Skip to main content
அவளை எனக்குப் பிடிக்கிறது !


அவளை
எனக்குப் பிடிக்கிறது !
அவள் 
எது செய்தாலும் பிடிக்கிறது !

குறுஞ்செய்தியில்
குலவும் போது
அவள்
ஒற்றை எழுத்தும்
 பிடிக்கிறது !

பேசும் போது
காற்று கலைக்கும்
 அவள்
கற்றைக் கூந்தல்
பிடிக்கிறது !

வெட்கத்தில்
 சிவக்கும்
கன்னம் பிடிக்கிறது !

கோபத்தில்
சிவக்கும்
மூக்கு பிடிக்கிறது !

பின்னலிடும்
 பார்வை பிடிக்கிறது !

 பின்னங்கழுத்து
வேர்வை  பிடிக்கிறது !

அவளை
 சும்மாவேனும் பிடிக்கிறது !
 சும்மா சும்மா பிடிக்கிறது !

காற்றில் பறக்கும்
அவள் துப்பட்டா
பிடிக்கிறது !

 என் பார்வையுணர்ந்து
அவள் அப்பட்டா
 என்றாலும்
அது கூடப் பிடிக்கிறது !

அவ்வப்போது
அவள் அழுவது பிடிக்கிறது !

தாமதமாகி
 வெடுக்கென்று
அவள் எழுவது பிடிக்கிறது !

 அவள் பேசினாலும் பிடிக்கிறது !
 கோபத்தில் ஏசினாலும் பிடிக்கிறது !

அவள்,
கன்னத்தின் குழி பிடிக்கிறது !
கீழுதட்டின் சுழி பிடிக்கிறது !

அவள்
முத்தம் மறுப்பது பிடிகிறது !
 சத்தம் வெறுப்பது பிடிக்கறது !

அவளிடம்
 ஏதேதோ பிடிக்கிறது !
எல்லாமே பிடிக்கறது !

அவள்
தும்மல் பிடிக்கிறது !
 காதில் ஆடும்
கம்மல் பிடிக்கிறது !

அவள் படிக்கும் புத்தகம் பிடிக்கிறது !
புத்தகமாக அவளையே படிக்கப் பிடிக்கிறது !

அவளை எனக்குப் பிடிக்கிறது !
அவள் எது செய்தாலும் பிடிக்கிறது !

Comments

  1. அவள் உங்களைப் "பிடித்துப்" போனதால்
    நிச்சயம் எல்லாம் பிடிக்கத்தானே செய்யும்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...