Skip to main content
அவளை எனக்குப் பிடிக்கிறது !


அவளை
எனக்குப் பிடிக்கிறது !
அவள் 
எது செய்தாலும் பிடிக்கிறது !

குறுஞ்செய்தியில்
குலவும் போது
அவள்
ஒற்றை எழுத்தும்
 பிடிக்கிறது !

பேசும் போது
காற்று கலைக்கும்
 அவள்
கற்றைக் கூந்தல்
பிடிக்கிறது !

வெட்கத்தில்
 சிவக்கும்
கன்னம் பிடிக்கிறது !

கோபத்தில்
சிவக்கும்
மூக்கு பிடிக்கிறது !

பின்னலிடும்
 பார்வை பிடிக்கிறது !

 பின்னங்கழுத்து
வேர்வை  பிடிக்கிறது !

அவளை
 சும்மாவேனும் பிடிக்கிறது !
 சும்மா சும்மா பிடிக்கிறது !

காற்றில் பறக்கும்
அவள் துப்பட்டா
பிடிக்கிறது !

 என் பார்வையுணர்ந்து
அவள் அப்பட்டா
 என்றாலும்
அது கூடப் பிடிக்கிறது !

அவ்வப்போது
அவள் அழுவது பிடிக்கிறது !

தாமதமாகி
 வெடுக்கென்று
அவள் எழுவது பிடிக்கிறது !

 அவள் பேசினாலும் பிடிக்கிறது !
 கோபத்தில் ஏசினாலும் பிடிக்கிறது !

அவள்,
கன்னத்தின் குழி பிடிக்கிறது !
கீழுதட்டின் சுழி பிடிக்கிறது !

அவள்
முத்தம் மறுப்பது பிடிகிறது !
 சத்தம் வெறுப்பது பிடிக்கறது !

அவளிடம்
 ஏதேதோ பிடிக்கிறது !
எல்லாமே பிடிக்கறது !

அவள்
தும்மல் பிடிக்கிறது !
 காதில் ஆடும்
கம்மல் பிடிக்கிறது !

அவள் படிக்கும் புத்தகம் பிடிக்கிறது !
புத்தகமாக அவளையே படிக்கப் பிடிக்கிறது !

அவளை எனக்குப் பிடிக்கிறது !
அவள் எது செய்தாலும் பிடிக்கிறது !

Comments

  1. அவள் உங்களைப் "பிடித்துப்" போனதால்
    நிச்சயம் எல்லாம் பிடிக்கத்தானே செய்யும்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர