையெல்லாம் !
இவனும்
வாங்கியுண்பான்
அவன்
ஈந்ததையெல்லாம் !
நானும்
அவ்வப்போது
அவனைப்
பார்த்திருக்கிறேன் !
நெருங்கும்போதெல்லாம்
பயந்து போய்
வேர்த்திருக்கிறேன் !
ஒரு நாள்,
ஒரு முக்கியப் பணி !
போய்க்கொண்டிருந்தேன் !
எதிரே இவன் !
வந்தவன்
என்னைப் பார்த்து
நகைத்தான் !
நான்
வந்த எரிச்சலைக்
காது வழியாகப்
புகைத்தேன் !
ஆனாலும்,
போன காரியம்
இனிதே
முடிந்து விட்டது !
வாழ்வில்
ஒரு பொழுது
நல்லபடியாய்
விடிந்து விட்டது !
திரும்பி வரும்போது
அந்தப் பித்தனுக்கு
கடையில்
வடை வாங்கித்தர
நினைத்திருந்தேன் !
அதிசயமாய்
அவனைக் காணவில்லை !
மறுநாள்
எதிர்பார்த்தேன் !
அவன் வரவில்லை !
தன தரிசனத்தை
எனக்குத் தரவில்லை !
மறுநாளுக்கு
மறுநாள் .........
ம்ஹூம் !
எங்கு போனான் ?
என்ன ஆனான் ?
சட்டென்று
ஏதோ ஒன்று
மண்டைக்குள்
வெட்டியது !
ஏனோ தெரியவில்லை
என் மனதே
என்னைத் திட்டியது !
பித்தனவன்
தன் இருப்பிடத்தையே
மறந்து விட்டானோ ?
இல்லை,
வாழ்ந்தது போதும் என
ஒட்டு மொத்தமாய்
இவ்வுலகையே
துறந்து விட்டானோ ?
அவன்
இருக்கும்போதே
ஏதாவது கொஞ்சம்
கொடுத்திருக்கலாமோ ???
உங்கள் கவிதைகளையும் ஓர் நாள் தமிழ் பேசும்
ReplyDeleteநல்லுலகம் தேடி அலையும் நிலை வரும் :(
மிகவும் அருமையான கவிதை நடை யாரும்
கவனிப்பார் அற்றுக் கிடக்கிறதே!!!!........பிற
தளங்களிலும் இணைத்துப் பகிருங்கள் சகோதரரே
அருமையான இந்தக் கவிதை வரிகள் அனைவரையும்
சென்றடைய .என் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே
உங்கள் கவிதைகளுக்கு .மிக்க நன்றி பகிர்வுக்கு .
ஒரு எளிமையான குடில் போல இருக்கும் எனது வலைப்பூ விற்கு தங்களின் முதல் வருகை ! எப்படி வரவேற்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறேன். அருமையான தங்களின் கருத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றிகள் தோழி !
Deleteஇனிதே காரியம் முடிந்து விட்டபடியால் பித்தனை நினைக்க வைத்ததும், முடிவில் வருத்தப்பட்டதும் என பலவற்றை சிந்திக்க வைக்கிறது...
ReplyDeleteதங்களின் தொடர்ந்த வாசிப்புக்கு மிகவும் நன்றி நண்பரே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎதுகை மோனைகள்
ReplyDeleteமாறி மாறி பதம் பார்த்து செல்கிறது
கண்கள் வழியாக மனதை .
சமுகத்தின் சாடல்
உயிர்ப்பின் நிலையாமை
இருக்கும் போது தோன்றுவதில்லை
தோன்றும் போது இருப்பு இல்லை
வாழ்வின் தத்துவம் அழகிய தனித்துவ நடையில் அருமை நண்பா
கவிதையை விட அதற்குக் கவிதையாக தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் கவிதையை இன்னும் அழகுபடுத்துகிறது தோழி ! நன்றிகள் ஆயிரம் !
Deleteஅருமையாக கையாள்கிறீர்கள் வார்த்தைகளை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பு வந்தால் உடனே செய்து விட வேண்டும் .அதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலேயே போய் விடலாம்.
கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டு பின்னூட்ட மிட்டதற்கு மிகவும் நன்றிகள் தோழி !
ReplyDelete