தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள்
வாரத்தில் ஓர்நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !
மாலைபோட்டு
மாலை உங்களை
வரவேற்கும் !
அன்றைக்கென்று
உங்கள் மனைவி
உங்களுக்கு
அழகாகத் தெரிவாள் !
கூடம் சொன்ன
பாடம் படிக்கும் மகளின்
சந்தேகம் தெளிவித்து
சந்தோசம் கொள்வீர்கள் !
சும்மாவேனும்
அம்மாவிடம்
அன்போடு பேசுவீர்கள் !
சர்க்கரை நோய்பற்றி
அக்கறையாய்
அப்பாவிடம் விசாரிப்பீர்கள் !
இல்லம் தேடிவந்த
நண்பரிடம்
நல்லவிதமாய்
நலம் விசாரித்து - நட்பை மேலும்
பலம் பெறச்செய்வீர்கள் !
அண்டை
அயலூரில் வாழும்
தங்கை தமக்கையிடம்
பாசம் ஊட்டி
மாமன் மச்சானிடம்
நேசம் காட்டி
உறவுப்பாலத்தை
உறுதிப்படுத்துவீர்கள் !
அந்த வாரத்தின்
வாரஇதழை
வேறு எதைப்பற்றியும்
யோசிக்காமல்
வாசித்து முடிப்பீர்கள் !
மாத இறுதியில்
குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தோடு போய்வரும்
இனிய திட்டமொன்று உங்கள்
இதயத்தில் உதயமாகும் !
அன்பு மனைவி
ஆசையோடு வார்த்துத்தரும்
தோசையில் அன்பானது
முறுகலாய் வெளிப்பட்டு
முறுவலிக்கும் !
இரவு உணவு முடித்து
தெருக்கோடிக் கடைவரை
நடை பயின்று வருவீர்கள் !
அன்றைக்கென்று
நிலவைப்பார்த்து
உங்களுக்கு ஒரு
கவிதை தோன்றும் !
நோட்குறிப்பு போல
நாட்குறிப்பு எழுதாமல்
அந்த நாளுக்கான பக்கத்தை
பூரிப்போடு பூர்த்தி செய்வீர்கள் !
உங்கள் மனதில்
குமைந்து கொண்டிருக்கும்
நீண்ட நாள்
சுமைகளை ,
இமை மூடும் முன்
இல்லாளிடம்
இறக்கி வைப்பீர்கள் !
உங்கள் மீது
இரக்கம் கொண்ட
உறக்கம் ,
உங்களைத் தழுவ
விரைந்தோடி வரும் !
ஒரு
முழுநாளை
முழுதாக முடித்த
முழுமையுணர்வில்
முழுமையாக
மூழ்கிப்போவீர்கள் !
ஆகவே ,
வாரத்தில் ஓர் நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !!!
வாரத்தில் ஓர்நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !
மாலைபோட்டு
மாலை உங்களை
வரவேற்கும் !
அன்றைக்கென்று
உங்கள் மனைவி
உங்களுக்கு
அழகாகத் தெரிவாள் !
கூடம் சொன்ன
பாடம் படிக்கும் மகளின்
சந்தேகம் தெளிவித்து
சந்தோசம் கொள்வீர்கள் !
சும்மாவேனும்
அம்மாவிடம்
அன்போடு பேசுவீர்கள் !
சர்க்கரை நோய்பற்றி
அக்கறையாய்
அப்பாவிடம் விசாரிப்பீர்கள் !
இல்லம் தேடிவந்த
நண்பரிடம்
நல்லவிதமாய்
நலம் விசாரித்து - நட்பை மேலும்
பலம் பெறச்செய்வீர்கள் !
அண்டை
அயலூரில் வாழும்
தங்கை தமக்கையிடம்
பாசம் ஊட்டி
மாமன் மச்சானிடம்
நேசம் காட்டி
உறவுப்பாலத்தை
உறுதிப்படுத்துவீர்கள் !
அந்த வாரத்தின்
வாரஇதழை
வேறு எதைப்பற்றியும்
யோசிக்காமல்
வாசித்து முடிப்பீர்கள் !
மாத இறுதியில்
குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தோடு போய்வரும்
இனிய திட்டமொன்று உங்கள்
இதயத்தில் உதயமாகும் !
அன்பு மனைவி
ஆசையோடு வார்த்துத்தரும்
தோசையில் அன்பானது
முறுகலாய் வெளிப்பட்டு
முறுவலிக்கும் !
இரவு உணவு முடித்து
தெருக்கோடிக் கடைவரை
நடை பயின்று வருவீர்கள் !
அன்றைக்கென்று
நிலவைப்பார்த்து
உங்களுக்கு ஒரு
கவிதை தோன்றும் !
நோட்குறிப்பு போல
நாட்குறிப்பு எழுதாமல்
அந்த நாளுக்கான பக்கத்தை
பூரிப்போடு பூர்த்தி செய்வீர்கள் !
உங்கள் மனதில்
குமைந்து கொண்டிருக்கும்
நீண்ட நாள்
சுமைகளை ,
இமை மூடும் முன்
இல்லாளிடம்
இறக்கி வைப்பீர்கள் !
உங்கள் மீது
இரக்கம் கொண்ட
உறக்கம் ,
உங்களைத் தழுவ
விரைந்தோடி வரும் !
ஒரு
முழுநாளை
முழுதாக முடித்த
முழுமையுணர்வில்
முழுமையாக
மூழ்கிப்போவீர்கள் !
ஆகவே ,
வாரத்தில் ஓர் நாள்
ஏதேனும் ஒரு கிழமையில்
தொலைக்காட்சியைத்
துறந்திடுங்கள் !!!
Comments
Post a Comment