Skip to main content
மாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு




முன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது " பொறம்போக்கு நிலமாக " , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா ? வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன்று . பௌர்ணமிப் பளிங்கு மேனி . செதுக்கி வைத்தது போன்ற பாகங்கள் . அடிவேர்வரை ஊடுருவும் " இன்டெலிஜென்ட் பார்வை " . பணக்கார பெற்றோர் . பங்களா . கார் ... வேலையாட்கள் ....... இன்னபிற இன்னபிற .......

மதிய உணவு இடைவேளையில் மோகன் , ஹரிப்ரியாவை நெருங்கினான் . மோகன் , அந்தக்கூட்டத்திலேயே அழகன் . வெள்ளைத்தோல் . சுருள் முடி . ஹரிப்ரியாவுக்கு ஈடான பணக்காரன் .

" ஹாய் ஹரி " ........
" கால் மீ ஹரிப்ரியா " .........
" ப்ரியமானவங்களை சுருக்கமா கூப்பிடறது தானே , அந்தப்பிரியத்துக்கே அழகு "
" ஓ ........மோகன் ....... நிறைய தமிழ் படம் பார்ப்பே போலிருக்கு ...............கூடவே சில்லியான கவிதைகளையும் படிப்பியோ .."
" கவிதைகளை நான் படிப்பதில்லை .....வெறுமனே பார்ப்பேன் ........ இப்போது கூட நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ............"
" மோகன் , நீ இந்த மாதிரி பேசறது ..........எரிச்சலா இருக்கு ........ப்ளீஸ் .........."
" நான் உன்னையே சுத்தி சுத்தி வர்றது ஏன்னு புரியலையா ஹரிப்ரியா ? "
" ம்ம்ம் புரியுது ......... ஒரு சண்டே வாயேன் ....... எங்கனா ரூம் போடுவோம் . மறக்காம் காண்டமையும் எடுத்துக்கோ ! "
மோகன் பேயறையப்பட்டான் ...................... அதற்கு மேல் எதோ பேச முற்பட்டவனை ஹரிப்ரியா முறைத்துத துரத்தினாள் . அவளுக்கு மோகனைப் பிடிப்பதில்லை . எப்போது பார்த்தாலும் அவனைச்சுற்றிப் பெண்கள் கூட்டம் . அவன் " குதி " என்றால் ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள ஜூனியர் பெண்கள் தயாராக இருக்கிறார்கள் . ஹரிப்ரியாவைப் பொறுத்தவரை அவன் ஒரு எச்சம் . எத்தனையோ பெண்கள் ரசித்து ருசித்த மிச்சம் . அவள் விடு விடு வென நடந்தாள் ............... ஒரு மரத்தடியில் ரங்கராஜன் தென்பட்டான் . ரங்கராஜன் சகல விஷயங்களிலும் சாதாரணன் . ஹரிப்ரியா , அவளாக அவனருகே சென்றாள் ......

" என்ன ரங்கராஜன் ..... இங்கே தனியா ............... "
" ஒரே போர் ....... அதான் இந்த மரத்தடிக்கு வந்திட்டேன் ......... புத்தருக்குக் கிடைச்ச மாதிரி எனக்கும் ஞானம் , கீனம் கிடைச்சாலும் கிடைக்கலாம் "
" எனக்கும் போர்தான் . ஏண்டா இந்த ஹிஸ்டரியை எடுத்தோமேன்னு இருக்குது ........"
" நாங்க இல்ல அந்த மாதிரி சொல்லணும் .......... எம் . ஏ ஹிஸ்டரி . உங்களை மாதிரி பணக்காரங்களுக்கு வேணா இது கெட்டிப்படிப்பு .............எங்களைப்பொறுத்தவரை இது வேலை கொடுக்காத வெட்டிப்படிப்பு ."
" ஹல்லோ .......... நேத்து என்ன டி . ராஜேந்தர் படம் பார்த்தீயா .........கெட்டி , வெட்டினுட்டு....
" தட் ஈஸ் ரியல் ஹரிப்ரியா .......... இதை வைச்சுகிட்டு என்ன வேலை தேடமுடியும் . தனியார் பள்ளிக்கூடத்துல மட்டுந்தான் வேலை கொடுப்பான் ..... அங்கயும் வகுப்பு எடுக்க விடமாட்டானுங்க ......... பண்டல் பண்டலா பத்தாவது , ப்ளஸ் டூ பேப்பரை திருத்த விட்டுடுவானுங்க ........... " என்று ரங்கராஜன் கோபமாக தரையில் இருந்த ஒரு பெரிய கல்லை எட்டி உதைத்தான் . அது பெயர்ந்தது . உதைத்த வேகத்தில் செருப்பு அணிந்திருந்த ரங்கராஜனின் கால் பெருவிரல் கிழிந்து அவனது சூடான இளஞ்சூடு ரத்தம் குபு குபுவெனப்பொங்கி கல் பெயர்ந்த இடத்தை நனைத்தது . அதைப்பார்த்த ஹரிப்ரியாவுக்கு படபடவென வந்தது ..... " ஓ கடவுளே என்ன இது ? " என்றாள் . ரங்கராஜன் துணுக்குற்றான் . ஹரிப்ரியாவின் பதற்றத்தைப் பார்த்து அல்ல . அவன் கல்லை உதைத்த போது ஏற்பட்ட அந்த " ணங் " என்ற ஒலியை உணர்ந்து . ரங்கராஜன் கல் பெயர்ந்த இடத்தைப் பார்த்தான் . அரை அடி ஆழத்திற்குக் குழி உண்டாகியிருந்தது . அந்தக் குழிக்கு உள்ளே புள்ளி புள்ளியாக ஏதோ மின்னியது . தடக்கென மண்டியிட்டு ரங்கராஜன் அந்தக் குழிக்குள்ளே கைவிட்டு அந்த மின்னும் புள்ளிகள் உள்ள பகுதியைத் தடவினான் . இதற்குள் ஹரிப்ரியா அவளது கைகுட்டையால் ரங்கராஜனின் கால் பெருவிரலைக் கட்ட முயற்சிக்க , அவன் அவளைத்தடுத்து அந்த குழியை நோண்டி சதுரமான ஒன்றை எடுத்து , " செப்புத்தகடு " என்றான் . கல் பெயர்க்கப்பட்ட விசையில் அந்த செப்புத்தகட்டின் பாகங்கள் தேய்க்கப்பட்டு மின்னியிருக்கின்றன என்பதை ரங்கராஜன் தெரிந்து கொண்டான் . ஹரிப்ரியாவின் கைக்குட்டையைப் பிடுங்கி , அந்தத்தகட்டைத் துடைத்தான் . தமிழில் செய்யுள் போல ஏதோ எழுதப்பட்டிருந்தது . அந்த செய்யுளுக்குத் தலைப்பாக " புதையல் ரகசியம் " என்று எழுதப்பட்டிருந்தது . ரங்கராஜன் , அந்த செப்புத்தகட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இருந்த பகுதிக்கு விரைந்தான் . பின்னாலிருந்து ஹரிப்ரியா அவனைக் கூப்பிடுவதைக் கண்டுகொள்ளவில்லை .

ஹரிப்ரியா கிட்டத்தட்ட ஓடினாள் . மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்க ரங்கராஜனை நெருங்கினாள் . அவன் கையைப்பற்றிக்கொண்டு " ரங்கராஜன் , என்ன பண்ணப்போறே " என்றாள் . அவன் , " இது ஒரு புதையல் ரகசியம் அடங்கின செப்புத்தகடு . இதை அந்த தொல்பொருள்ஆய்வாளர்கள் கிட்ட கொடுக்கப்போறேன் . " என்றபடி மேலும் வேக வேகமாக சென்றான் . அந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு டென்ட் போல அமைத்துத் தங்கியிருந்தார்கள் . உள்ளே அவர்கள் சிரித்தபடி ஏதோ பேசிகொண்டிருந்தார்கள் . வெளியே வந்து நின்ற ரங்கராஜனுக்கும் , ஹரிப்ரியாவுக்கும் அவர்கள் பேசியது தெளிவாகக் கேட்டது .

" அந்தப் புதையலைப் பத்தின குறிப்பு மட்டும் இந்த இடத்துல கிடைச்சுட்டா ..............நம்மள யாரும் அசைச்சுக்க முடியாது "..............
" அது ஒண்ணும் அவ்வளவு சுலபமில்லை .......புதையல்ன்னா சும்மா இல்லை . ரத்தக் காவு , உயிர்பலி கொடுக்கணும் "
" இங்க வேலை செய்யற கூலி ஆட்கள்ல எவனையாவது கொடுத்துற வேண்டியது தான் "

இந்த சம்பாஷணையைக் கேட்டதும் , ஹரிப்ரியா , வெடுக்கென ரங்கராஜனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ...............


தொடரும்

"





Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர