Skip to main content
வேலை காத்திருக்கிறது




அது
ஏதோ ஒரு காலை !

ஏனோ தானோவென
எழுகிறேன் !
ஆலை போவதென்றாலே
அழுகிறேன் !

கண்ணெல்லாம் எரிச்சல் !
மனமெல்லாம் புகைச்சல் !

பேசாமல் இப்படியே
படுத்துவிடலாமா ?
இருக்கும் விடுப்பை - இப்போதே
எடுத்துவிடலாமா ?

எத்தனை நாள் தான்
ஆலை செல்வது ?
எவ்வளவு தான்
வேலை செய்வது ?

கடுப்பு என்று சொல்லி
விடுப்பு நானெடுத்தால்
குடியா முழுகிவிடும் ?
தலையில் என்ன
இடியா விழுந்துவிடும் ?

அப்படியே என்றாலும்.

ஆனால் ஆகிறது !
போனால் போகிறது !
வந்தால் வருகிறது !
வராட்டிப் போகிறது !

கடைசியில்,
எல்லாமே ஒரு சாண்
வயிற்றுப்பாடு !
அந்தரத்தில் ஆடும்
கயிற்றுப்பாடு !

இன்னும் சற்றுநேரம்
இப்படியே கிடந்தால்
இவ்வுலகைத் துறந்து
ஞானி கீனி ஆகிவிடுவேன் !

சோம்பேறியாய் இருப்பதுதான்
ஞானி ஆவதற்கான
நியாயமான தகுதியோ ?

எதற்கு வம்பு
எழுந்து விட்டேன் !
குமுறிக்கொண்டே
குளியலறை சென்றேன் !

பசையைப் பிதுக்கினேன் !
பல்லை செதுக்கினேன் !

வாளியைப் பார்த்தேன்
காலியாய் இருந்தது !

ஊற்று வருமென்று
குழாயைத் திருகினேன் !
காற்று தான் வந்தது !

ஆகா .....
எங்கே இந்த நீர் ?
அறையில் உள்ளதோ
அரைபாட்டில் பீர் !

அதை வைத்து
வாயை ஓரளவு
கொப்பளிக்கலாம் !
மற்றதற்கு ?

ஐயகோ ...............

என்ன ஒரு நிலை ?  - இது
எவன் செய்த பிழை ?

கலவரம் படிந்த முகத்தோடு
வெளியே வந்தேன்,
நிலவரம் தெரிந்து கொள்ள !

அங்கே,
என்னைப்போல் ஒருவன்கள் !
கைபிசைந்து
காத்திருந்தனர் !

அவனவன் அவசரம்
அவனவனுக்கு !

விசாரித்ததில்,

வழக்கமாக
மோட்டார் போடும்
வீட்டு ஓனர்,
இன்று கொஞ்சம்
அசந்து விட்டதில்
இக்காலைவேளை இப்படிக்
கசந்து விட்டதாம் !

மூவைந்து நிமிடங்களாவது
மூடிக்கொண்டு நிற்க வேண்டுமாம் !

ஒரே ஒருவனின்
தாமதம்,
இங்கு எத்தனை பேருக்கு
சங்கடம் !

அநாவசியமாய்
நான் எடுக்கும் விடுப்பில்
எத்தனை பேரின்
அவசியங்கள்
அர்த்தம் இழக்கப்போகின்றனவோ ?

சிந்தித்தேன் !
என்னை நானே
நிந்தித்தேன் !

சொர்ர்ரென்று ஓர் சத்தம்
விர்ர்ரென்று காதில் பாய,

" நீர் வந்து விட்டது !
நீர் வந்து விட்டது ! "

ஆவேசக் குரல்கள்
அடுக்கடுக்காய்க் கேட்க,

குளியலறை நோக்கி
கிட்டத்தட்ட ஓடினேன் !

ஆலை செல்ல வேண்டும் !
வேலை காத்திருக்கிறது !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர