Skip to main content
 ஒரு விபத்து










வெகு சீக்கிரமாய்
வீடு போகவேண்டும் !

ஊரிலிருந்து
வந்திருக்கிறாள்
மனைவியின் தங்கை !
வற்றாத பேச்சில்
அவள் ஒரு கங்கை !

இன்றைக்கென்று அந்த
சொட்டைத்தலையன்
எதற்கெடுத்தாலும்
நொட்டை சொல்கிறான் !

( குறிப்பு :  மேலதிகாரிக்கு முன்மண்டையில் முடி இல்லை )

அதொன்றுமில்லை
அவசரமென்று
அழுதுகொண்டே
செய்த பணியல்லவா !
பழுது இருக்கத்தான் செய்யும் !

புள்ளிவிவரத்தில்
புள்ளி ஒன்று பிசகிவிட்டது !
பத்து
நூறாகிவிட்டது !
கண்டறிவதற்குள்
மூளை உருகி
ஆறாகிவிட்டது !

அப்பாடா !

அப்புறம்,
ஒருவழியாய்
மணி அடித்தது !
பணி முடிந்தது !

போதுமடா இந்த
ஆலைக்காட்சி !
இனி போகவேண்டும்
குடும்பத்தோடு
மாலைக்காட்சி !

வாகனத்தில்
விரைந்தேன் !
வழிநெடுக
ஒலிப்பானால்
இரைந்தேன் !

திடீரென்று,
சாலையில் ஓர் கூட்டம் !
ஒவ்வொருத்தன் முகத்திலும்
இனம் புரியாத வாட்டம் !

குறுக்கே வந்தவனைத்
திட்டினேன் !
தலையைக் கொஞ்சம்
எட்டினேன் !
பார்த்தேன் !

அவன்
இவ்வுலகை
மறந்திருந்தான் !
ஏறத்தாழ
இறந்திருந்தான் !

ச்சே !
என்ன ஒரு
இரக்கமில்லாத விபத்து !
இங்கிருந்து கிளம்புவதுதான்
இப்போதைக்கு ' சமத்து ' !

அதற்கப்புறம்
நெரிசலில்
நொண்டி,
நெண்டி,
பிளந்து ,
அளந்து .........

வீடு வருவதற்குள்
ஓடு கழன்றுவிட்டது !

வந்தவுடன்
குடும்பம் பறந்தது !
தாமதம் ஏனென்று
கேள்வியால்
என்னைக் கறந்தது !

விளங்கச் சொல்ல
வேளை இதுவல்லவென்று ,
 
உடனடியாகப்
போய்க் குளித்தேன் !
அந்த விபத்தை
என் மனத்தினின்று கழித்தேன் !

அப்புறம் நாங்கள்
சினிமா போனோம் !
சீட்டி அடித்தோம் !
கொண்டாடினோம் !
உயர்தர உணவகத்தில்
எதைத் தின்பதென்று
திண்டாடினோம் !

எல்லாம் முடிந்து
உற்சாகங்கள் வடிந்து,
உறங்கும் சமயம்
அது தோன்றியது !

சற்றுநேரமாவது
அங்கே
நின்றுவிட்டு
வந்திருக்கலாமோ ?



Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர