Skip to main content
குறிப்பு : ஒரு பாமரனின் கண்ணோட்டத்தில் தான் இந்தக் கவிதை எழுதப்
பட்டுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அப்படி
ஏதும் இருந்தால் சுக்கிர பகவானே எனை மன்னித்து விடு !


காட்சிப் பிழைகள்



அது ஒரு
பேருந்து நிறுத்தம் !

பகல்,
பத்துமணி இருக்கும்
பத்தடி தூரத்தில்
அவள் வந்து நின்றாள் !

பருவம் தான்
உள்ளம் உதறவைக்கும்
உருவம் தான் !

நானும் அவளும்
தனித்திருந்தோம் !
சூழலுக்கு இதமாய்
இனித்திருந்தோம் !

வெட்ட வெளியை
வெறித்தபடி
வெறுமனே நின்றாள் !

நேர்ப்பார்வை
பார்ப்பவள்  - திரும்பியொரு
கூர்ப்பார்வை
பார்த்தாளென்றால்
வேர்வரை அது பாயுமே !
ஏக்க அலை ஓரளவாவது ஓயுமே !

பாரடி ! பாரடி !
பைங்கிளி ! பைங்கிளி !

இரு ! இரு !  - கொஞ்சம்
பொறு ! பொறு !
பார்ப்பாள் ! பார்ப்பாள் !
இளமைக்கு நீர்தன்னை
வார்ப்பாள் ! வார்ப்பாள் !

எனக்கு நானே
வேதம் ஓதினேன் !
பொறுமையிழந்து
உஸ்ஸ்  என்று
காற்று ஊதினேன் !

திருப்பதி பகவானே
திருப்பம் தா !
அவளுக்கு எனைப் பார்க்கும்
விருப்பம் தா !

திரும்பத் திரும்ப
வேண்டிக் கொண்டு
திரும்பிப் பார்த்தேன் !
திக் என்றது !

பத்து வினாடியில்
பத்தடி இடைவெளியை
சத்தமின்றி
நிறைத்திருந்தனர்
நாகரிக " நந்த கோபாலன்கள் ! "

அனைவரும்
இளைஞர்கள் !
அநியாயத்துக்கு
அழகர்கள் !

ஒருவன்
பாட்டுக் கேட்டான் !

ஒருவன்
பாக்கு மென்றான் !

ஒருவன்
புன்னகைத்தான் !

ஒருவன்
பல்லிளித்தான் !

அத்தனை
பிரயத்தனங்களையும்
அவர்கள் அவளை நோக்கியே
பிரயோகித்தனர் !

பளிச்சென்று
அவள் திரும்பினாள் !
பாக்கு மென்றவனைப்
பார்வையால் மென்றாள் !
புன்னகைக் குழந்தையை
இன்னுதட்டில் ஈன்றாள் !

அவள்,
தலை கோதினாள் !
உத்தேசமில்லாமல்
உதடு குவித்தாள் !
உடை சரிசெய்வது போல
உள்ளதைக் காட்டினாள் !

அவனவன்
சித்தம் கலங்கிப்
பித்தம் பிடித்துப்
பைத்தியமானோம் !
அவள் ஆசை நோய்க்கு
அப்போதைக்கு
வைத்தியமானோம் !

அப்போது,

எங்கிருந்தோ ஒரு
பைக்குக்காரன் வந்தான் !
பைங்கிளியை ஏற்றினான் !
பைபாஸ் நோக்கி
பையப் பையப் பறந்தான் !

காதலனோ ?
கொண்டவனோ ?
கண்டவனோ ?

நாங்கள்
இன்னமும் இருந்தோம் !

சொறிநாய் ஒன்று
சொய்ங் என்று
சிறுநீர் கழித்தது !

எனக்கான பேருந்து
எப்போதோ போய்விட்டது !

இன்னொன்று வர
இருபது நிமிடமாகும் !

அப்போது,

இன்னொருத்தி வந்தாள் !
சுடிதாரில் இருந்தாள் !
கழுத்தைச் சுற்றிய
துப்பட்டா
காற்றில்  படபடத்தது !
அவனவனுக்கு அங்கே
இதயம் தடதடத்தது !

சட்டென்று நான்
தெருவில் இறங்கினேன் !

வேகாத வெயிலில்
வேகவேகமாய்
வீடு நோக்கி
விறுவிறுவென்று நடந்தேன் !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர