வேதாளம்
அது ஒரு
விரும்பத்தகாத
விபத்து !
விளையாடிவிட்டது
விதி வாழ்வில்
உரத்து !
வற்றி விட்டது
உடம்பில்
சுரத்து !
குறைந்து விட்டது
குருதியின்
வரத்து !
உடைந்து விட்டது
எலும்பு !
அடங்கி விட்டது
அலும்பு !
ஒரு எட்டு கூட
நடக்க முடியவில்லை !
துணையின்றி
இம்மியளவும்
கடக்க முடியவில்லை !
பாழும் உடம்பை
மூலையில் போய்
முடக்க முடியவில்லை !
அழுகை வந்தால்
அணு அளவும்
அடக்க முடியவில்லை !
உணவு
பிடிக்கவில்லை !
காதலி
கசந்து விட்டாள் !
தொலைகாட்சி
திகட்டிப் போனது !
அலைபேசி
அநாதையானது !
அன்று .........
நடந்து என்ன ?
பலநாட்களாக
பின் தொடரப்பட்டவள்
புன்னகைத்து விட்டாளென்று
பார்ட்டி வைத்திருந்தான்
பாழாய்ப் போன நண்பன் !
விருந்தை
மருந்து போல
அருந்தலாமென்றுதான்
போயிருந்தேன் !
போதையில்
கண்ணும் தெரியவில்லை !
மயக்கத்தில் ஒரு
மண்ணும் தெரியவில்லை !
அளவுக்கு
மீறி விட்டது !
ஒட்டு மொத்தமாய்
ஏறி விட்டது !
வாகனத்தை
அணுகிய போது
குறைவாய்க் குடித்தவன்
உதவ வந்தான் !
அவனிடம்,
" போடா பேமானி
யாரையும் நான்
அண்டியில்லை !
நான் ஒட்டாவிட்டால்
இது என்
வண்டியில்லை ! "
என்று,
நானே
எடுத்தேன் !
எடுத்தவுடன்
வேகத்தைத்
தொடுத்தேன் !
லாரியொன்றை
முந்த நினைத்து,
உள்ளங்கையை
இறுக்கினேன் !
உந்து விசையை
முறுக்கினேன் !
குறுக்குச்சாலை
குறுக்கிட்டதை
கவனிக்கவில்லை !
கடங்கார
கார்க்காரன்
கண்ணிமைக்கும் நொடியில்
காரியத்தைக்
கெடுத்தான் !
அப்புறம்
நடந்தது
நினைவில்லை !
விழித்துப்பார்த்தால்
சுற்றிலும் ஒரே
மருந்தின்
வாசம் !
நல்ல வேளை
உடம்பில்
ஓடிக்கொண்டிருந்தது
சுவாசம் !
வலது காலை
அந்தரத்தில் தூக்கிக்
கட்டியிருந்தார்கள் !
குடித்து விட்டு
ஒட்டியதற்குக்
கண்டபடி
திட்டியிருந்தார்கள் !
ஆறுமாதம்
அஞ்ஞாத வாசம் !
ஒருவழியாய்
மீண்டு வந்து
மீண்டும் அலுவலகம் !
யாவரும்
வருந்தி வருந்தி
நலம் விசாரித்தார்கள் !
துருவித் துருவி
நடந்த விபத்தின்
குலம் விசாரித்தார்கள் !
" குடித்தேன்
இடித்தேன்
துடித்தேன் " - என
முடித்தேன் !
காலம்
சக்கரமாய்
உருண்டு போனது !
விபத்தின்
ஞாபகம் மனத்திரையில்
இருண்டு போனது !
ஒரு
வியாழக்கிழமை
பார்ட்டிக்கு அழைத்தான்
பக்கத்து இருக்கைக்காரன் !
" அக்கா மகள்
சமைந்து விட்டாளாம் ! "
மறுக்கத்தான்
நினைத்தேன் !
ப்ச் !
முடியவில்லை !
அது ஒரு
விரும்பத்தகாத
விபத்து !
விளையாடிவிட்டது
விதி வாழ்வில்
உரத்து !
வற்றி விட்டது
உடம்பில்
சுரத்து !
குறைந்து விட்டது
குருதியின்
வரத்து !
உடைந்து விட்டது
எலும்பு !
அடங்கி விட்டது
அலும்பு !
ஒரு எட்டு கூட
நடக்க முடியவில்லை !
துணையின்றி
இம்மியளவும்
கடக்க முடியவில்லை !
பாழும் உடம்பை
மூலையில் போய்
முடக்க முடியவில்லை !
அழுகை வந்தால்
அணு அளவும்
அடக்க முடியவில்லை !
உணவு
பிடிக்கவில்லை !
காதலி
கசந்து விட்டாள் !
தொலைகாட்சி
திகட்டிப் போனது !
அலைபேசி
அநாதையானது !
அன்று .........
நடந்து என்ன ?
பலநாட்களாக
பின் தொடரப்பட்டவள்
புன்னகைத்து விட்டாளென்று
பார்ட்டி வைத்திருந்தான்
பாழாய்ப் போன நண்பன் !
விருந்தை
மருந்து போல
அருந்தலாமென்றுதான்
போயிருந்தேன் !
போதையில்
கண்ணும் தெரியவில்லை !
மயக்கத்தில் ஒரு
மண்ணும் தெரியவில்லை !
அளவுக்கு
மீறி விட்டது !
ஒட்டு மொத்தமாய்
ஏறி விட்டது !
வாகனத்தை
அணுகிய போது
குறைவாய்க் குடித்தவன்
உதவ வந்தான் !
அவனிடம்,
" போடா பேமானி
யாரையும் நான்
அண்டியில்லை !
நான் ஒட்டாவிட்டால்
இது என்
வண்டியில்லை ! "
என்று,
நானே
எடுத்தேன் !
எடுத்தவுடன்
வேகத்தைத்
தொடுத்தேன் !
லாரியொன்றை
முந்த நினைத்து,
உள்ளங்கையை
இறுக்கினேன் !
உந்து விசையை
முறுக்கினேன் !
குறுக்குச்சாலை
குறுக்கிட்டதை
கவனிக்கவில்லை !
கடங்கார
கார்க்காரன்
கண்ணிமைக்கும் நொடியில்
காரியத்தைக்
கெடுத்தான் !
அப்புறம்
நடந்தது
நினைவில்லை !
விழித்துப்பார்த்தால்
சுற்றிலும் ஒரே
மருந்தின்
வாசம் !
நல்ல வேளை
உடம்பில்
ஓடிக்கொண்டிருந்தது
சுவாசம் !
வலது காலை
அந்தரத்தில் தூக்கிக்
கட்டியிருந்தார்கள் !
குடித்து விட்டு
ஒட்டியதற்குக்
கண்டபடி
திட்டியிருந்தார்கள் !
ஆறுமாதம்
அஞ்ஞாத வாசம் !
ஒருவழியாய்
மீண்டு வந்து
மீண்டும் அலுவலகம் !
யாவரும்
வருந்தி வருந்தி
நலம் விசாரித்தார்கள் !
துருவித் துருவி
நடந்த விபத்தின்
குலம் விசாரித்தார்கள் !
" குடித்தேன்
இடித்தேன்
துடித்தேன் " - என
முடித்தேன் !
காலம்
சக்கரமாய்
உருண்டு போனது !
விபத்தின்
ஞாபகம் மனத்திரையில்
இருண்டு போனது !
ஒரு
வியாழக்கிழமை
பார்ட்டிக்கு அழைத்தான்
பக்கத்து இருக்கைக்காரன் !
" அக்கா மகள்
சமைந்து விட்டாளாம் ! "
மறுக்கத்தான்
நினைத்தேன் !
ப்ச் !
முடியவில்லை !
மறுபடியும் 'விபத்து' தேவையா...?
ReplyDeleteமனம் ஒரு குரங்கு என்பதை விட, பழையபடியே முருங்கை மரம் ஏறிவிடும் வேதாளம் ! என்னதான் பட்டாலும் அது திருந்தாது ! என்பதையே இக்கவிதை உணர்த்துகிறது தனபாலன் ! தொடர் வாசிப்புக்கு நன்றி !
Deleteஅருமை நண்பா இன்றைய இளைங்கர்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு பதிவு .......துக்கம் என்றாலும் சந்தோசம் என்றாலும் தயங்காமல் விஷம் அருந்துகிரார்கலே இவர்கள் மரணத்தை எதிர்நோக்கும் ஞானியோ என்று கூட தோனுகிறது .........சமீபமாக என் முகப்பில் உங்கள் பதிவுகள் வரவில்லை என்ன காணம் தெரியவில்லை இனி தொடர்ந்த படிக்கிறேன்
ReplyDelete