நிலா
நிலா,
அன்பின் சின்னம் !
வான் இலையின்
ஒரு கரண்டி அன்னம் !
பாற்கடலில் இருந்து
பிய்ந்து வந்த பின்னம் !
வான் போர்வைக்குள்
ஒருக்களித்த தேவதையின்
ஒரு பக்கக் கன்னம் !
நிலா........
வெண்மை ..............
பால் ................
பசி .................
அம்மா !
நிலவைப் பார்த்து .
எழுதாதவன்
கவிஞன் இல்லை !
நிலவைப் பார்த்து
மகிழாதவன்
மனிதன் இல்லை !
கவிஞர்கள் செய்கிறார்கள்
கவிதை விற்பனை !
அதற்கு மூலதனம் - அவர்கட்கு
நிலவு தரும் கற்பனை !
உறவுகளைப்
பிரிந்து போகும்
ஒவ்வொரு பயணத்திலும்
கூடவே வருவது
நிலவு மட்டுந்தான் !
நிலவிருக்கும் வரை
எவனும் இங்கு
அநாதை இல்லை !
நிலவோடு சிறிது
உலவிவிட்டு வரலாம்
உறக்கம் வராதவர்கள் !
கவலைகளால்
பசியெடுக்காதவர்கள்
மொட்டை மாடியில்
நிலாச் சோறு உண்ணலாம் !
வானப் பூந்தோட்டம்,
நட்சத்திரப் பூக்கள்,
இரவுத் தேன் !
வெள்ளைப் பொன்வண்டு
நிலா !
வான்குளம்,
நட்சத்திர மீன்கள்,
வெள்ளைத் தாமரை
நிலா !
வான மைதானம்
நட்சத்திர வீரர்கள்
வெள்ளைப் பந்து
நிலா !
உலகுக்கே
பாசப் பசியாற்றும்
ஒரு சொட்டுத் தாய்ப்பால்
நிலா !!!
நிலா,
அன்பின் சின்னம் !
வான் இலையின்
ஒரு கரண்டி அன்னம் !
பாற்கடலில் இருந்து
பிய்ந்து வந்த பின்னம் !
வான் போர்வைக்குள்
ஒருக்களித்த தேவதையின்
ஒரு பக்கக் கன்னம் !
நிலா........
வெண்மை ..............
பால் ................
பசி .................
அம்மா !
நிலவைப் பார்த்து .
எழுதாதவன்
கவிஞன் இல்லை !
நிலவைப் பார்த்து
மகிழாதவன்
மனிதன் இல்லை !
கவிஞர்கள் செய்கிறார்கள்
கவிதை விற்பனை !
அதற்கு மூலதனம் - அவர்கட்கு
நிலவு தரும் கற்பனை !
உறவுகளைப்
பிரிந்து போகும்
ஒவ்வொரு பயணத்திலும்
கூடவே வருவது
நிலவு மட்டுந்தான் !
நிலவிருக்கும் வரை
எவனும் இங்கு
அநாதை இல்லை !
நிலவோடு சிறிது
உலவிவிட்டு வரலாம்
உறக்கம் வராதவர்கள் !
கவலைகளால்
பசியெடுக்காதவர்கள்
மொட்டை மாடியில்
நிலாச் சோறு உண்ணலாம் !
வானப் பூந்தோட்டம்,
நட்சத்திரப் பூக்கள்,
இரவுத் தேன் !
வெள்ளைப் பொன்வண்டு
நிலா !
வான்குளம்,
நட்சத்திர மீன்கள்,
வெள்ளைத் தாமரை
நிலா !
வான மைதானம்
நட்சத்திர வீரர்கள்
வெள்ளைப் பந்து
நிலா !
உலகுக்கே
பாசப் பசியாற்றும்
ஒரு சொட்டுத் தாய்ப்பால்
நிலா !!!
நிலாவைப் பற்றிய உங்கள் பா மிக அழகு. முதல் சில வரிகளைப் படித்ததும் ‘சினிமாவுக்கு பாட்டெழுத ஏற்ற கவிஞர்’ என்று நினைத்தேன். மற்றவற்றைப் படி்த்து முடித்ததும் உங்களின் எழுத்துத் திறனை வியக்கிறேன். தொடரட்டும் நற்கவிதைகள்!
ReplyDelete//ஒவ்வொரு பயணத்திலும்
ReplyDeleteகூடவே வருவது
நிலவு மட்டுந்தான் !
நிலவிருக்கும் வரை
எவனும் இங்கு
அநாதை இல்லை !//
இந்த வார்த்தைகளைப் படிக்கும் பொழுது இனம் புரியாத ஒரு சந்தோசம் வருகிறது.
உங்களை ஐந்தாவதாக பின்தொடர்கிறேன், இனி தொடர்ந்து வருகிறேன். அருமையான கவிதை மனம் உங்கள் வசம் இருப்பதால் உங்கள் வலைபூ அழகாய் மணம் வீசுகிறது
ஐயா திரு கணேஷ்,
ReplyDeleteமுதலில் எனது வலைப்பூவிற்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி ஐயா ! நீங்கள் எல்லாம் எனது வலைப்பூவைப் பார்வை இடுகிறீர்கள் எனும் போது என் பொறுப்புணர்ச்சி சற்றே கூடியது போலவே உணர்கிறேன். சமூகத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைபாடு பற்றிய விரக்தியான மனநிலையையே இதுவரை அதிகமாக எனது கவிதைகளில் பதிவு செய்து வந்தேன். இனி அதைக் கூடுமானவரை குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
ஒரு ஆசிரியர் போலுள்ள தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருகை தந்து எனது கவிதையைப் பாராட்டியதை நான் பெற்ற விருதாகவே கருதுகிறேன். நன்றி ஐயா !!!
சீனு குரு,
ReplyDelete/ஒவ்வொரு பயணத்திலும்
கூடவே வருவது
நிலவு மட்டுந்தான் !
நிலவிருக்கும் வரை
எவனும் இங்கு
அநாதை இல்லை !// - இவ்வரிகளின் யதார்த்தத்தை ரசித்த தங்களுக்கு நன்றிகள். யதார்த்தமான வரிகள் தான் வாசகரின் மனதைத் தொடுகின்றன என்பதை உணர்த்தும் விமர்சனமாக தங்கள் விமர்சனம் இருந்தது. நன்றி
வாவ்! நிலவுக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்... குழந்தைக்கு சோறூட்ட, காதலியை எண்ணிக் கவிதை பாட், இரவில் உறுத்தாத வெளிச்சத்தையும், பார்ப்பவர்களுக்கு மகிழ்வையும் தர... என்று எத்தனை நிலா! எனக்குப் பிடித்தது நிலாவும் மழையும். (மழையில நனைஞ்சு மம்மிட்ட அடிவாங்கின விஷயம்லாம் நான் சொலல மாட்டேன்பா) இங்க நிலாவ ரசிச்சதுல சந்தோஷம். நன்றி உங்களுக்கு.
ReplyDeleteகவிதைக்கு மட்டும் நன்றி இல்லை... என் சிந்தனையை பயன்படுத்தினா நல்ல எழுத்தாளராகலாம்னு எனக்கு எனர்ஜி டானிக் தந்ததுக்கு, அப்படி தறி கெட்டு ஓடின கற்பனைலதான் எருமை பத்தின கதை வ்ந்தது, இனியும் முயல்கிறேன் உங்களின் ஆதரவோடு. Thanks for everything!
குரு ஸார்... கணேஷ் அங்கிளின் வருகைக்கே இவ்வளவு சந்தோஷப்படறீங்களே... ரெண்டு நாள் முன்னால வலைச்சரத்துல உங்கள் பதிவைப் பத்தி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தாரே... பாக்கலையா நீங்க. இதோ லிங்க் :
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/05/blog-post_06.html
நிலாப்பெண் அவளுக்கு தாங்கள் சூடிய அலங்காரம் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு!
ReplyDeleteஅருமையான படைப்பு!
This comment has been removed by the author.
Deleteநிரஞ்சனா, மற்றும் யுவராணி தமிழரசனுக்கு நன்றிகள் பல.
Deleteதங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
ReplyDeletehttp://dewdropsofdreams.blogspot.in
நிலா,
ReplyDeleteஅன்பின் சின்னம் !
வான் இலையின்
ஒரு கரண்டி அன்னம் !
பாற்கடலில் இருந்து
பிய்ந்து வந்த பின்னம் !
வான் போர்வைக்குள்
ஒருக்களித்த தேவதையின்
ஒரு பக்கக் கன்னம் !//
அருமை அருமை
வித்தியாசமான அசரவைக்கும் அருமையான கற்பனை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வெர்ட் வெரிஃபிகேசனை நீக்கினால்
ReplyDeleteபின்னூட்டமிடுபவர்களுக்கு
கொஞ்சம் சிரமம் குறையும்
விரும்பினால் நீக்கவும்