- Get link
- Other Apps
மீனவ வேதனை
இதுவரையிலான எமது
கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி
செந்நீரால் சிவப்பாகும் !
கோடி முறை
பொங்கினாலும்
எமது கவலைகள்
அலையைப்போல
கடலுக்குள்ளேயே
முடங்கி விடுகின்றன !
கடல் எங்களின் தாய் !
தாயன்பில் ,
தாயின் மீதான உரிமையில்
எல்லைகளை
ஏற்கத் தெரியவில்லை
எங்களுக்கு !
கண்முன்னே
பிள்ளைகள் சாவதை
எந்தத் தாயும் தாங்க மாட்டாள் .
ஆகவே ,
எங்களை
வதைத்துக்கொல்லும்
வழக்கத்தை வேறெங்காவது
வைத்துக்கொள்ளுங்கள் !
தயவு செய்து கடலில் வேண்டாம் !
கண்டனங்கள் ,
இரங்கல்கள் ,
அறிக்கைகள் ,
சந்திப்புகள் ,
தீர்மானங்கள் ,
நிவாரணங்கள் ,
இவைகளின் மீதான
நம்பிக்கையும்
எங்களைப்போலவே
எங்களிடம் செத்து விட்டது !
ஆயிரம் இன்னல்கள்
வந்தாலும்
அன்னை மடியை
விட்டு விடாத
குழந்தைகள் நாங்கள் !
எங்களுக்கு வேறு
போக்கிடம் இல்லை !
ரஸித்......தேன் ;)
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஐயா !
Deleteரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteஅளித்தேன் என் கருத்தில் இதை!
தடக்கி விழுந்தாலும் தக்கதோர் வேளை
மடக்கிடக் காத்திருக்கும் மாண்பு!
கருத்துக்கு நன்றி தோழி !
Delete