Skip to main content
திருடன்



அவன் தொழில்
திருட்டு !
அவன் பிடிப்பது
சுருட்டு !
அவன் மனமெங்கும்
ஒரே
இருட்டு !

மாதக்கடைசியில்
அவனுக்கும் வரும்
பஞ்சம் !
முதல் தேதியென்றால்
மல்லிகைப்பூவிலிருக்கும்
மஞ்சம் !
காசில்லாத போது
காவல் நிலையம்தான்
அவனுக்குத்
தஞ்சம் !

அடர்த்தியானது
அவன்
புருவம் !
அழுக்கானது
அவன்
உருவம் !

அவன்,
மாலையானதும்
மதுவை உள்ளே
ஊற்றி விடுவான் !
வெளியில் வந்தால்
ஒரு நூறையாவது
தேற்றிவிடுவான் !
தன் இருப்பிடத்தை
அடிக்கடி அவன்
மாற்றிவிடுவான் !

அனாதைதான்
அவன்
ஆதியிலிருந்து !
ஒட்டிக்கொண்டது
இத்தொழில்
பாதியிலிருந்து !

அவனது
பரிதாபத்தோற்றம்
பிறர் உள்ளத்தை
வருடிவிடும் !
சுவடு தெரியாமல்
அவன் கை
திருடிவிடும் !

ஒருநாள்
அவனுக்கு ...........

மதுவருந்தாமல்
நாக்கு
கரித்தது !
காசில்லாமல்
கை
அரித்தது !

ஒரு
பொதுவிடத்தில்
மக்கள் சிலர்
கூடியிருந்தனர் !
திறக்காத
உதட்டால்
தம் உள்ளத்தை
மூடியிருந்தனர் !

அவ்விடத்தை
இவன்
அடைந்தான் !
பலரையும்
பார்வையால்
கடைந்தான் !

ஒரு
வயதானவன்
பையொன்றை
வைத்திருந்தான்
கக்கத்தில் !
போய்
நின்றுகொண்டான்
இவன்
அவன்
பக்கத்தில் !

கெட்டியாகப்
பிடித்திருந்தான்
கிழவன்
பணத்தை !
உணர்ந்து கொண்டான்
திருடன்
அதன்
மணத்தை !

காத்துக்கொண்டிருந்தான்
இவன் !
பேருந்தை
எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்
அவன் !

ஒரே ஒருநொடி,
கிழவன்
சற்று
அசந்தான் !
மறுநொடியே
பை ஆனது
திருடன்
வசந்தான் !

அதிர்ச்சியில் 
கிழவன்
தன்னிலை
மறந்து விட்டான் !
பறிகொடுத்த
தவிப்பில்
பாதி
இறந்து விட்டான் !
பிடுங்கியவனோ
பையோடு
பறந்து விட்டான் !

சூழல்
தீப்பற்றிக்கொண்டது
கபகபவென்று !
ஓடினர்
திருடன் பின்னால்
சிலர்
தபதபவென்று !

வெறிகொண்டு ஓடினான்
திருடன் !

அந்தப்பை
திருடன்
கையைச்
சுட்டது !
கிழவனின்
வறியதோற்றம்
ஏனோ மனதைத்
தொட்டது !
பிடித்திருந்த
ஆசைப்பேய்
உடனே அவனை
விட்டது !

யாருக்குத்தெரியும் !

மருந்தாகலாம்
அந்தப்பணம் !

புத்தகமாகலாம்
அந்தப்பணம் !

தாலியாகலாம்
அந்தப்பணம் !

கடன் அடைக்கலாம்
அந்தப்பணம் !

வீடு திருப்பலாம்
அந்தப்பணம் !

இருப்பவனை
விடக்கூடாது !
இல்லாதவனைத்
தொடக்கூடாது !

பாடிக்காட் முனீஸ்வரா..................
சுரண்டமாட்டேன்
இல்லாதவனின்
உப்பை !
செய்யமாட்டேன்
இனி
இந்தத்
தப்பை !

ஓடிய திருடன்
கீழே விழுந்தான்
இல்லாத கல்லொன்று
செயற்கையாகத்
தடுக்கி !
பையை
நழுவ விட்டான்
பின் வந்தவர்களைத்
தன்முதுகின் மீது
அடுக்கி !

ஒலித்தது
இடி !
விழுந்தது
அடி !

ஒப்படைத்தது
கூட்டம்.....................
கிழவனிடம்
பையை !
காவலனிடம்
திருடனின்
கையை !

வழிந்தது
திருடனின்
கண்ணில்
கண்ணீர் !
அது
அவன் மனதின்
ஆழத்திலிருந்த
கையளவு
தண்ணீர் !


Comments

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை கவர்ந்துள்ளது வாழ்த்துக்கள்

    ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது இறுதி வெற்றியாளர்களின் விபரம் வாருங்கள்.... வாருங்கள் அன்புடன்
    http://2008rupan.wordpress.com/2013/11/13/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-2/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆறுதல் பரிசாவது பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் உள்ளது என்பதை இப்போட்டி உணர்த்தியிருக்கிறது. வாசிப்பவர்களுக்கு சுவை கொடுப்பதையும் தாண்டி ஒரு எழுத்தாளனுக்கு இருக்கும் பொறுப்புணர்வை இத்தருணம் எனக்கு உணர்த்துகிறது !

      Delete
  2. உளம் நிறைத்த உன்னதக் கவிவரிகள்!..

    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தோழி ! தங்கள் உண்மையான பின்னூட்டத்திற்கு நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர