Skip to main content
பழகிப் புளித்த தயிர்




உருட்டிப் பார்த்தேன்


விழவில்லையடி தாயம் !


மருந்தில்லாமல்


ஆறவில்லை மனக் காயம் !




முடவன் ,


கொம்புத்தேனுக்குப் பட்ட ஆசை !


வேதனையில் ,


நரைத்தே போய் விட்ட மீசை !




நெஞ்சுக்கு பாரமடி


இந்த மூச்சு !


மனதில் விழுந்ததோ


வெட்டரிவாள் வீச்சு !




இனி நான்


படிக்க நினைப்பது ராமாயணம் !


முடிக்க நினைப்பது ,


உன் பெயரின் பாராயணம் !




இதயத்தைக் கொடுத்தேனே


உனக்கு யாசகம் !


அதன் துடிப்பை நிறுத்தியது


உனது ஒரு வாசகம் !




மறந்து விடு என்றதற்கு ,


இறந்து விடு என்றிருக்கலாமே - என்


இறந்த காலக் காதலியே !




நீ ,


தூரத்தில் தெரிந்த


கோணல் நீர் !


கிட்டே வந்ததும் ,


காணாமல் போன


கானல் நீர் !




நான் ,


வடையைத் தொலைத்த


காக்கை !


உடையில் நடமாடும்


யாக்கை !




"ஊற்றிப்பார்த்தேன் "


அடங்கவில்லையடி புகைச்சல் !


இது ,


கையில்லாதவனுக்கு ,


முதுகில் வந்த நமைச்சல் !




மறந்து போனது


குயிலோசை கேட்கும்


நம் பூங்கா !


உன் குரலோசை இன்றி


என் இரவுகள் இனி தூங்கா !




ஆடித் தோற்றேன்


காதலின் சதுரங்கம் !


ஆடப் போகிறேன்


இனியென்றும் 'மது' ரங்கம் !




போதுமடி , இனி எதற்கு


உடம்பில் இந்த உயிர் !


சாவென்பது , இனி எனக்கு


பழகிப் புளித்த தயிர் !


பழகிப் புளித்த தயிர் !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர