Skip to main content

மழைக் கலைஞன்
















பரபரப்புக்கு மட்டுமே 
பஞ்சமே வராத 
அந்தப் பெருநகரத்துச் 
சாலையில் 
வான் பூக்களென 
பெய்து கொண்டிருந்தது 
மழை ! 

சாலையோரத்தில் 
அவன் 
சுருண்டு கிடந்தான் 
தன் 
ஒற்றைக் கையை 
மழையில் 
ஏந்தியபடி ! 

ஒரு 
நவீன மழை ஓவியம் 
போன்றுதான் 
அந்தக்காட்சி 
முதலில் 
மண்டைக்குள் பதிந்தது ! 

கொஞ்சமிருந்த 
சில்லறைகளில் 
துன்பச்சங்கீதம் 
இசைத்துக் கொண்டிருந்த 
அந்த 
ஒற்றைக் கையும் 
மழைக்குளிரில் 
நடுங்கிக்கொண்டிருந்த 
' என்புதோல் போர்த்த ' 
அந்த உடம்பும் 
அவனொரு 
ரத்தமும் சதையுமான 
இல்லையில்லை ............ 
ரத்தமும் எலும்புமான 
ஒரு உயிர் என்பதை 
புத்தியில் அறைந்தன ! 

பரிதாபப்பார்வையும் 
மிரட்சி நடையுமாகப் 
பெண்கள் அவனைக் 
கடந்து போயினர் ! 

குடைபிடித்து 
வந்த ஒருவன் 
அந்த 
ஒற்றைக் கைக்கு 
காசு போட்டுப்போனான் 
ஏற்கனவே 
அந்தக் கை 
இசைத்துக் கொண்டிருந்த 
துன்ப சங்கீதத்திற்கு 
மேலும் 
சுருதி சேர்ப்பது போல ! 

மழைக் கலைஞன் 
போலக் கிடந்த 
அவனை 
திகைப்போடு பார்த்து 
குரைத்துவிட்டு ஓடியது 
தெருநாய் ! 

மனசாட்சியை 
சமாதானப்படுத்துவதற்காகவே 
அவனைத் 
திரும்பித் திரும்பிப் 
பார்த்தபடி சென்றனர் 
ஒரு சிலர் ! 

அதற்கு 
அவசியமே இல்லாமல் 
அலுத்துக்கொண்டு சென்றனர் 
ஒரு சிலர் ! 

ஓடிப்போய் 
அவனையெழுப்பி 
பரிதாபம் கறப்பதற்காக 
அவன் செய்யும் 
விபரீத யுத்திக்கு 
சும்மாவேனும் 
நாலு திட்டுத்திட்டி 
" இனி இப்படிச் செய்யாதே " 
என அறிவுறுத்தி 
மழைக்கு இதமாய் 
அவனுக்கு 
ஒரு தேநீர் 
வாங்கிக்கொடுக்க................ 

தோன்றத்தான் 
தோன்றினாலும் 
எல்லாரையும் போலவே 
அசட்டுப்பார்வை 
பார்த்தபடி 
அவனைக் கடந்துவிடுகிறேன் 
நானும் !!! 

=========================== 

- குருச்சந்திரன்

Comments

  1. வணக்கம்

    அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர