படைப்பு
ச்சை !
சத்தியமாய்
அது ஒரு
படமில்லை !
அந்த நடிகனுக்கு
இனி என் மனதில்
இடமில்லை !
வெடித்தே விட்டது
தலை !
வெறுத்தே விட்டது
கலை !
அந்த இயக்குநனுக்கு
சுத்தமாய் இல்லை
டேஸ்ட் !
மொத்தமாய்
மூன்று மணிநேரம்
வேஸ்ட் !
இடைவேளை
வருவதற்குள்
முடிந்து விட்டன
இரண்டு மூன்று
யுகங்கள் !
கடித்துத் துப்பியே
காணாமல் போயின
கைவிரலின்
நகங்கள் !
ஆறுதல்
தரவில்லை
பாட்டு கூட !
அதை விட
இனிமையாய்
ஒலிக்கும்
தீபாவளி வேட்டு கூட !
படம் பார்த்தே
பலருக்கு வந்தது
காய்ச்சல் !
படம் முடிந்ததும்
தியேட்டரை விட்டு
அனைவரும் ஒரே
பாய்ச்சல் !
சத்தியமாய்
அது இல்லை
சினிமா !
சொல்லப்போனால்
அது
மூன்று மணிநேர
எனிமா !
போய் விட்டது
முன்னூறு ரூபாய்
தண்டமாக !
அரங்கை விட்டு
வெளியே வந்தோம்
கழுத்தறுந்து
முண்டமாக !
தன் பங்கை
நண்பன்
நிச்சயமாக
தருவானா ?
இனி நான்
படத்திற்குக்
கூப்பிட்டால்
வருவானா ?
இணையத்தில்
கண்டபடி
கிழித்திருந்தார்கள் !
மொத்த மதிப்பெண்ணில்
எண்பது விழுக்காட்டைக்
கழித்திருந்தார்கள் !
முன்னரே
விமர்சனத்தை
வாசித்திருக்கலாம் !
போவதற்கு முன்
கொஞ்சமாவது
யோசித்திருக்கலாம் !
ஒரு வழியாய்
வீடு வந்தபோது,
சோர்ந்து அமர்ந்திருந்தான்
சித்தப்பா பையன் !
அவனுக்கு
வயது
பத்து தான் !
படிப்பில் அவன்
சுடர்விடும்
முத்து தான் !
கேட்டதில்
பள்ளியில் ஏதோ
போட்டியாம் !
ஓவியம்
வரைய வேண்டுமாம் !
" ப்பூ.... இவ்வளவுதானா ?
கண்ணா ..........
நான்
கரைத்துக்
குடித்தவன்
கலைமகள் எழுதிய
காவியத்தை !
இதோ தீட்டுகிறேன்
காகிதத்தில்
ஓவியத்தை ! " என்றேன்
" பெண்ணை
வரையலாமா ? "
என்றதற்கு,
" சரி " என்றான்
சுட்டிப் பையன் !
மகிழ்ச்சியில்
வாயில் வரவில்லை
வாக்கியம் !
கிடைத்தது
காதலியை வரையும்
பாக்கியம் !
எடுத்தேன்
காகிதத்தை !
தொடுத்தேன்
பேனா எனும்
ஆயுதத்தை !
முதலில் முகம் !
வட்டமாய்
வரைய நினைத்து
கொஞ்சம்
நீள்வட்டமாய்ப்
போய் விட்டது !
முகம்,
வட்டமாய்த் தான்
இருக்கவேண்டும் என்று
சட்டமா என்ன !
பிறை நிலா போல
வரைய முனைந்தேன்
நெற்றியை !
வெற்றி கிட்டவில்லை !
அடுத்து கண் !
அதையாவது
அழகாய் வரையும்
என் நினைப்பில்
விழுந்தது மண் !
மை கொட்டி
அங்கே ஆனது
புள்ளியாய்
ஒரு புண் !
மச்சம் என்று
சொல்லி
சமாளித்து விடலாம் !
அடுத்து ,
புருவம் கொஞ்சம்
நீண்டு விட்டது !
உயிரிழந்து
அந்த ஓவியம்
மாண்டு விட்டது !
அடுத்தது மூக்கு !
அச்சச்சோ !
பெரிதாகப்
போய் விட்டதே
ஓட்டை !
விட்டு விடுவேனோ
நான்
ஓவியத்தில்
கோட்டை !
அடுத்து
வாய் ஆனது
சப்பையாக !
எறியத்தான் வேண்டும்
இனி
இக்காகிதத்தைக்
குப்பையாக !
ஒரு நப்பாசையில்
வரைந்த ஓவியத்தை
தம்பிப்பயலிடம்
காட்டினேன் !
அவன்
ஒரே வார்த்தையில்
சொன்னான் !
" ச்சீச்சீ.....
இந்தப் படம்
நல்லாயில்ல "
வெறும்
அரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !
ச்சை !
சத்தியமாய்
அது ஒரு
படமில்லை !
அந்த நடிகனுக்கு
இனி என் மனதில்
இடமில்லை !
வெடித்தே விட்டது
தலை !
வெறுத்தே விட்டது
கலை !
அந்த இயக்குநனுக்கு
சுத்தமாய் இல்லை
டேஸ்ட் !
மொத்தமாய்
மூன்று மணிநேரம்
வேஸ்ட் !
இடைவேளை
வருவதற்குள்
முடிந்து விட்டன
இரண்டு மூன்று
யுகங்கள் !
கடித்துத் துப்பியே
காணாமல் போயின
கைவிரலின்
நகங்கள் !
ஆறுதல்
தரவில்லை
பாட்டு கூட !
அதை விட
இனிமையாய்
ஒலிக்கும்
தீபாவளி வேட்டு கூட !
படம் பார்த்தே
பலருக்கு வந்தது
காய்ச்சல் !
படம் முடிந்ததும்
தியேட்டரை விட்டு
அனைவரும் ஒரே
பாய்ச்சல் !
சத்தியமாய்
அது இல்லை
சினிமா !
சொல்லப்போனால்
அது
மூன்று மணிநேர
எனிமா !
போய் விட்டது
முன்னூறு ரூபாய்
தண்டமாக !
அரங்கை விட்டு
வெளியே வந்தோம்
கழுத்தறுந்து
முண்டமாக !
தன் பங்கை
நண்பன்
நிச்சயமாக
தருவானா ?
இனி நான்
படத்திற்குக்
கூப்பிட்டால்
வருவானா ?
இணையத்தில்
கண்டபடி
கிழித்திருந்தார்கள் !
மொத்த மதிப்பெண்ணில்
எண்பது விழுக்காட்டைக்
கழித்திருந்தார்கள் !
முன்னரே
விமர்சனத்தை
வாசித்திருக்கலாம் !
போவதற்கு முன்
கொஞ்சமாவது
யோசித்திருக்கலாம் !
ஒரு வழியாய்
வீடு வந்தபோது,
சோர்ந்து அமர்ந்திருந்தான்
சித்தப்பா பையன் !
அவனுக்கு
வயது
பத்து தான் !
படிப்பில் அவன்
சுடர்விடும்
முத்து தான் !
கேட்டதில்
பள்ளியில் ஏதோ
போட்டியாம் !
ஓவியம்
வரைய வேண்டுமாம் !
" ப்பூ.... இவ்வளவுதானா ?
கண்ணா ..........
நான்
கரைத்துக்
குடித்தவன்
கலைமகள் எழுதிய
காவியத்தை !
இதோ தீட்டுகிறேன்
காகிதத்தில்
ஓவியத்தை ! " என்றேன்
" பெண்ணை
வரையலாமா ? "
என்றதற்கு,
" சரி " என்றான்
சுட்டிப் பையன் !
மகிழ்ச்சியில்
வாயில் வரவில்லை
வாக்கியம் !
கிடைத்தது
காதலியை வரையும்
பாக்கியம் !
எடுத்தேன்
காகிதத்தை !
தொடுத்தேன்
பேனா எனும்
ஆயுதத்தை !
முதலில் முகம் !
வட்டமாய்
வரைய நினைத்து
கொஞ்சம்
நீள்வட்டமாய்ப்
போய் விட்டது !
முகம்,
வட்டமாய்த் தான்
இருக்கவேண்டும் என்று
சட்டமா என்ன !
பிறை நிலா போல
வரைய முனைந்தேன்
நெற்றியை !
வெற்றி கிட்டவில்லை !
அடுத்து கண் !
அதையாவது
அழகாய் வரையும்
என் நினைப்பில்
விழுந்தது மண் !
மை கொட்டி
அங்கே ஆனது
புள்ளியாய்
ஒரு புண் !
மச்சம் என்று
சொல்லி
சமாளித்து விடலாம் !
அடுத்து ,
புருவம் கொஞ்சம்
நீண்டு விட்டது !
உயிரிழந்து
அந்த ஓவியம்
மாண்டு விட்டது !
அடுத்தது மூக்கு !
அச்சச்சோ !
பெரிதாகப்
போய் விட்டதே
ஓட்டை !
விட்டு விடுவேனோ
நான்
ஓவியத்தில்
கோட்டை !
அடுத்து
வாய் ஆனது
சப்பையாக !
எறியத்தான் வேண்டும்
இனி
இக்காகிதத்தைக்
குப்பையாக !
ஒரு நப்பாசையில்
வரைந்த ஓவியத்தை
தம்பிப்பயலிடம்
காட்டினேன் !
அவன்
ஒரே வார்த்தையில்
சொன்னான் !
" ச்சீச்சீ.....
இந்தப் படம்
நல்லாயில்ல "
வெறும்
அரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !
அவரவர் படைப்பு அவரவர்க்கு அழகுதான்! அதை எளிமையாக புரிய வைத்த பாங்கு சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி ! கவிதையின் கருத்தை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே
Deleteதிரைப்படத்தையும் படத்தையும் - இரண்டும் சரியில்லை...
ReplyDeleteவரிகளை ரசித்தேன்...
தங்களது தொடர் வாசிப்புக்கு நன்றி தனபாலன்
Delete#வெறும்
ReplyDeleteஅரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !#
அவரவரின் உழைப்பு அவரவர்க்கு அழகுதான். மைதானத்தில் விளையாடுபரைப் பார்த்து எளிதாகக் குறை கூறிவிடலாம். இறங்கி ஆடினால் தான் தெரியும் அதன் போக்கு. அருமையான வரிகள் .
கவிதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு பாராட்டியதற்கு நன்றி தோழி
Deleteநல்ல பதிவு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி நண்பரே
Delete