Skip to main content
அவசர ஞானம்

பேருந்து
போய்க் கொண்டிருந்தது.

ஓட்டமாக
வந்து ஏறியிருந்தாலும்
உள்ளே ஒரே
கூட்டமாக இருந்தது !

கண்கள்
மேயவிட்டு
உள்ளே இருந்த
பெண்கள் அனைவரையும்
எண்கள் ஆக்கியதில்
ஏழெட்டுத் தேறியது !

சுடிதார்
பட்டாம்பூச்சியாக
ஒருத்தி !

சேலைச் சோலையாக
ஒருத்தி !

உற்றுப் பார்த்தால்
முற்றுந்தெரியும்
முற்போக்கு ஆடையில்
ஒருத்தி !

நூலாடை
என்ற பெயரில்
தோலாடை அணிந்த
' துணிவு' மிக்க
ஒருத்தி !

உடுத்திய உடை
உடலைத்
தழுவி நிற்கிறதா ?
நழுவி நிற்கிறதா ?
என யூகிக்க முடியாத
நாகரிக நிலையில்
ஒருத்தி !

எவனிடமோ
கைபேசியில்
பொய்பேசி வந்த
ஒருத்தி !

கூந்தலின்
பின்னல் விழும்
இடத்தில்
ஜன்னல் வைத்த
ஒருத்தி !

ஜாதகப் படி
சுக்கிரன் இன்று
உச்சமா ?
எங்காவது ரகசியமாய்
எனக்கு முளைத்த
மச்சமா ?

பார்க்கும்
இடத்திலெல்லாம்
பெண் இருக்கிறாளே !

எவளை உரசலாம் ?

அதிகம்
அலட்டிக் கொள்ளாமல்
முற்றும் தெரிபவளை
முழுமனதாகத் தேர்ந்தெடுத்தேன் !

எட்டி இருந்தவன் - அவளை
ஒட்டி நின்று கொண்டேன் !

முதலில்
மூக்கு மட்டும் வியர்த்தது !

வெறி கொண்ட இரத்தம்
தறி கெட்டுப் பாய்ந்தது !

வசை பெற்றவனின்
குமுறல் போல
தசைகள் துடித்தெழுந்தன !

இடிந்து விழுவது போல
இதயம் துடித்தது !

மழை பொய்த்த
நா நிலமாய்
நா உலர்ந்தது !

அங்குல இடைவெளியில்
அங்கங்கள் காத்திருந்தன !

சட்டென்று
ஆசைகள்
அம்மணம் ஆன
மனவெளியில்
சம்மணம் போட்டு
அமர்ந்து கொண்டான்
அரசமர புத்தன் !

ஒரே ஒரு நொடி,
அவள் இடத்தில்
என் மனைவியையும்
என் இடத்தில் 
வேறு ஒருவனையும்
நினைத்துப் பார்த்தேன் !

சட்டென்று
சகலமும்
சுருண்டு போனது !
காமத்தின் உலகம்
கணப்பொழுதில்
இருண்டு போனது !

காதோர வெப்பம்
தணிந்தது !
மனசாட்சியின் முன்
மனம் பணிந்தது !

பிதுங்கிப் பிதுங்கி
முன்னேறியவன்
பதுங்கிப் பதுங்கிப்
பின் வாங்கினேன் !

பேருந்து
நின்ற நிறுத்தத்தில்
நினைவில்லாமல் இறங்கி
நான் பாட்டுக்கு
நடந்து போய்க்கொண்டே இருந்தேன் !!!


Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...