Skip to main content
சில நிராகரிப்புகளும் ஒரு தெளிவும்

கடைசியில்
அவளும் என்னை
நிராகரித்து விட்டாள் !

மெலிந்த தேகம்
மாநிறம்
சராசரித் தோற்றம்
நடுத்தர வர்க்கம் !

பட்டம் ஒன்று
படித்திருந்தாள் !
கட்டம் கட்டிய
புகைப்படத்தில்
விட்டம் பார்த்து
சிரித்திருந்தாள் !

மூன்று நாட்களாய்
மனதளவில் அவளை
மனைவியாய்
வரித்திருந்தேன் !

இவள் தான்
இவள் தானென்று
இருநூறு முறையாவது
இதயத்திடம்
இறுமாந்திருப்பேன் !

நிறத்தைக் காரணங்காட்டி
நிராகரித்து விட்டாள் !

வாழ்த்துக்களோடு
விடை பெற்றுக் கொண்டாள் !

வாழ்த்துதல்
நிராகரிப்பின்
நாசுக்கான மொழி !

திருமணச் சந்தையில்
விலை போகாததென்
தலையெழுத்து தானென
அலை பாயும் மனதைத்
தேற்ற  முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன் !

மாலை வந்ததும்
ஆலையில் இருந்து
வேலை முடிந்து
சாலையில் நடந்தேன் !

சில காட்சிகள்
கண்ணில் தட்டுப்பட்டதும்
மனக்கவலை
சற்றே மட்டுப் பட்டது !

அவையாவன,

ஊன்று கோல் பற்றி
சாலை கடக்கக்
காத்திருந்தான்
ஊனமுற்ற ஒருவன் !

எப்போது வீடு போய்ச் சேர்வானோ ?

வாங்குவோர்கள்
வாங்குவார்களென
காய்கறிகளைக்
கூறு கட்டி வைத்திருக்கிறாள்
நூறு தொடும் கிழவியொருத்தி !

யாராவது வாங்குவார்களா ?

குப்பையை ஓயாமல்
கிளறிக் கிளறி
அலும்பு பண்ணுகிறது
அந்தத் தெருநாய்
எலும்புத் துண்டாவது கிடைக்குமென !

கிடைத்திருக்கிறதா ?

ஒவ்வொருவராக
மறுத்த பின்னும்
ஒவ்வொருவரிடமும்
மறுபடி மறுபடி
கையேந்துகிறான் அந்தக்
கிழட்டுப் பிச்சைக் காரன் !

இன்றிரவு சாப்பிடுவானா ?

அன்றாடம்
மேஜைக்கு மேஜை
மன்றாடுகிறான்
நடுத்தர உணவகமொன்றில் - அந்த
நடுத்தர வயதுக்காரன் !

அவன் மாதச் சம்பளம் எவ்வளவு ?

கக்கத்து வியர்வையோடு
கடந்து போகிறான்
பக்கத்து மாநிலத்தான் !

அவனுக்கும் குடும்பம் இருக்குமோ ?

இல்லம் வந்ததும்
உள்ளம் தெளிந்தது !
மனப் பள்ளம் ஒன்று
மண் மூடிப் போனது !

எதாவது செய்ய வேண்டும் !
எனக்கிருக்கும் நம்பிக்கை !
என்னால் இயன்ற சிரத்தை !

பேப்பரும்
பேனாவும் எடுத்து
பேசாமல் அமர்ந்து
ஸ்ரீ ராமஜயம் எழுத ஆரம்பித்தேன் !

என்னை
எனக்குக் காட்டிய
அவர்களுக்காகவும் !
அவர்களை
எனக்குக் காட்டிய
அவளுக்காகவும் !!!

Comments

  1. your creation is Simply awesome and fantabulous

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த தங்கள் பாராட்டிற்கு நன்றிகள் தோழி ! விரைவில் தமிழில் தாங்களும் படைப்புகள் வழங்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி !

      Delete
  2. பிரமாதம்! என்னை எனக்குக் காட்டிய அவர்களுககாகவும், அவர்களை எனக்குக் காட்டிய அவளுககாகவும்! இந்தக் கடைசி வரிகளில் மனதைத் திருடி விட்டது கவிதை! மனத்தை விட நிறமா பெரியது? சிந்திக்க வைத்த அருமையான கவிதை!

    ReplyDelete
  3. உயிரற்றது என்று அறியாமல்
    நிழலை நேசித்து நிஜத்தில் தொலைந்துபோகிறார்கள் பலர்
    நிதர்சனம் அறிகையில் வெறுத்துப்போகும் நிழலும் வாழும் வாழ்க்கையும்!
    அருமையான பதிவு!
    மனதின் உணர்வுகளை அழகாய் பதித்திருக்கிறீர்கள் சார்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர