Skip to main content
உன் மீது சில புகார்கள்


அடியே ,
காதலைக் கைது
செய்த நான் - இப்போது
காதலின் கைதியாகி நிற்கிறேன் !


தங்கத்தால்
செய்யப்பட்டதைத் தவிர
இந்த சிறைக்கம்பிகளுக்கு
வேறு சிறப்புகள் எதுவுமில்லை !


சிறகடித்து
சந்தோஷமாகப்
பறந்து கொண்டிருந்தேனடி !
எனது
இறக்கைகளை வெட்டிவிட்டு
கால்களைக் கட்டிவிட்டாய் !
பறக்கவும் முடியாமல்
நடக்கவும் முடியாமல் நான்
நொந்து நொந்து
நூலாகிறேன் !
வெந்து வெந்து
வீணாகிறேன் !


விடுதியில் இருக்கிறாய் நீ !
வீட்டில் இருக்கிறேன் நான் !
சாலையில் நடப்பதைப்போன்றது
உன் நிலை !
கம்பி மீது நடப்பதைப் போன்றது
என் நிலை !
உனக்காக நான்
விழுந்து எழுந்து
எழுந்து விழுந்து
விழுப்புண்கள் பெற்றாலும்
விருப்பத்தோடு உன்
விருப்பம் நிறைவேற்ற
விழைகிறேன் !
நீயோ
உனக்கான சாலையில்
எனக்காக நடப்பதற்கே
சிரமாயிருக்கிறது என்கிறாய் !
எந்த ஊர் நியாயம் இது ?


பக்கத்து வீட்டுக்காரனைப்
பலநாட்களாகத் தெரியும் !
ஈன்றெடுத்த
பச்சிளம் குழந்தையைப்
பத்து நாட்களாகத்தான் தெரியும் !
அதனால்
பக்கத்து வீட்டுக்காரனே
பெரிதும் உயர்ந்தவன் என்று
பைத்தியகாரன் கூடப்
பிதற்ற மாட்டான் !
உனது
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக
பச்சிளம் குழந்தை என்னைப்
பரிதவிக்க விடாதே !


காதலிக்க
என்னைத் தேர்ந்தெடுத்தது
தவறு என்று
நினைக்கிறாய் தானே !
நானும் உன்னை
அப்படித்தான் நினைக்கிறேன் !
ஆனால் ,
நான் உன்னையோ
நீ என்னையா
தேர்ந்தெடுக்க வில்லை
காதல் தான் நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது !
அதை முதலில்
தெரிந்து கொள் !


நீ உனது
பிற ஆண் நண்பர்களோடு
பேசுவதைத் தவறு என்று
சொல்ல மாட்டேன் !
ஆனால்
இந்த முனையில் நான்
காத்துக் காத்துத்
தவித்துக் கொண்டிருக்க ,
அந்த முனையில் நீ
வேறு எதோ ஒரு முனையோடு
முனைப்பாக
வறுத்துக் கொண்டிருப்பதைத்தான்
பொறுத்துக் கொள்ளமுடியவில்லை
என்னால் !


உன்னோடு
நடக்கையில்
எதிரில் அழகான பெண்
வந்தால் ,
நான் தலைகுனிந்து
கொள்வதையும் ,
அழகான ஆண்
எவனாவது வந்தால்
நீ பார்க்கிறாயா என்று
பார்க்காமல்
பெருந்தன்மையோடு நான் வருவதையும்
பார்த்து என்னை
கேணப்பயல் என்று மட்டும்
நினைத்து விடாதே !


முன்பெல்லாம்
வணக்கம் சொல்லி
ஆரம்பிக்கும் நம் பேச்சு ,
வளர்ந்து வளர்ந்து
வான் முட்டும் !
இப்போதோ வெறும்
வணக்கத்தோடு
முடித்துக் கொள்வதே உனக்கு
இணக்கமாய் இருக்கிறது !

எனது இனிமைகள்
அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்து விட்டு
சக்கையான என்னைத்
தூக்கியெறிய நீ நினைத்தால்
மன்னித்து விடு ,
நாம் இதுவரை செய்ததற்குப்
பெயர் காதல் இல்லை !!!







Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர