Skip to main content
காதல் தருணங்கள்




அந்தப் பெயரை


அதற்குமுன்பு பிடிக்காமலிருந்து ,


அவள் பெயர் அதுதான் என்றதும்


அதுமட்டுமே இப்போது


அதிகமாய்ப் பிடிக்கிறது !




அவளால் இடறப்பட்டதில் ,


இப்போதெல்லாம் இதயம்


இடதுபக்கம் இருப்பதே


சிறிது சந்தேகமாய்த்தான் இருக்கிறது !




அது என்னமோ தெரியவில்லை


அவள் பெயர் வைக்கப்பட்ட


எந்தக்கடைக்குமே எளிதில் நான்


வாடிக்கையாகி விடுவதுதான்


வேடிக்கையாக இருக்கிறது !




சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் !


அவளும் பார்க்கிறாள் என்பதால்


இப்போதெல்லாம்


தொலைக்காட்சித் தொடர்கள்


அத்தனையும் எனக்கு


அப்படியே அத்துபடி !




இப்போதெல்லாம்


பிச்சைக்காரர்களுக்கு மறுக்க


மனமே வருவதில்லை !




அவள் சொன்னபடியே


அந்த ஆரஞ்சு நிற சட்டையில்


நான் அழகாய்த்தான் இருக்கிறேன் !




பக்கத்துவீட்டுச் சிறுமி


பரிட்சையில் தேறவேண்டுமென்று


பக்கம் பக்கமாய் ஸ்ரீ ராமஜயம் எழுத


அவளால் எப்படித்தான் முடிகிறதோ ?




அவளுடன் அமர்ந்து பயணித்ததில் ,


நடத்துனர் தரவேண்டிய


நான்கு ரூபாய் சில்லறையை


நானெப்படி மறந்தேன் ?




உங்களுக்கு ஒன்று தெரியுமா ?


வெள்ளிக் கிழமையென்றால்


அம்மன் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


சனிக்கிழமை என்றால்


ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகவேண்டுமாம் !


ஆம் ! அவள் தான் சொன்னாள் !




மது அருந்துவது தீங்கு என்று


எனது நண்பர்களுக்கு


நான் உபதேசம் செய்ய ஆரம்பித்திருப்பதில்


ஆச்சர்யம் இருக்கிறதா என்ன ?




ஏதோ ஏகாதசியாம் !


அவள் விரதமிருக்கிறாள் என்று


நானும் வீட்டில் விரதமிருந்ததை


அம்மா ஆயிரம் முறையாவது


அண்டை வீட்டில் சொல்லியிருப்பாள் !




நேற்று அவளுக்கும் எனக்கும்


ஒரு விஷயத்தில் சண்டை !


மழைக்கு முன்பு


வானவில் வரும் என்கிறாள் அவள் !


மழைக்குப் பின்புதான்


வானவில் வரும் என்கிறேன் நான் !


நீங்களே சொல்லுங்கள்


வானவில் எப்போதுவரும் ?




அவளோடு நடக்கும்போது


எதிரில் உலக அழகியே வந்தாலும்


ஏறெடுத்தும் பார்க்க


ஏனோ தோன்றுவதே இல்லை !




கடைசியில் ,


காதலர்கள் பிரிந்து விடுவது போன்ற


ஒரு திரைப்படத்திற்கு


நான் கூட்டிச் சென்றேனென்று


இரண்டு வாரங்கள் என்னோடு


பேசாமல் இருந்தவள் அவள் !




அப்புறம் ஒரு


முக்கியமான விஷயம் !


பட்டாம்பூச்சியை ,


யார் முதலில் பிடிப்பதென்று


நேற்று பூங்காவில் ,


எனக்கும் அவளுக்கும்


நடந்த போட்டியில்


வென்றது அவள்தான் தெரியுமா !!!


















Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...