பழகிப் புளித்த தயிர்
உருட்டிப் பார்த்தேன்
விழவில்லையடி தாயம் !
மருந்தில்லாமல்
ஆறவில்லை மனக் காயம் !
முடவன் ,
கொம்புத்தேனுக்குப் பட்ட ஆசை !
வேதனையில் ,
நரைத்தே போய் விட்ட மீசை !
நெஞ்சுக்கு பாரமடி
இந்த மூச்சு !
மனதில் விழுந்ததோ
வெட்டரிவாள் வீச்சு !
இனி நான்
படிக்க நினைப்பது ராமாயணம் !
முடிக்க நினைப்பது ,
உன் பெயரின் பாராயணம் !
இதயத்தைக் கொடுத்தேனே
உனக்கு யாசகம் !
அதன் துடிப்பை நிறுத்தியது
உனது ஒரு வாசகம் !
மறந்து விடு என்றதற்கு ,
இறந்து விடு என்றிருக்கலாமே - என்
இறந்த காலக் காதலியே !
நீ ,
தூரத்தில் தெரிந்த
கோணல் நீர் !
கிட்டே வந்ததும் ,
காணாமல் போன
கானல் நீர் !
நான் ,
வடையைத் தொலைத்த
காக்கை !
உடையில் நடமாடும்
யாக்கை !
"ஊற்றிப்பார்த்தேன் "
அடங்கவில்லையடி புகைச்சல் !
இது ,
கையில்லாதவனுக்கு ,
முதுகில் வந்த நமைச்சல் !
மறந்து போனது
குயிலோசை கேட்கும்
நம் பூங்கா !
உன் குரலோசை இன்றி
என் இரவுகள் இனி தூங்கா !
ஆடித் தோற்றேன்
காதலின் சதுரங்கம் !
ஆடப் போகிறேன்
இனியென்றும் 'மது' ரங்கம் !
போதுமடி , இனி எதற்கு
உடம்பில் இந்த உயிர் !
சாவென்பது , இனி எனக்கு
பழகிப் புளித்த தயிர் !
பழகிப் புளித்த தயிர் !!!
Comments
Post a Comment