Skip to main content
பரிசு




ஏதோ ஒரு மழைநாளில்


நிழற்குடையை


மழைக்குடையாக்கி ,


நாம் அருகருகே


நின்றிருக்கும் போது


அதிர வைக்கும் இடியோசை கேட்டு


அர்ச்சுனா அர்ச்சுனா வென்று


இருவரும் ஒருசேரச் சொன்னோமே !


நினைவிருக்கிறதா ?




பூங்காவில் ஒருநாள் ,


புணர்ந்து கொண்டிருந்த


இரண்டு சிட்டுக் குருவிகளுக்குத்


தொந்தரவாய் இருக்குமென்று


வேறிடம் போய் அமர்ந்தோமே


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு திரைப்படத்தில்


நெகிழ்ச்சியான காதல் காட்சி கண்டு


கலங்கிய நம் கண்களைக்


கைக்குட்டையால்


துடைத்துக் கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




உனது பிறந்த நாளின் போது


உதட்டு முத்தம் பகிர்ந்து விட்டு


ஒரு வாரம் முழுக்க இருவரும்


காய்ச்சலில் கிடந்தோமே


நினைவிருக்கிறதா ?




தேர்வில் தோற்றேனென்று


நாள் முழுக்க


நூலகத்தில் பழி கிடந்து


நல்ல புத்தகமொன்றத்


தேடிஎடுத்து நீ தந்த போது


அப்புத்தகத்தின் தடிமன் கண்டு


தலையணை என்று தான்


வருணனை செய்ததற்கு


திட்டிக் கொண்டே


தலையில் குட்டினாயே !


நினைவிருக்கிறதா ?




கடற்கரையில் ஒருநாள்


ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி


நீ உண்பாயென நானும்


நான் உண்பேன் என நீயும்


வெறுமனே பேசிக்கொண்டே இருந்து


சுண்டல் சீண்டப்படாமலேயே இருப்பதைப்


புறப்படும் போது உணர்ந்து கொண்டு ,


எனக்கு நீயும் உனக்கு நானும்


மாறி மாறி ஊட்டிக்கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு ஊடலில்


நாள் முழுக்கப் பேசாதிருந்து


பின்பு மனது பொறுக்காமல்


குறுஞ்செய்தியாலே


இரவு முழுவதும்


குசலம் விசாரித்தோமே !


நினைவிருக்கிறதா ?




இருசக்கர வாகனத்தில்


இருவரும் போனபோது ,


வேகத்தடை வரும்போதெல்லாம்


உந்துதடையை நான் போட ,


புத்தகப் பையை நடுவில் வைத்து


என் தோள் மீது தலைசாய்த்து


வழிநெடுக வந்தாயே


நினைவிருக்கிறதா ?




ஒருநாள் என்னைத்


தனியே அழைத்து ,


தந்தை சம்மதித்து விட்டாரென்று


தேம்பி அழுத உன்னைத்


தேற்ற முயன்று தோற்றுப்போய்


நானும் அழ ,


ஆனந்தக் கண்ணீரில் இருவரும்


அமிழ்ந்து போனோமே !


நினைவிருக்கிறதா ?




என்னையே நினைத்து ,


என்னையே காதலித்து ,


என்னையே மணந்த


உத்தமக் காதலியே !


தொடங்கி விட்ட நமது


திருமண உறவில்


உனக்கொரு


உயர்ந்த பரிசெனத் தர


இந்த நினைவுகளைத் தவிர


வேறொன்றுமில்லை என்னிடம் !!!












Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர