Skip to main content
மாந்தி - நாவல்




சக்கரவர்த்தி கோபிநாத் , தனது தோட்டத்தில் . தனது ஆஸ்தான சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , அன்றைய தினசரியின் நாலாவது பக்கத்தை நாலாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தார் . வாழ்க்கை அவருக்கு , எதோ அவார்ட் வாங்கின ஒரு திரைப்படத்தைப் போல பிரேம் பை பிரேமாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது . அறுபது வயதாகிவிட்ட அவர் இனிமேல் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லை . மனைவி போய்ச்சேர்ந்து விட்டாள் . ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டாள் . இங்கு அவரும் , நாளுக்கு இரண்டு வேளை " வந்து போகும் " ஒரு வேலைக்காரியும் மட்டும் ! சக்கரவர்த்தி கோபிநாத் அந்த வேலைக்காரியை , " கரெக்ட் " செய்யலாமென்று கூட நினைத்தார் . அப்படி " கரெக்ட் " செய்யும் முயற்சியில் ஓரளவாவது பொழுது போகுமே என்பது அவர் எண்ணம் . ராணிக்கு வயது ஒரு நாற்பது நாற்பத்தி ஐந்து இருக்கும் . சும்மா சொல்லக்கூடாது , சும்மா கும்மென்று இருப்பாள் . ஒரு நாள் , அவர் அவளிடம் , " ராணி , கை காலெல்லாம் வலிக்குது . கொஞ்சம் அமுக்கி விடறியா ? " என்றார் . கேட்டுவிட்டு அவளிடம் அவர் எதிர்பார்த்தது ஒரு வித மருட்சி கலந்த தயக்கத்தை . ஆனால் அவளோ , இதற்காகவே காத்திருந்தது போல முந்தானையைக் கீழே சரிய விட்டு , " என்னங்க ஐயா , பண்ணும் . " என்றாள் . சக்கரவர்த்தி கோபிநாத்துக்கு இந்தமாதிரி ," ஈசி அவைலபிள் " ஆக இருக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை . அவரைபொருத்தவரை பெண் என்பவள் , ஒரு பட்டாம்பூச்சி போல இருக்க வேண்டும் . நம்மையே சுற்றி சுற்றி வரவேண்டும் . ஆனால் பிடிக்க எத்தனித்தால் பிடிகொடுக்காமல் நழுவ வேண்டும் . அப்படிப்பட்ட பத்தினிகளைத்தான் கோபிநாத் எதிர்பார்க்கிறார் . அவருக்கு வாய்த்த மனைவி அவர் எதிர்பார்த்த பத்தினித்தன்மையோடு இருந்தாள். போறாத காலம் . போய்ச்சேர்ந்து விட்டாள் . கோபிநாத் தினம் தினம் எழுகிறார் . காலையில் காலையுணவு தின்கிறார் . மதியத்தில் மதிய உணவு தின்கிறார் . இரவில் இரவு உணவு தின்கிறார் . இந்தத் " தின்னுதல் " களுக்கு இடையே அவருடைய காலத்தை நிரப்புபவை , தினசரிகள் , தொ . கா . தொ , ( தொலைக்காட்சித் தொடர்கள் ) , தோட்டம் , சாய்வு நாற்காலி , வானத்தை வெறிக்கும் சூனியம் . அவ்வளவுதான் . தினம் தினம் அவருக்கு அப்படித்தான் கழிகிறது . இருந்தாலும் அவருக்கு வாழுதலின் மீதிருக்கும் இச்சை குறையவில்லை . காலை உணவில் அவருக்கு மெதுமெதுவென்ற இட்டிலிகளோடு கூடவே " ஒனத்தியான " புதினா சட்டினி இல்லையென்றால் கடுப்பாகி விடுவார் . மதியத்தில் அவருக்கு மீன் வறுவல் இருந்தே ஆக வேண்டும் . இல்லையென்றால் ராணியை வறுத்து எடுத்து விடுவார் . இரவில் மெது மெது தோசைக்கு , தக்காளிச்சட்டினி . தேங்காய்ச் சட்டினி இருந்தாலும் தேவலாம் . வயது ஆக ஆக மனிதன் சாவின் மீதிருக்கும் பயத்தை , ஏதாவது புலன் இன்பத்தை நாடுவதன் மூலம் குறைக்க முயல்கிறான் . ஆனால் ஒவ்வொரு புலனின்ப நுகர்ச்சிக்குப் பிறகும் அந்த பயம் அவனிடம் பன்மடங்காகப் பெருகிவிடுகிறது . சக்கரவர்த்தி கோபிநாத்துக்கு இப்போதெல்லாம் தத்துவார்த்தமான சிந்தனைகள் வர ஆரம்பித்திருக்கின்றன . " சாவைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் " , " சாவிற்குப் பிறகு மனித உயிர் அடையும் நிலை " என்பது போன்ற புத்தகங்கள் அவருடைய மேசையை அலங்கரிக்கின்றன .

சக்கரவர்த்தி கோபிநாத் , அந்த தினசரியை சலிப்போடு அந்த சிறிய மேசையின் போது விட்டெறிந்தார் . ஹ்ஹ்ஹா என்று சோம்பல் முறித்தார் . அப்போது ஒரு பட்டாம்பூச்சி , மஞ்சள் கலரில் சிவப்புப் புள்ளி போட்ட பட்டாம்பூச்சி ஒன்று அவரை சுற்றி சுற்றி வந்தது . கோபிநாத்துக்கு சட்டென்று எதோ ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது . இந்தப்பட்டாம்பூச்சிகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன . கிளி , புறா , சிட்டுக்குருவி , முதலிய உயிர்கள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன . அந்தப் பட்டாம்பூச்சி விளையாட்டுக் காட்டுவது போல படபடத்த படி மாயாஜாலம் காட்டியது . அந்தப் பட்டாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத் , சட்டென்று பக்கத்து வீட்டு மாடியைப் பார்த்தார் . பிறகு பட்டாம்பூச்சியைப் பார்த்தார் . மாடியைப் பார்த்தார் . எதற்கு இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை . அனிச்சை செயல் போல அவராலேயே கட்டுப்படுத்த முடியாத எதோ ஒரு நிகழ்வுக்கு தான் உட்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார் . சட்டென்று அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது . அவரைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த அந்தப் பட்டாம்பூச்சி அவரது வலது கையில் வந்து அமர்ந்தால் , அந்த மாடி வீட்டுக்கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் வெளிவரப்போகிறாள் . வந்து அவரைப்பார்த்துப் புன்னகைக்கப் போகிறாள் என்பதுதான் அது . ச்சே என்ன பைத்தியகாரத்தனமான சிந்தனை இது என்று அவருக்கே தோன்றிய சமயம் அது நிகழ்ந்தது . பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி சட்டென்று அவரது வலது கையில் வந்து அமர்ந்தது . இறக்கையை விரித்து விரித்து மூடிவிட்டு பறந்து சென்றது . கோபிநாத் , அந்த மாடியைப் பார்த்தார் . திடுக்கிட்டார் . அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் . தலை முடியைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள் . நைட்டி அணிந்திருந்தாள் . கோபிநாத் அவளைச் சற்று உற்றுப்பார்த்து விட்டு அவள் நைட்டி " மட்டுமே " அணிந்திருப்பதை உறுதி செய்தபோது , அந்தப் பெண் அவரைப்பார்த்துப் புன்னகைத்தாள் . அவளுக்கு இருந்தால் முப்பது முப்பத்தி இரண்டு வயது இருக்கும் . தனது " தரிசனத்தை " அவருக்குக் காட்டிவிட்ட திருப்தியோடு அந்தப்பெண் உள்ளே போய்விட்டாள் . கோபிநாத்துக்குத்தான் படபட வென்று வந்தது . நார்மலாக முயன்றார் . சட்டென்று வானத்தைப் பார்த்தார் . இப்போது ஒரு விமானம் அவரைக் கடந்து சென்றால் , அமெரிக்காவில் இருக்கும் அவர் மகள் தொலைபேசியில் அழைத்துப் பேசப்போகிறாள் என்று அவருக்குத் தோன்றியது . ச்சே நான் ஏன் பைத்தியகாரத்தனமாக நினைக்கிறேன் . என்று நினைத்தார் . எதேச்சையாக மீண்டும் வானத்தைப் பார்த்தார் . அவரது உடம்பு சிலிர்த்தது . ஒரு விமானம் , உய்ய் என்ற சத்தத்தோடு பறந்து சென்றது . அவரது அலைபேசி , அந்தப் புத்தக மேசையின் மீது இருந்தது . நகம் கடித்தபடி அதையே பார்த்தார் . திடீரென்று அது கத்தியது . கோபிநாத் பாய்ந்து அதை எடுத்தார் . மதுமிதா . அவரது மகள் .அமெரிக்க மகள் . அழைக்கிறாள் . மேலே விமானம் பறந்து சென்றது . மகள் அழைக்கிறாள் , பட்டாம்பூச்சி கையில் அமர்ந்தது , மாடியில் அந்தப்பெண் தரிசனம் தந்தாள் . என்ன நடக்கிறது இங்கே . திடீரென்று , அலைபேசியை தன்னையறியாமலேயே " ஆன் " செய்துவிட்டு எதுவுமே பேசாமல் பிரமை பிடித்தது போல தான் அமர்ந்திருப்பதை உணர்ந்தார் . அங்கே மதுமிதா , அப்பா அப்பா என்னாச்சுப்பா என்று கத்திக்கொண்டிருந்தாள் . கோபிநாத் , " ஹலோ " என்றார் . அவரது குரலில் இலேசான நடுக்கம் இருந்தது . " என்னப்பா ...... ஆன் பண்ணிட்டு ஏன் பேசலை .. என்னாச்சு உங்களுக்கு ? " என்றால் மதுமிதா . இங்கே இவர் , " அது வந்து ...... ஒண்ணும் இல்லைம்மா .......... " என்று தடுமாறுகிறார் . " என்னப்பா .... குரல் ஒரு மாதிரி இருக்குது ........ " என்று மதுமிதா பதற , அடுத்த நொடியே கோபிநாத்துக்கு கண்கள் இருண்டன . பேச்சு வரவில்லை , சட்டென்று அவர் மயங்கிக் கீழே சரிந்தார் .........................


தொடரும்

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர