Skip to main content
இது காதல் கடிதமும் கூட .................



என்னை பற்றிச் சொல்ல

என்ன இருக்கிறது ?

உன்னைப் பற்றிச் சொல்லத்தான்

உலகளவு உள்ளது !


முன்வரிசை முதல்வி நீ !

பின்வரிசைப் புறம்போக்கு நான் !


சிகரத்தின் அரசி நீ !

சாக்கடைப் புழு நான் !


கொம்புத்தேன் நீ !

முடவன் நான் !


அகிலத்தையே

விரல் நுனியில்

வைத்திருப்பவள் நீ !


அடுத்த தெருவில்

எத்தனை தாவணிகள்

என்பது வரையில் தான்

எனது பொது அறிவு !


அன்றைய பாடத்தை

அன்றே படித்தால் தான்

உனக்கு உறக்கம் வரும் !


அப்பனிடம் அன்றாடம்

திட்டு வாங்கினால்தான்

எனக்கு உறக்கம் வரும் !


ஒரு மாலைப் பொழுதிற்கு

நீ செலவிடும் தொகையை வைத்து

ஒரு மாதத்தையே

ஓட்டி விடுவேன் நான் !


வெள்ளிக்கிழமை என்றால்

விளக்கேற்ற கோவிலுக்குப்

போவாய் நீ !


நானோ

வீணா தியேட்டரில்

வீணான படம் பார்த்து

வீணாய்ப் போய்க்கொண்டிருப்பேன் !


நீ நடக்கும் போது

குனிந்தே செல்வாய் !

நாணம் என்று தான்

நான் நினைத்தேன் !

பிற்பாடுதான் தெரிந்தது

பாதையில் இருக்கும்

புழு பூச்சிகளின் மீது

பாதம் பட்டுவிடக்கூடாதென்ற

பரிதவிப்பு அது என்பது !


இங்கே ,

குவாட்டருக்கு

கோழி இல்லை என்றால்

கொலையே நடக்கும் !


காதலும் காமமும்

கணவனிடம் மட்டுமே என்று

கண்ணியமாகக்

காத்திருப்பவள் நீ !


நானோ ,

கண்களைக் கவருவது

கிழவி என்றாலும்

கற்பனையிலேயே

கற்பழித்து விடுவேன் !


ஒருமுறை

கரும்பலகையில்

கணிதம் போட்டுக் காட்டி

விளக்கிச் சொல்லி

வகுப்பெடுத்தாய் !

கணக்கோடு

எனக்கிருந்த பிணக்கு

அன்றோடு அகன்றது !


வகுப்பிற்குத் தாமதமாய்

வந்தேனென்று

வாத்தியார் ஒருவர்

வார்த்தையாலேயே

விளாசித் தள்ளினார் !

அனைவரும்

புன்னகையோடு பார்க்க

நீ மட்டும் என்னைப்

பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாய் !


ஒரு நாள்

என பிறந்த நாளை

எப்படியோ தெரிந்து கொண்டு

என்னிடம் இனிப்பு கேட்டாய் !


எனது சக்திக்கு

ஐந்து ரூபாய் தான் செலவழித்தேன் .

நன்றாக இருந்ததென்று

ஐநூறு முறை சொல்லியிருப்பாய் !


அதன் பிறகு

நாம் நண்பர்களானோம் !

நான் உன்னால்

திருத்தி எழுதப்பட்டேன் !


நீ படிக்கும் பாடங்களை

நானும் படிக்கிறேன்

என்பதாலேயே

படிப்பு மீது எனக்கு ஒரு

பிடிப்புத் தோன்றி விட்டது !


அடுத்த தேர்வு முடிவில்

முதலாவதாக நீ !

இரண்டாவதாக நான் !

" எல்லாம் உன்னால் தான் "

என்று நான் ,

தழுதழுத்துச் சொன்ன போது

உன் கண்கள்

எனக்காகக் கலங்கின


ஒருமுறை

நீ என் இல்லம் வந்து

சென்ற பிறகு

என் வீட்டில் எனக்கிருந்த

மரியாதை

ஒருபடி உயர்ந்து விட்டது !


அம்மா

அந்த வாரம் முழுக்க

உன்னைப் பற்றியே

பேசிக்கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்

அப்பாகூட

அதிர்ந்து பேசுவதில்லை !


பேர் சொல்லி

அழைக்கும் தங்கை

அண்ணா என்று

அன்போடு அழைக்கிறாள் !


ஏறெடுத்தும் பார்க்காத

ஆசிரியர் ஒருமுறை

எதிரே வந்த போது

எனது எதிர்காலம் குறித்து

அக்கறையாய் அறிவுரை கூறிச்சென்றார் !


வீட்டிலிருந்த போது

உன்னை என்

வாழ்க்கைத் துணையாய்

நினைத்துப் பார்த்தேன் .

போயிருந்த மின்சாரம்

பளிச்சென்று வந்தது !


உன்மீது

எனக்கிருந்த காதல்

முழுமையடைந்த கணம்

அதுதான் !


அதன் பிறகு

உன் கண்களை

என்னால் நேரடியாக

சந்திக்க முடியவில்லை !


இப்போதெல்லாம்

நிறைய தடுமாறுகிறேன் !


எனக்கு

அருகதை இருக்கிறதா என்பது

விடுகதையாய் இருக்கிறது !


இது தவறு என்று

நீ நினைத்தால்

மற்றவைகளில்

என்னைத் திருத்தியது போல

இதிலிருந்தும் என்னைத் திருத்து !


இது

காதல் கடிதம் அல்ல .

ஆனால்

காதல் கடிதமும் கூட !!!









Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர