Skip to main content
அவசர ஞானம்

பேருந்து
போய்க் கொண்டிருந்தது.

ஓட்டமாக
வந்து ஏறியிருந்தாலும்
உள்ளே ஒரே
கூட்டமாக இருந்தது !

கண்கள்
மேயவிட்டு
உள்ளே இருந்த
பெண்கள் அனைவரையும்
எண்கள் ஆக்கியதில்
ஏழெட்டுத் தேறியது !

சுடிதார்
பட்டாம்பூச்சியாக
ஒருத்தி !

சேலைச் சோலையாக
ஒருத்தி !

உற்றுப் பார்த்தால்
முற்றுந்தெரியும்
முற்போக்கு ஆடையில்
ஒருத்தி !

நூலாடை
என்ற பெயரில்
தோலாடை அணிந்த
' துணிவு' மிக்க
ஒருத்தி !

உடுத்திய உடை
உடலைத்
தழுவி நிற்கிறதா ?
நழுவி நிற்கிறதா ?
என யூகிக்க முடியாத
நாகரிக நிலையில்
ஒருத்தி !

எவனிடமோ
கைபேசியில்
பொய்பேசி வந்த
ஒருத்தி !

கூந்தலின்
பின்னல் விழும்
இடத்தில்
ஜன்னல் வைத்த
ஒருத்தி !

ஜாதகப் படி
சுக்கிரன் இன்று
உச்சமா ?
எங்காவது ரகசியமாய்
எனக்கு முளைத்த
மச்சமா ?

பார்க்கும்
இடத்திலெல்லாம்
பெண் இருக்கிறாளே !

எவளை உரசலாம் ?

அதிகம்
அலட்டிக் கொள்ளாமல்
முற்றும் தெரிபவளை
முழுமனதாகத் தேர்ந்தெடுத்தேன் !

எட்டி இருந்தவன் - அவளை
ஒட்டி நின்று கொண்டேன் !

முதலில்
மூக்கு மட்டும் வியர்த்தது !

வெறி கொண்ட இரத்தம்
தறி கெட்டுப் பாய்ந்தது !

வசை பெற்றவனின்
குமுறல் போல
தசைகள் துடித்தெழுந்தன !

இடிந்து விழுவது போல
இதயம் துடித்தது !

மழை பொய்த்த
நா நிலமாய்
நா உலர்ந்தது !

அங்குல இடைவெளியில்
அங்கங்கள் காத்திருந்தன !

சட்டென்று
ஆசைகள்
அம்மணம் ஆன
மனவெளியில்
சம்மணம் போட்டு
அமர்ந்து கொண்டான்
அரசமர புத்தன் !

ஒரே ஒரு நொடி,
அவள் இடத்தில்
என் மனைவியையும்
என் இடத்தில் 
வேறு ஒருவனையும்
நினைத்துப் பார்த்தேன் !

சட்டென்று
சகலமும்
சுருண்டு போனது !
காமத்தின் உலகம்
கணப்பொழுதில்
இருண்டு போனது !

காதோர வெப்பம்
தணிந்தது !
மனசாட்சியின் முன்
மனம் பணிந்தது !

பிதுங்கிப் பிதுங்கி
முன்னேறியவன்
பதுங்கிப் பதுங்கிப்
பின் வாங்கினேன் !

பேருந்து
நின்ற நிறுத்தத்தில்
நினைவில்லாமல் இறங்கி
நான் பாட்டுக்கு
நடந்து போய்க்கொண்டே இருந்தேன் !!!


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர