Skip to main content



 முக்கியமாக ஒன்று


ஆலையில் வைத்து
மாலையில் நேற்று
மேலதிகாரி திட்டிவிட்டார் !
மேலிடம் கொடுத்த
மேலான வேலையை
மேற்கொண்டு முடிக்க
என்னைப் பணித்திருந்தார்,
மேனி வளையவில்லை - சற்றுநேரம்
மேஜையில் படுத்ததில்
மேலும் இழுத்து விட்டது - ஆகவே
மேற்படி திட்டிவிட்டார் !

கத்துக்குட்டிகள் முன்னிலையில்
கத்திவிட்டார் !

அவமானமாகிவிட்டது                                         
ஆத்து ஆத்துப் போனது !

எல்லா வேலையையும்
என் தலையில் கட்டி
குல்லா போட்ட
கல்லா முதலாளியாய்
அல்லா என்றபடி
அவர் அங்கே அமர்ந்திருப்பார்,
இங்கே நான் சற்றுநேரமும்
நில்லாமல்,
வேதனையை வெளியில்
சொல்லாமல்
உண்பதற்கும் நேரம்
இல்லாமல்
பறந்து பறந்து
விரைந்து முடிக்கவேண்டும்
நல்லாயிருக்கிறது கதை !

ச்சே !
இதெல்லாம் ஒரு
உழைப்பா ?
இப்படியும் ஒரு
பிழைப்பா ?

வைத்துக்கொள்கிறேன் !
வஞ்சகத்தை நெஞ்சோடு
தைத்துக் கொள்கிறேன் !

மாலை வந்தது !
ஆலை முடிந்தது !

விதியை நொந்தேன்
வீதியில் நடந்தேன் !

தேநீர் அருந்தியாவது
தேற்றிக்கொள்ளலாமென
கடையை நோக்கி
நடையைப் போட்டேன் !

ஆறு ரூபாய்க்கு
அரைடம்ளர் கொடுத்தான் !

திகட்டுமளவு
தித்திப்பு இருந்தும்
தேநீர் எனக்குத்
தித்திக்கவில்லை !

குடித்துவிட்டு,
காசுகொடுத்து -  கணக்கை
முடித்துவிட்டு,
நிறுத்தத்தில்
நின்றபோது
வருத்தம் என்னை
வறுத்தெடுத்தது !

வாட்டத்தைப் போக்க
நோட்டத்தப் போட்டேன் !

மரக்கிளையில்
பட்டுப்போன்ற - இரண்டு
சிட்டுக்குருவிகள் !

கீச்கீச்சென
காதுக்குள் அவை
கிச்சுக்கிச்சு மூட்டின !

தரையைத் துறந்து
இரையை மறந்து,
குருவிகளிரண்டும்
அருவியைப் போலக்
காதல் பொழிந்தன !

அந்தப்பக்கம்
ஒரு அணில்,
விழுந்த பழத்தைக்
கவ்விக்கொண்டு
தவ்விச்சென்றது !

பார்க்கப்பார்க்க
பாரம் எல்லாம்
பனித்துளியாக,
காலம் என்பது
பொன்னில் செய்த
மணித்துளியாக,

ஆஹா !!!
இதுவல்லவோ
இயற்கையின் மகத்துவம் !
இன்னும் சொன்னால்
இறைமையும்
இயற்கையும்
ஒரே சமத்துவம் !

அப்புறம்
முக்கியமாக ஒன்று,

அணிலுக்காகவும்
குருவிக்காகவுமாவது
மரங்களை
விட்டு வையுங்கள் !
முடிந்தால்
வீட்டருகே ஒரு செடியையாவது
நட்டு வையுங்கள் !!!







Comments

  1. அருமை. எந்த வரி மிகப் பிடித்த வரி என்று சொல்லத் தெரியவில்லை எனக்கு, அத்தனை வரிகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாகப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி தோழி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர