Skip to main content
 தயவு செய்து
சண்டை போடுங்கள்



ஒரு சண்டை
தேவைப்படுகிறது !

மாதத்தில் ஓர் நாள்,
வாரத்தில் ஓர் நாள்
வாழ்வின் சலிப்பு நீக்க
ஒரு சண்டை தேவைப்படுகிறது !

மண்டை முழுக்கக்
குடைச்சல் இருந்தால்
அண்டை வீட்டானிடம்
சண்டை போடுங்கள்
சரியாகிவிடும் !

பாட்டு ஓடும் பேருந்தில்
சீட்டுக் கிழித்து
சலித்த நடத்துனன்
நோட்டு நீட்டினால் - ஒரு
காட்டுக் காட்டுவது
சண்டையை எதிர்பார்த்துத்தான் !
நாளெல்லாம்
நின்று வந்த கடுப்பை
எவன் வாயையாவது
தின்று தீர்க்கலாம்
என்று நினைக்கலாம் அவன் !

சமையல் பாத்திரத்தின்
' கழுவல் ' சரியில்லை எனில்
அன்றைய இரவில்
' தழுவல் ' சுகமாயிருக்கிறது
கணவனுக்கும் மனைவிக்கும் !
காரணம்,
பாத்திரத்தின் பொருட்டு
கழுவலுக்கும்
தழுவலுக்கும் நடுவில்
தம்பதியரிடையே
தம்படியளவேனும்
சண்டை நடந்திருக்கும் !

அம்மா அடிப்பாள்
என்று தெரிந்திருந்தும்
சும்மா சும்மா
புழுதியில் புரள்கிறான்
பள்ளிச் சிறுவன் !
ஏன் தெரியுமா ?
அடி வாங்கி அழுத பிறகு,
அம்மா ஊட்டும் சோறு
அவ்வளவு ருசியாயிருக்கிறது
அவனுக்கு !

காதலில்
சலிப்பு எனும்
பழுது போக்க
பொழுது போக்காகவாவது
பொய்ச் சண்டை
போடுகின்றனர்
பரந்த உலகின்
சிறந்த காதலர்கள் !

எதற்கோ
எவனுடனோ
தெருவில்
சண்டை போடும்போது
எங்கிருந்தோ வந்து
ஏனென்றும் கேளாமல்
எதிர்த்தவனை
எகிறி முறைக்கும்போது தான்
தம்பியின் பாசம்
புரிகிறது நமக்கு !

சண்டை
சீக்கிரத்தில் முடிந்து போவது !

சடுதியில்
சமாதானத்தின்
விடுதி நோக்கி ஓடுவது !

மடை திறந்த
வெள்ளம் போல
உள்ளம் திறந்து
போடும் சண்டை
பகையின் வேர்களைப்
பட்டுப் போகச் செய்கிறது !

நெஞ்சகத்தில் இருக்கும்
வஞ்சகத்தின்
நஞ்சகத்தை
நிமிடங்களில்
நிர்மூலமாக்குகிறது !

தன்னுயிர்க்
காதலியை விடவும்
சண்டை போட்ட
சகாவிடம்
பேசத்துடிக்கிறான்
இன்னொரு சகா !

வாழ்வே  வெறுத்து
விரக்தியாய் இருக்கிறதா ?

தலைக்கு மேலே
தற்கொலை எண்ணம்
தொங்கிக் கொண்டிருக்கிறதா ?

தயவு செய்து
சண்டை போடுங்கள் !!!


Comments

  1. இவ்வளவு நல்லா எழுதுவீங்க நீங்கன்னு என்கிட்ட ஏன சொல்லவே இல்ல? என் கருத்துக்களை பாராட்டறவரு அழகான கவிதை எழுதவறரு்ன்னு சொன்னா சந்தோஷப்பட்டிருப்பேன் இல்ல..? (என்ன கோபம்னு பாக்கறீங்களா? சண்டை போடறேன் உங்களோட...) ‌உங்க கருத்து ரொம்பவே ரசிக்க வெச்சது நிரூவை. Thanks!

    ReplyDelete
  2. வருகை புரிந்த தங்களுக்கு நன்றிகள் பல. தாங்களும் எழுதுங்கள் ! நான் இப்போது தான் ஆரம்பக் கட்ட எழுத்தாளனாக இருந்து வருகிறேன். குடிசை போல இருக்கும் எனது வலைப்பூவிற்கு வந்த தங்களுக்கு பெரிய மனது தான் நிரூ !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...