Skip to main content
இப்படிக்கு இல்லத்தரசி


எங்கள் வீட்டில்
என் கணவரின்
டாபர் மேன்
வள் என்கிறது !

மகனின்
அல்சேஷன்
லொள் என்கிறது !

மகளின்
பொமரேனியன்
கீச் என்கிறது !

எனது வெறுமை
மியாவ் என்கிறது !

======================================

என் கணவர்
தொலைகாட்சியில்
மூழ்கிக்கொண்டு !

மகன்
இணையத்தில்
மூழ்கிக்கொண்டு !

மகள்
அலைபேசியில்
மூழ்கிக்கொண்டு !

நான்
பாத்திரங்களில்
மூழ்கிக்கொண்டு !

======================================

என் கணவர்
வீட்டிலிருந்து
வங்கிக்குச் செல்கிறார் !

மகன்
வீட்டிலிருந்து
நிறுவனத்திற்குச் செல்கிறான் !

மகள்
வீட்டிலிருந்து
கல்லூரிக்குச் செல்கிறாள் !

நான்
வீட்டிலிருந்து
வீட்டிற்குச் செல்கிறேன் !

======================================

தன்னுடைய
வேஷ்டியை
என் கணவர்
வாங்கி விடுகிறார் !

தன்னுடைய
ஜீன்ஸை
என் மகன்
வாங்கி விடுகிறான் !

தன்னுடைய
சுடிதாரை
என் மகள்
வாங்கி விடுகிறாள் !

என்னுடைய
சேலையை
மூவரும்
வாங்கி விடுகின்றனர் !

======================================

வீட்டில்
என் கணவருக்கென்று
தனியறை !

மகனுக்கென்று
தனியறை !

மகளுக்கென்று
தனியறை !

எனக்கென்று,
அறிவிப்புப் பலகை !

======================================

புதிதாய்
நிலம் வாங்குவது
பற்றி
என் கணவர்,

என் மகனிடம்
கருத்துக் கேட்டார் !

என் மகளிடம்
கருத்துக் கேட்டார் !

என்னிடம்
காபி கேட்டார் !

======================================

என் கணவருக்கு
புல்லட் !

மகனுக்கு
பல்சர் !

மகளுக்கு
ஸ்கூட்டி !

எனக்கு
கால்கள் !

======================================

என் கணவர்
என் மகன்
என் மகள்
நான் .........
என்று
எங்கள் வீட்டில்
நான்கு பேர்கள் !
அவரவர்க்கு
அவரவர் உலகங்கள் !
ஆகமொத்தம்
மூன்று உலகங்கள் !



 

Comments

  1. இல்லத்தரசியின் இயல்பான குமுறல். அடுத்த தலைமுறை மகள் அப்படி இல்லை என்பதில் மகிழ்வே.... அப்புறம் உங்கள் பதிவுகள் படித்து நீண்ட நாளாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! வணக்கம் ...........நலமா ? நாம் உரையாடி நீண்ட நாட்கள் ஆகின்றன என நினைக்கிறேன். முன்னைப்போல் வலைப்பூவில் சுறுசுறுப்பாக இயங்கத்தோன்றவில்லை ! தங்கள் வாசிப்புக்கும் கருத்தும் மழ்ச்சியை அளிக்கின்றன நன்றிகள் ..............

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர