Skip to main content
பழைய காதலி





அவள்,
நிறம் மாறியிருந்தாள்
உரு மாறியிருந்தாள்,
ஆனாலும்
அந்தக் கண்கள்
காட்டிக்கொடுத்து விட்டன,
அவள்,
அவள் தானென்று !

ஆறுவயது
குழந்தையொன்று
அவளை
அம்மாவென்று
அழைத்தது !

ஒரு
சபிக்கப்பட்ட
நொடியில்,
எங்கள் பார்வைகள்
மீண்டுமொருமுறை
சந்தித்துக் கொண்டன !

அவள் கண்களில்
அந்தக் கடைசி ஈரம்
இன்னும் காயவில்லை !

அதிர்ச்சியை
வெளிக்காட்டாத
முதிர்ச்சியோடு
புன்னகைக்க முயன்றாள் !

குழந்தை
அவளைப் போலவேயிருந்தது !

அது
" அங்கிள் "  என்றழைத்ததை
அநேகமாய்
அவள் ரசிக்கவில்லை !

நின்றபடி
நாகரிக இடைவெளியில்
நானும் அவளும்
நலம் விசாரித்தோம் !

முகம் பார்த்துப்
பேசாமல் - அவள்
நகம் பார்த்துப்
பேசினாள்  !
நான்,
நிலம் பார்த்துப்
பேசினேன் !

சில வருடங்கள்
சில வார்த்தைகளில்
முடிந்து விட,
மௌனம் வந்து
இருவர் உதட்டிலும்
படிந்து விட .............

அதன் பிறகு
எங்கள்
உணர்வுகள் மட்டும்
ஊமையாய்
ஏதோ பேசிக்கொண்டிருந்தன !

இறுதியாக,
விடை பெற்றுவிட்டு
நடை பயிலும்போது
ஒருமுறை
திரும்பிப்பார்த்தாள் !

வெறுமனே
திரும்பிப் பார்த்தாளோ ?
வேண்டுமென்றே
விரும்பிப் பார்த்தாளோ ?

இனியெப்போதும்
அவளைப்
பார்க்கக் கூடாதென்று
நினைத்துக் கொண்டேன் !

காரணம்,
அவளிடம்
ஒரேயொரு
பொய் சொல்லியிருந்தேன் !
எனக்குத் திருமணம்
ஆகிவிட்டதென்று !!!


Comments

  1. வார்த்தைகளில்

    உணர்த்த முடியாத

    உணர்வுகளை

    அழகாக வடித்து இருக்கிறீர்கள்

    அருமை .........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர