Skip to main content
தேடிக்கொண்டே இருக்கிறேன் நான் ...................






அது ஒரு


திருமண நிகழ்ச்சி !




தோழிகளுடன்


துள்ளிக் கொண்டிருந்தாள் அவள் !




நண்பர்களுடன்


நகைத்துக் கொண்டிருந்தேன் நான் !




அவள் ,


மின்மினி போல


மின்னிக் கொண்டிருந்தாள் !




சிரித்தபடி


ஜொலித்துக் கொண்டிருந்தாள் !




அதற்குக் காரணம் ,


அவளது அங்கமா ? அல்லது ,


அவளணிந்த தங்கமா ?


பங்கப்பட்ட சிந்தையோடு


புறவுலகம் மறந்து


பரிதவித்தேன் நான் !




எங்கேயோ பார்ப்பது போல


எனைப் பார்த்தாள் !




வேண்டுமென்றே நான்


அவளைப் பார்த்தேன் !




அவள் ,


யாருக்கோ வீசிய புன்னகை ,


எனக்காக மட்டும் என்பது


எனக்கு மட்டும் புரிந்தது !




என்


காது மடல்


வெப்பமானது !




உணர்ச்சி பொங்கித்


தெப்பமானது !




அழகான


அவஸ்தைப் பந்து ஒன்று


அடிவயிற்றில் புகுந்து கொண்டது !




பெருவிரலால் கோலமிட்டு


அவள் நின்றிருந்த கோலம் ,


அங்கு அவளுக்கும் அதே நிலை


என்பதைக் கோடிட்டுக் காட்டியது !




அவள் ,


என் பார்வையின் தூண்டிலில்


சிக்கி நின்றாள் !




வெட்கத்தை விழுங்காமல்


விக்கி நின்றாள் !




அங்கே ,


மணமகன் பெண்ணுக்குத்


தாலி கட்டினான் !


இங்கே ,


விழிகளால் நாங்கள்


வேலி கட்டினோம் !




அடுத்ததாக ,


உணவுண்ணும் போது ,


எங்கிருந்தோ வந்தவள்


எனக்கெதிரே அமர்ந்தாள் !




அதிசயமாய்


அனைத்துமே எனக்குத் தித்தித்தது !


நண்பனிடம் நவின்ற போது


நாக்கில் தான் கோளாறு என்றான் !


அவனுக்குத் தெரியுமா ?


நங்கையை நினைத்த


என் மனதில் தான் கோளாறு என்பது ?




தாம்பூலம் தரிக்கும் போது


நானும் அவளும் தனித்திருந்தோம் !


வெற்றிலையின் சிவப்பை விட - அவள்


வெட்கத்தின் சிவப்பே


விஞ்சி நின்றது !


அவள் பெயரைக் கேட்கலாம்


என நினைத்தேன் .


அந்தோ !


தடுமாற்றத்தில்


தாய்மொழியை மறந்து விட்டேன் !


ஒருவழியாக மண்டைக்குள்


தேடிப்பிடித்துத் தெளிந்த போது - அவள்


ஓடிப் போய் விட்டிருந்தாள் !




மறுபடியும்


அவளைப் பார்த்த போது


மழலை ஒன்றை


மடியில் வைத்திருந்தாள் !


கொஞ்சம் கொஞ்சமாய்


எனைப் பார்த்துக்கொண்டே - குழைந்தையை


கொஞ்சிக் கொஞ்சிக் குதூகலித்தாள் !




ஏதோ ஒரு தருணத்தில் என்னைப்


பித்தமாய்ப் பார்த்துவிட்டு - மழலையை


மொத்தமாய் முத்தி எடுத்தாள் ! - நான்


சுத்தமாய் சூழல் மறந்தேன் !




புறப்படும் நேரம் ,


அனைவரிடமும் ,


வார்த்தையால் விடை பெற்றாள்


என்னிடம் மட்டும்


விழிகளால் விடை பெற்றாள் !




இனி எப்போது என


ஏக்கத்தைத் தேக்கி


அவளைப் பார்த்தேன் .


அந்தத் தேக்கம்


அவளது கண்களிலும்


தொக்கித் தெரிந்தது !




தோழிகளுடன் அவள்


திரும்பிச் சென்ற போது


திரும்பிப் பார்த்துத்


திரும்பவும் பார்த்தாள் !




நான் ,


உன்மத்தம் பிடித்தவனாய் - அவள்


உருவத்தை மட்டும்


உள்ளத்தில் பதித்தவனானேன் !


அவள் தந்த பிரிவென்னும்


பள்ளத்தில் குதித்தவனானேன் !




அதன் பிறகு


நான் அவளை ,


எங்கேயும் பார்க்கவில்லை !




அன்றிலிருந்து ,


திருமணம் என்று


எங்கு சென்றாலும்


தேவதை தென்படுவாளா என


தேடிக் கொண்டிருக்கிறேன் - நான்


தேடிக்கொண்டே இருக்கிறேன் !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர