Skip to main content
காதல் தருணங்கள்




அந்தப் பெயரை


அதற்குமுன்பு பிடிக்காமலிருந்து ,


அவள் பெயர் அதுதான் என்றதும்


அதுமட்டுமே இப்போது


அதிகமாய்ப் பிடிக்கிறது !




அவளால் இடறப்பட்டதில் ,


இப்போதெல்லாம் இதயம்


இடதுபக்கம் இருப்பதே


சிறிது சந்தேகமாய்த்தான் இருக்கிறது !




அது என்னமோ தெரியவில்லை


அவள் பெயர் வைக்கப்பட்ட


எந்தக்கடைக்குமே எளிதில் நான்


வாடிக்கையாகி விடுவதுதான்


வேடிக்கையாக இருக்கிறது !




சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் !


அவளும் பார்க்கிறாள் என்பதால்


இப்போதெல்லாம்


தொலைக்காட்சித் தொடர்கள்


அத்தனையும் எனக்கு


அப்படியே அத்துபடி !




இப்போதெல்லாம்


பிச்சைக்காரர்களுக்கு மறுக்க


மனமே வருவதில்லை !




அவள் சொன்னபடியே


அந்த ஆரஞ்சு நிற சட்டையில்


நான் அழகாய்த்தான் இருக்கிறேன் !




பக்கத்துவீட்டுச் சிறுமி


பரிட்சையில் தேறவேண்டுமென்று


பக்கம் பக்கமாய் ஸ்ரீ ராமஜயம் எழுத


அவளால் எப்படித்தான் முடிகிறதோ ?




அவளுடன் அமர்ந்து பயணித்ததில் ,


நடத்துனர் தரவேண்டிய


நான்கு ரூபாய் சில்லறையை


நானெப்படி மறந்தேன் ?




உங்களுக்கு ஒன்று தெரியுமா ?


வெள்ளிக் கிழமையென்றால்


அம்மன் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


சனிக்கிழமை என்றால்


ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


ஆம் ! அவள் தான் சொன்னாள் !




மது அருந்துவது தீங்கு என்று


எனது நண்பர்களுக்கு


நான் உபதேசம் செய்ய ஆரம்பித்திருப்பதில்


ஆச்சர்யம் இருக்கிறதா என்ன ?




ஏதோ ஏகாதசியாம் !


அவள் விரதமிருக்கிறாள் என்று


நானும் வீட்டில் விரதமிருந்ததை


அம்மா ஆயிரம் முறையாவது


அண்டை வீட்டில் சொல்லியிருப்பாள் !




நேற்று அவளுக்கும் எனக்கும்


ஒரு விஷயத்தில் சண்டை !


மழைக்கு முன்பு


வானவில் வரும் என்கிறாள் அவள் !


மழைக்குப் பின்புதான்


வானவில் வரும் என்கிறேன் நான் !


நீங்களே சொல்லுங்கள்


வானவில் எப்போதுவரும் ?




அவளோடு நடக்கும்போது


எதிரில் உலக அழகியே வந்தாலும்


ஏறெடுத்தும் பார்க்க


ஏனோ தோன்றுவதே இல்லை !




கடைசியில் ,


காதலர்கள் பிரிந்து விடுவது போன்ற


ஒரு திரைப்படத்திற்கு


நான் கூட்டிச் சென்றேனென்று


இரண்டு வாரங்கள் என்னோடு


பேசாமல் இருந்தவள் அவள் !




அப்புறம் ஒரு


முக்கியமான விஷயம் !


பட்டாம்பூச்சியை ,


யார் முதலில் பிடிப்பதென்று


நேற்று பூங்காவில் ,


எனக்கும் அவளுக்கும்


நடந்த போட்டியில்


வென்றது அவள்தான் தெரியுமா !!!


















Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர