Skip to main content
 தயவு செய்து
சண்டை போடுங்கள்



ஒரு சண்டை
தேவைப்படுகிறது !

மாதத்தில் ஓர் நாள்,
வாரத்தில் ஓர் நாள்
வாழ்வின் சலிப்பு நீக்க
ஒரு சண்டை தேவைப்படுகிறது !

மண்டை முழுக்கக்
குடைச்சல் இருந்தால்
அண்டை வீட்டானிடம்
சண்டை போடுங்கள்
சரியாகிவிடும் !

பாட்டு ஓடும் பேருந்தில்
சீட்டுக் கிழித்து
சலித்த நடத்துனன்
நோட்டு நீட்டினால் - ஒரு
காட்டுக் காட்டுவது
சண்டையை எதிர்பார்த்துத்தான் !
நாளெல்லாம்
நின்று வந்த கடுப்பை
எவன் வாயையாவது
தின்று தீர்க்கலாம்
என்று நினைக்கலாம் அவன் !

சமையல் பாத்திரத்தின்
' கழுவல் ' சரியில்லை எனில்
அன்றைய இரவில்
' தழுவல் ' சுகமாயிருக்கிறது
கணவனுக்கும் மனைவிக்கும் !
காரணம்,
பாத்திரத்தின் பொருட்டு
கழுவலுக்கும்
தழுவலுக்கும் நடுவில்
தம்பதியரிடையே
தம்படியளவேனும்
சண்டை நடந்திருக்கும் !

அம்மா அடிப்பாள்
என்று தெரிந்திருந்தும்
சும்மா சும்மா
புழுதியில் புரள்கிறான்
பள்ளிச் சிறுவன் !
ஏன் தெரியுமா ?
அடி வாங்கி அழுத பிறகு,
அம்மா ஊட்டும் சோறு
அவ்வளவு ருசியாயிருக்கிறது
அவனுக்கு !

காதலில்
சலிப்பு எனும்
பழுது போக்க
பொழுது போக்காகவாவது
பொய்ச் சண்டை
போடுகின்றனர்
பரந்த உலகின்
சிறந்த காதலர்கள் !

எதற்கோ
எவனுடனோ
தெருவில்
சண்டை போடும்போது
எங்கிருந்தோ வந்து
ஏனென்றும் கேளாமல்
எதிர்த்தவனை
எகிறி முறைக்கும்போது தான்
தம்பியின் பாசம்
புரிகிறது நமக்கு !

சண்டை
சீக்கிரத்தில் முடிந்து போவது !

சடுதியில்
சமாதானத்தின்
விடுதி நோக்கி ஓடுவது !

மடை திறந்த
வெள்ளம் போல
உள்ளம் திறந்து
போடும் சண்டை
பகையின் வேர்களைப்
பட்டுப் போகச் செய்கிறது !

நெஞ்சகத்தில் இருக்கும்
வஞ்சகத்தின்
நஞ்சகத்தை
நிமிடங்களில்
நிர்மூலமாக்குகிறது !

தன்னுயிர்க்
காதலியை விடவும்
சண்டை போட்ட
சகாவிடம்
பேசத்துடிக்கிறான்
இன்னொரு சகா !

வாழ்வே  வெறுத்து
விரக்தியாய் இருக்கிறதா ?

தலைக்கு மேலே
தற்கொலை எண்ணம்
தொங்கிக் கொண்டிருக்கிறதா ?

தயவு செய்து
சண்டை போடுங்கள் !!!


Comments

  1. இவ்வளவு நல்லா எழுதுவீங்க நீங்கன்னு என்கிட்ட ஏன சொல்லவே இல்ல? என் கருத்துக்களை பாராட்டறவரு அழகான கவிதை எழுதவறரு்ன்னு சொன்னா சந்தோஷப்பட்டிருப்பேன் இல்ல..? (என்ன கோபம்னு பாக்கறீங்களா? சண்டை போடறேன் உங்களோட...) ‌உங்க கருத்து ரொம்பவே ரசிக்க வெச்சது நிரூவை. Thanks!

    ReplyDelete
  2. வருகை புரிந்த தங்களுக்கு நன்றிகள் பல. தாங்களும் எழுதுங்கள் ! நான் இப்போது தான் ஆரம்பக் கட்ட எழுத்தாளனாக இருந்து வருகிறேன். குடிசை போல இருக்கும் எனது வலைப்பூவிற்கு வந்த தங்களுக்கு பெரிய மனது தான் நிரூ !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர