Skip to main content
கவிதை செய்தல்




உயிரை உருக்கித்


தயாரிக்கும்


உணர்வின் இரசம் !




மூளையைப் பிழிதெடுக்கும்


மொழிச்சாறு !




உணவுண்ணும் போதும்


கனவுண்ணும் கைங்கர்யம் !




கற்பனையின் ,


கையில் அகப்பட்டது


கைவிட்டுப் போகாதிருக்க


கையோடு இருக்கும்


கைக்குறிப்பு !




குளியலறையிலும்


குதித்தாடும் சிந்தனைகள் !




பணிநடுவிலும்


அணிவகுக்கும் அழகுணர்ச்சி !




சக மனிதனின்


சூழல் திருடும் சாமார்த்தியம் !




உலகப் படைப்புகளில்


ஊழல் செய்யும் சாணக்கியம் !




ரகசியங்களை


ரசனைப் படுத்தும் ரசாயனம் !




பழமையைப் புறந்தள்ளும்


பௌதிகம் !




பிறப்பெடுத்த மலர்ச்சியிலும்


பிரசவித்த அயர்ச்சி !




புத்தி சொல்லும் கேனத்தனம்


புத்தி இழக்கும் ஞானத்தனம் !




உணர்ச்சிக்கு


வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான


புணர்ச்சிக்கு


படுக்கை விரிக்கும் மெத்தை !




எண்ணங்களின் வானவில்லுக்குப்


பேனாவால் மழை பொழிதல் !




உண்மையின் அந்தரங்கம் மறைக்க


பொய்யால் ஆடை நெய்தல் !




ஒரே ஒரு வார்த்தைக்கும்


வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !




பாலையில் சோலை தேடுதல்


சோலையில் பாலை தேடுதல் !




எண்ணங்களின் கோலத்திற்கு


வார்த்தைகளால் வண்ணமிடுதல் !




அறிவு என்னும் தறி கொண்டு


வரி எனும் நூல் கொண்டு


மொழிப்பெண்ணின் மானம் காக்க


சேலை நெய்யும் கலை !




கவியில் வாழாத நாட்கள் ,


புவியில் வாழாத நாட்கள் !




யாசித்ததை வாசித்து


வாசித்ததை நேசித்து ,


நேசித்ததை யோசித்து ,


யோசித்ததை வேசித்து


வேசித்ததை .....................


ச்சே ! இதற்கு மேல்


எதுகை எட்டவில்லை


விட்டு விடுங்கள் !




இதைப் பற்றி


சொல்லிக்கொண்டே போனால் ,


இது ஒரு


முடியாத முடிவிலி !




இதை ,


இப்போதைக்கு


நிறுத்தி வைக்கும் நான் ஒரு


" முடியாத " அறிவிலி !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர