Skip to main content
அப்பா




தாய்ப்பால் உண்ட உற்சாகத்தில்


தொட்டிலுக்குள்ளே நான்


துள்ளிக்கொண்டிருக்கும் போது


ஆசையோடு எட்டிப்பார்க்கும்


மீசை மனிதராய் எனக்கு


அறிமுகமானவர் நீங்கள் !




வளரும் பிராயத்தில்


நான் உங்களைப்போலவே


நடப்பதாகவும்


உங்களைப்போலவே


பேசுவதாகவும்


ஊர் உலகம் சொல்லும்போதெல்லாம்


பெருமையோடு நீங்கள்


புன்னகை சிந்துவதைப்


பலமுறை பார்த்திருக்கிறேன் !




அம்மா எனக்கு


நிலவை ரசிக்கக்


கற்றுத்தந்தாள் !


நீங்கள் எனக்கு


சூரியனை வணங்கக்


கற்றுத்தந்தீர்கள் !




மிதிவண்டியின் பின்புறம்


என்னை அமர்த்திக்கொண்டு


ஒரு அரசனைப் போல நீங்கள்


நகர்வலம் செல்லும்போது ,


வழிநெடுக எனக்கு


வாழ்க்கைப் பாடம் போதிப்பீர்கள் !




ஒரு நாள் காலையில்


ஆறு பார்க்கப் போவேனென்று


அழுது நான் அடம் பிடிக்க


அழைத்துப் போனீர்கள் !


அங்கே ,


ஆற்று வெள்ளத்தின்


போக்கு புரியாமல்


எதோ ஒரு பள்ளத்தில்


காலை விட்டு ,


நீருக்குள் மூழ்கி


மூச்சடைத்தேன் நான் !


ஆனாலும் நீங்கள்


உடனிருக்கும் தைரியத்தில்


எதிரே வந்த எமனை


எட்டி உதைத்து விட்டு


முட்டி முளைத்தெழுந்தேன் !


சாவின் மீது எனக்கிருந்த பயம்


அன்றோடு செத்துப் போனது !




வாலிபனானதும் நான்


வழிமாறிப்போய்விடக்கூடாதென்று ,


வசைகளாலேயே எனக்கு


திசைகளைக் காட்டியவர் நீங்கள் !




ஆனாலும் ,


" என் மகன் இந்தப்படிப்பு


படித்திருக்கிறான் !


என் மகன் இந்த வேலையில்


இருக்கிறான் !


என் மகன் இந்த சம்பளம்


வாங்குகிறான் ! " என்று


என்னைப் பற்றி ,


பிறரிடம் பெருமையாய்ச்


சொல்லிக் கொள்வதில் தான்


உங்கள் பெருமையே இருக்கிறது !




உள்ளுக்குள்ளே உங்களை


ஆயிரம் விமர்சித்தாலும்


எங்கேயாவது எவனாவது


உங்களைப் பற்றி


பொல்லாங்கு சொன்னால் ,


அவன் முகரையைப் பெயர்க்கும்


முன்கோபத்தில் எனது


மூக்கின் நுனி சிவக்கிறதே !


நம் ரத்த பாசத்தின்


ரசாயனமென்பது இதுதானோ ?




இப்போது கூட


தொலைக்காட்சியில் தனியே


சூரிய வம்சம் படம் பார்க்கையில்


கண்களில் கண்ணீர் வழிவதை


கட்டுப்படுத்த முடியாது என்னால் !






பணி நிமித்தம் உங்களைப்


பிரிந்து வந்த பிறகு


மதுவருந்தும் ஒவ்வொரு


ஞாயிற்றுக் கிழமையிலும்


நான் நினைத்துக் கொள்வேன் ,


நீங்கள் மட்டும்


அருகே இருந்திருந்தால்


அடித்தாவது என்னைத்


திருத்தியிருப்பீர்கள் என்று !




என்னைத் திட்டவோ


அடிக்கவோ செய்ய


உங்களை விட்டால்


உலகத்தில் எவனுக்கு


உரிமை இருக்கிறது ?




இப்போது கூட


நான் தெருவில் நடக்கையில்


என்னைப் புன்னகையோடு விசாரிக்கவும்


நான்கு பேர் இருக்கிறார்கள்


என்று அறியும் போது உணர்கிறேன் ,


உங்களது அத்தனை திட்டுக்களும்


என்னை சிதைத்து விடவில்லை ,


மாறாக செதுக்கியிருக்கின்றன என்று !!!






Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர