Skip to main content
தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள்

வாரத்தில் ஓர்நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்

தொலைக்காட்சியைத்

துறந்திடுங்கள் !


மாலைபோட்டு
மாலை உங்களை
வரவேற்கும் !


அன்றைக்கென்று
உங்கள் மனைவி
உங்களுக்கு
அழகாகத் தெரிவாள் !


கூடம் சொன்ன
பாடம் படிக்கும் மகளின்
சந்தேகம் தெளிவித்து
சந்தோசம் கொள்வீர்கள் !


சும்மாவேனும்
அம்மாவிடம்
அன்போடு பேசுவீர்கள் !


சர்க்கரை நோய்பற்றி
அக்கறையாய்
அப்பாவிடம் விசாரிப்பீர்கள் !


இல்லம் தேடிவந்த
நண்பரிடம்
நல்லவிதமாய்
நலம் விசாரித்து - நட்பை மேலும்
பலம் பெறச்செய்வீர்கள் !


அண்டை
அயலூரில் வாழும்
தங்கை தமக்கையிடம்
பாசம் ஊட்டி
மாமன் மச்சானிடம்
நேசம் காட்டி
உறவுப்பாலத்தை
உறுதிப்படுத்துவீர்கள் !


அந்த வாரத்தின்
வாரஇதழை
வேறு எதைப்பற்றியும்
யோசிக்காமல்
வாசித்து முடிப்பீர்கள் !


மாத இறுதியில்
குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தோடு போய்வரும்
இனிய திட்டமொன்று உங்கள்
இதயத்தில் உதயமாகும் !


அன்பு மனைவி
ஆசையோடு வார்த்துத்தரும்
தோசையில் அன்பானது
முறுகலாய் வெளிப்பட்டு
முறுவலிக்கும் !


இரவு உணவு முடித்து
தெருக்கோடிக் கடைவரை
நடை பயின்று வருவீர்கள் !


அன்றைக்கென்று
நிலவைப்பார்த்து
உங்களுக்கு ஒரு
கவிதை தோன்றும் !


நோட்குறிப்பு போல
நாட்குறிப்பு எழுதாமல்
அந்த நாளுக்கான பக்கத்தை
பூரிப்போடு பூர்த்தி செய்வீர்கள் !


உங்கள் மனதில்
குமைந்து கொண்டிருக்கும்
நீண்ட நாள்
சுமைகளை ,
இமை மூடும் முன்
இல்லாளிடம்
இறக்கி வைப்பீர்கள் !


உங்கள் மீது
இரக்கம் கொண்ட
உறக்கம் ,
உங்களைத் தழுவ
விரைந்தோடி வரும் !


ஒரு
முழுநாளை
முழுதாக முடித்த
முழுமையுணர்வில்
முழுமையாக
மூழ்கிப்போவீர்கள் !


ஆகவே ,
வாரத்தில் ஓர் நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !!!


Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...