இப்படிக்கு இல்லத்தரசி
எங்கள் வீட்டில்
மீனவ வேதனை
இதுவரையிலான எமது
கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி
செந்நீரால் சிவப்பாகும் !
கோடி முறை
பொங்கினாலும்
எமது கவலைகள்
அலையைப்போல
கடலுக்குள்ளேயே
முடங்கி விடுகின்றன !
கடல் எங்களின் தாய் !
தாயன்பில் ,
தாயின் மீதான உரிமையில்
எல்லைகளை
ஏற்கத் தெரியவில்லை
எங்களுக்கு !
கண்முன்னே
பிள்ளைகள் சாவதை
எந்தத் தாயும் தாங்க மாட்டாள் .
ஆகவே ,
எங்களை
வதைத்துக்கொல்லும்
வழக்கத்தை வேறெங்காவது
வைத்துக்கொள்ளுங்கள் !
தயவு செய்து கடலில் வேண்டாம் !
கண்டனங்கள் ,
இரங்கல்கள் ,
அறிக்கைகள் ,
சந்திப்புகள் ,
தீர்மானங்கள் ,
நிவாரணங்கள் ,
இவைகளின் மீதான
நம்பிக்கையும்
எங்களைப்போலவே
எங்களிடம் செத்து விட்டது !
ஆயிரம் இன்னல்கள்
வந்தாலும்
அன்னை மடியை
விட்டு விடாத
குழந்தைகள் நாங்கள் !
எங்களுக்கு வேறு
போக்கிடம் இல்லை !
இல்லத்தரசியின் இயல்பான குமுறல். அடுத்த தலைமுறை மகள் அப்படி இல்லை என்பதில் மகிழ்வே.... அப்புறம் உங்கள் பதிவுகள் படித்து நீண்ட நாளாகிவிட்டது
ReplyDeleteவாருங்கள் தோழி ! வணக்கம் ...........நலமா ? நாம் உரையாடி நீண்ட நாட்கள் ஆகின்றன என நினைக்கிறேன். முன்னைப்போல் வலைப்பூவில் சுறுசுறுப்பாக இயங்கத்தோன்றவில்லை ! தங்கள் வாசிப்புக்கும் கருத்தும் மழ்ச்சியை அளிக்கின்றன நன்றிகள் ..............
Delete