Skip to main content
கர்மா

 




அது ஒரு
நட்சத்திர நடிகனின்
படம் !
அதற்குத்தான்
போவேனென்று
நண்பன்
ஒரே அடம் !

அதுதான்
அப்படத்தின்
முதல் நாள்
ஓட்டம் !
அதனாலேயே
அங்கு நிலவியது
கட்டுக்கடங்காத
கூட்டம் !

எப்படியோ
வந்து விட்டோம் !
சீட்டு வாங்குவதற்குள்
நொந்து விட்டோம் !

ஒளிர்ந்தது
திரை !
ஆரம்பித்தது
விசில்களின்
உரை !

அங்கே
' தலைவன் '
படுத்துக்கொண்டே
போட்டான்
சண்டை !
கத்திக் கத்தியே
ஒவ்வொருவனுக்கும்
வறண்டது
தொண்டை !

நாங்கள்
அமர்ந்திருந்தது
அரங்கத்தின்
கடைசி வரிசையில் !

மூலையில் இருந்து
முதல்
மூன்று இருக்கைகளில்
அவர்கள் இருந்தார்கள் !

ஞாயிறுதோறும்
சந்தை செல்லும் - ஒரு
தந்தை !
வீட்டில்
சும்மாயிருக்கும்  - ஒரு
அம்மா !
அப்புறம் அவள்,
அவர்களின் மகள் !

அவர்கட்கு அடுத்து
நண்பனும் நானும் !

அவள்,
பக்குவமான
பருவத்தில்
இருந்தாள் !
இளமையைப்
பதற வைக்கும்
உருவத்தில்
இருந்தாள் !

கன்னியைக் கண்டதும்
நண்பனுக்கு
மூக்கு
விடைத்துக் கொண்டது !
காது,
அடைத்துக் கொண்டது !

அவன்,
அடிக்கடி
அவளைப் பார்த்து
மலைத்தான் !
கலைந்த தலையை
மறுபடி மறுபடி
கலைத்தான் !
சந்தர்ப்பம் உருவாக்க
வேண்டுமென்றே
வண்டி சாவியைத்
தொலைத்தான் !
குறும்புக் காரன் என்று
அக்குடும்பத்தின் மனதில்
நிலைத்தான் !

அதுமட்டுமா,

கன்னியைக்கவர
இவன் பங்குக்கு
கத்திக் கத்தியே
கலங்கடித்தான்
அரங்கை !
அவன்
சேஷ்டைகள் யாவும்
ஒத்திருந்தன
ஒரு குரங்கை !

பொறுக்க முடியாமல்
நான் கேட்டேன் !

" நண்பா !
இவ்வாறு செய்வது
பண்பா ? "

அவன் சொன்னான்,

" போடா
கையாலாகாத
கோழை !
வாலிபத் தோட்டத்தில்  - நீ
வீழ்ந்து விட்ட
வாழை !
வேண்டாமென்றால்
ஒத்திக் கொள் !
ஆனமட்டும்  வாயைப்
பொத்திக் கொள் ! "

அவ்வளவுதான்
அமைதியானேன் !

நண்பன்
மீண்டும் ஏறினான்
முருங்கை !
சிதைத்தான்
அக்குடும்பத்தின்
மன ஒருங்கை !

படம்
எப்போது
முடியுமென
அவர்கள்
வெறித்தார்கள் !
முடிந்ததும்
அவசரமாய்
வெளியே
தெறித்தார்கள்  !

நண்பன்
மீண்டும் எவளிடமாவது
ஆதியிலிருந்து ஆரம்பிக்க
வீதியை நோட்டமிட்டான் !

அலையென
வந்தவன்
சிலையென
நின்று விட்டான் !

அங்கே,

இருசக்கர வாகனத்தில்
ஒருவனின் முதுகை
ஒட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு மங்கை !
அது
அந்த நண்பனின்
திருமணமாகாத
தங்கை !!!

Comments

  1. முடிவில் நல்ல அதிர்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கவிதையை உள்வாங்கி வெளியிட்ட கருத்துக்கும் நன்றி திரு. தனபாலன் அவர்களே !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர