Skip to main content
மன்னிப்பு











நானும் அவளும்
ஓடி வந்துவிட்டோம் !
தனியொரு வாழ்க்கை
தேடி வந்துவிட்டோம் !

அவளுக்கு
நிச்சயம் ஆகியிருந்தது !
அட்டகாசமாக
ஆகிவிட்டுப் போகட்டும் !
அதனால் என்ன ?

பதிவு அலுவலக
வாயிலில்
ஓரமாய் வீற்றிருந்த
' கோயிலில் '
நண்பர்கள் சூழ்ந்து
அன்பால் எங்களுக்கு
வேலி கட்ட,
நான் அவளுக்குத்
தாலி கட்டினேன் !

எதிர்காலம் நினைத்து
அவள் வருந்த,
ஆறுதல் வார்த்தைகளால்
நான்
அவளுக்கு மருந்த,
அப்புறம்,
நல்லதொரு உணவகத்தில்
நண்பர்கட்கு
நாங்கள் விருந்த,
அவர்களும்
மகிழ்வோடு அருந்த...........

இருமனம்
இணைந்து விட்டது !
திருமணம்
முடிந்து விட்டது !

மாலை வந்தது !
மாலைக்கு
வேலை வந்தது !

நானும் அவளும்
தனித்து விடப்பட்டோம் !
இன்ப மொழிகளால்
இனித்து விடப்பட்டோம் !

பூ, பழம் , கட்டில்
நான்,அவள் !

பலநாள்
பசித்தவன்
அன்னம் தொடுவது போல
நான் அவள்
கன்னம் தொட்டேன் !

அந்தோ ..........

கலங்கியிருந்தாள்
பெண் !
கசிந்து கிடந்தது
கண் !

ஏன் இந்த
கண்ணீர் தோரணம் ?
என்னவாயிருக்கும்
அதற்குக் காரணம் ?

கேட்டேன் !

அம்மா என்று
விம்மினாள் !
அப்பா என்று
பம்மினாள் ! 
அழுகையால்
அந்த அறையையே
கும்மினாள் !

அவர்களிடம்
மன்னிப்புக் கேட்ட வேண்டுமாம் !

நானும்,
நினைத்துக் கொண்டேன்
என் பங்குக்கு
என்னை ஈன்றவர்களை !

அப்போது,
நறுக் என்று
குத்தியது ஒரு எண்ணம் !
நொடியில் மாறியது
சூழலின் வண்ணம் !

ஆம் ! ஆம் ! ஆம் !

கைப்பிடித்தவளின்
கை பிடித்தபடி
சொன்னேன்,

" அன்பே !
சில நாட்கள் முன்பு
உனக்கு
நிச்சயிக்கப்பட்டானே
ஒருவன்,,,,,,,,,,
நம்
மன்னிப்பின் கரங்கள்
முதலில்
தேடித் தழுவவேண்டியது
அவன் கால்களைத் தான் !  "




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர