Skip to main content

மழைக் கலைஞன்
















பரபரப்புக்கு மட்டுமே 
பஞ்சமே வராத 
அந்தப் பெருநகரத்துச் 
சாலையில் 
வான் பூக்களென 
பெய்து கொண்டிருந்தது 
மழை ! 

சாலையோரத்தில் 
அவன் 
சுருண்டு கிடந்தான் 
தன் 
ஒற்றைக் கையை 
மழையில் 
ஏந்தியபடி ! 

ஒரு 
நவீன மழை ஓவியம் 
போன்றுதான் 
அந்தக்காட்சி 
முதலில் 
மண்டைக்குள் பதிந்தது ! 

கொஞ்சமிருந்த 
சில்லறைகளில் 
துன்பச்சங்கீதம் 
இசைத்துக் கொண்டிருந்த 
அந்த 
ஒற்றைக் கையும் 
மழைக்குளிரில் 
நடுங்கிக்கொண்டிருந்த 
' என்புதோல் போர்த்த ' 
அந்த உடம்பும் 
அவனொரு 
ரத்தமும் சதையுமான 
இல்லையில்லை ............ 
ரத்தமும் எலும்புமான 
ஒரு உயிர் என்பதை 
புத்தியில் அறைந்தன ! 

பரிதாபப்பார்வையும் 
மிரட்சி நடையுமாகப் 
பெண்கள் அவனைக் 
கடந்து போயினர் ! 

குடைபிடித்து 
வந்த ஒருவன் 
அந்த 
ஒற்றைக் கைக்கு 
காசு போட்டுப்போனான் 
ஏற்கனவே 
அந்தக் கை 
இசைத்துக் கொண்டிருந்த 
துன்ப சங்கீதத்திற்கு 
மேலும் 
சுருதி சேர்ப்பது போல ! 

மழைக் கலைஞன் 
போலக் கிடந்த 
அவனை 
திகைப்போடு பார்த்து 
குரைத்துவிட்டு ஓடியது 
தெருநாய் ! 

மனசாட்சியை 
சமாதானப்படுத்துவதற்காகவே 
அவனைத் 
திரும்பித் திரும்பிப் 
பார்த்தபடி சென்றனர் 
ஒரு சிலர் ! 

அதற்கு 
அவசியமே இல்லாமல் 
அலுத்துக்கொண்டு சென்றனர் 
ஒரு சிலர் ! 

ஓடிப்போய் 
அவனையெழுப்பி 
பரிதாபம் கறப்பதற்காக 
அவன் செய்யும் 
விபரீத யுத்திக்கு 
சும்மாவேனும் 
நாலு திட்டுத்திட்டி 
" இனி இப்படிச் செய்யாதே " 
என அறிவுறுத்தி 
மழைக்கு இதமாய் 
அவனுக்கு 
ஒரு தேநீர் 
வாங்கிக்கொடுக்க................ 

தோன்றத்தான் 
தோன்றினாலும் 
எல்லாரையும் போலவே 
அசட்டுப்பார்வை 
பார்த்தபடி 
அவனைக் கடந்துவிடுகிறேன் 
நானும் !!! 

=========================== 

- குருச்சந்திரன்

Comments

  1. வணக்கம்

    அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...